search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BPL"

    • குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரங்பூர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்காளதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்

    குல்னா டைகர்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ரங்பூர் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ரங்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி இம்ரான் தாஹிர் சுழலில் 141 ரன்னில் சுருண்டது. இதனால் ரங்பூர் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் குறைந்த டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் இம்ரான் தாஹிர் 4-வது இடத்தில் உள்ளார். 44-வது வயதில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

    குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பிராவோ (624 விக்கெட்), ரஷித் கான் (556 விக்கெட்), சுனில் நரேன் (532) ஆகியோருக்கு அடுத்தப்படியாக இம்ராம் தாஹிர் உள்ளார். 

    • வங்கதேச கிரிக்கெட்டில் முறைகேடு நடப்பதால் தான் அவர் இப்படி தட்டி கேட்பதாக சகீப் அல் ஹசன் ரசிகர்கள் அப்போது விளக்கம் அளித்தனர்.
    • கடந்த சீசனில் தவறான முடிவு வழங்கிய நடுவரிடம் சண்டை போட்டு பிறகு ஸ்டம்பை உதைத்து சகீப் அல் ஹசன் அராஜகத்தில் ஈடுபட்டார்.

    டாக்கா:

    வங்கதேச கிரிக்கெட் வீரர் சகீப் அல் ஹசன் களத்தில் நடுவருடன் மோதுவதை ஒரு பொழுது போக்கு பழக்கமாக செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிபிஎல் குறித்து குற்றஞ்சாட்டினார்.

    இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய சகீப் அல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த பாரிஷல் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் சகீப் அல் ஹசன் 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார்.

    இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19 ஓவர் முடிவிலேயே வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சகீப் அல் ஹசன் பேட்டிங் செய்யும் போது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டத்தின் 15.4 வது ஓவரில் ரிஜூர் வீசிய பந்து சகீப் அல் ஹசன் தலைக்கு மேல் சென்றது. இதற்கு நியாயப்படி ஓயிடு வழங்கி இருக்க வேண்டும்.

    ஆனால், நடுவர் இதனை ஒரு ஓவருக்கு ஒரு ஷாட் பால் என்ற கணக்கில் சேர்த்து விட்டார். இதனால் கடுப்பான சகீப் அல் ஹசன், நடுவரை பார்த்து கத்தினார். பிறகு நடுவரிடம் அடிப்பது போல் நடந்து சென்று எதற்கு ஓயிடு பால் தரவில்லை என்று சண்டையிட்டார். அதற்கு நடுவரும், சக வீரரும் ஷகிபுல் ஹசனை சமாளித்து அனுப்பி வைத்தனர்.

    சகீப் அல் ஹசன் கோபப்படுவது இது ஒன்றும் புதிது அல்ல. கடந்த சீசனில் தவறான முடிவு வழங்கிய நடுவரிடம் சண்டை போட்டு பிறகு ஸ்டம்பை உதைத்து சகீப் அல் ஹசன் அராஜகத்தில் ஈடுபட்டார். பிறகு தன்னுடைய செயலுக்கு சகீப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டார்.

    வங்கதேச கிரிக்கெட்டில் முறைகேடு நடப்பதால் தான் அவர் இப்படி தட்டி கேட்பதாக சகீப் அல் ஹசன் ரசிகர்கள் அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக் தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு எடுத்துள்ளது. #PAK #PCB
    டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டாக மாற்றமைடைந்து, தற்போது டி20 கிரிக்கெட்டாக விளையாடப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரை தொடங்கியது. இதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.

    இதனால் சர்வதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். ஐபிஎல்-ஐ தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தின.

    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்பதில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பல்வேறு டி20 லீக்கில் ஆடுகிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டும். தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.



    புதிய மாற்றத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக்கில்தான் விளையாட முடியும். அதற்கு மேல் விளையாட முடியாது.

    பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவார்கள். இதை தவிர்த்து மேலும் என்றில்தான விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் தொழில்முறையாக சம்பளம் குறைவு. இந்நிலையில் இந்த கட்டுப்பட்டால் மேலும் அவர்களது வருமானம் தடைபெற வாய்ப்புள்ளது.

    வேலைப்பளு அதிகம், காயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    ×