என் மலர்
நீங்கள் தேடியது "foot ball"
- சர்வதேச போட்டியில் முதன்முறையாக ஓமனை இந்தியா வீழ்த்தியுள்ளது.
- பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமன் முதல் இரண்டு மற்றும் கடைசி வாய்ப்பை நழுவவிட்டது.
CAFA Nations Cup கால்பந்து தொடர் தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் தாங்கள் இடம் பிடித்த குரூப்பில் 2ஆம் இடம் பிடித்ததால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் பொனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
மேற்கு ஆசிய நாடுகளில் அதிக தரவரிசையில் உள்ள நாட்டை முதன்முறையாக இந்தியா வீழ்த்தியுள்ளது. மேலும், சர்வதேச கால்பந்து போட்டியில் முதன்முறையாக ஓமனை வீழ்த்தியுள்ளது.
பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமன் முதல் இரண்டு வாய்ப்புகளையும் நழுவ விட்டது. அதன்பின் கடைசி வாய்ப்பை குர்ப்ரீதி சிங் சந்து சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் லாலியான்ஜுயாலா சங்க்டே, ராகுல் பெகே, ஜிதின் எம்.எஸ். ஆகியோர் பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்தனர். அன்வர் அலி, உதண்டா சிங் ஆகியோர் மிஸ் செய்தனர்.
ஓமனுக்கு எதிராக இந்தியா கடந்த 2000-த்தில் இருந்து 9 முறை மோதியுள்ளது. இதில் 6 முறை தோல்வியடைந்துள்ளது. 2021 மார்ச் மாதம் இரண்டு அணிகளும் கடைசியாக மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
- 2016ஆம் ஆண்டு 135ஆம் இடத்தை பிடித்திருந்திருந்தது.
- அதன்பின் தற்போது 133ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பிபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 6 இடங்கள் சரிந்து 133ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கான மோசமான தரவரிசையை பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது. ஜூன் 4ஆம் தேதி தாய்லாந்திற்கான எதிரான சர்வதேச நட்பு போட்டியில் 0-2 எனத் தோல்வியடைந்தது.
இதனால் பிபா தரவரிசையில் 133ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது மிகவும் மோசமான இடத்திற்கு சரிந்துள்ளது. அப்போது 135ஆவது இடத்தில் இருந்தது.
இந்தியா கடந்த 1996ஆம் ஆண்டு 94ஆவது இடத்தை பிடித்திருந்தது. அதுதான் இந்தியாவின் சிறந்த தரவரிசையாகும்.
- பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் டிக்கெட் விற்பனையை விட அதிகம்.
9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 20ம் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கிய நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
இது, கடந்த 2019ம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனையைவிட இது அதிகமாகும்.
- என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை.
- நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன்.
இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவானாக சுனில் சேத்ரி விளங்கி வருகிறார். இவர் திடீரென நேற்று சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
39 வயதான இவர் இந்திய அணிக்காக 19 வருடங்கள் விளையாடி 150 போட்டிகளில் 94 கோல்கள் அடித்துள்ளார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரரும் ஆவார். ஜூன் 6-ந்தேதி இந்திய அணி குவைத் அணிக்கெதிராக விளையாடுகிறது. இதுதான் அவருடைய கடைசி போட்டியாகும்.
இந்த நிலையில் ஓய்வு முடிவை எடுத்தது குறித்து சுனில் சேத்ரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை. நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன். கடினமாக பயிற்சி மேற்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை. இந்த முடிவு மனநிலை அம்சங்கள் தொடர்பாக வந்தது.
ஓய்வு முடிவு உள்ளுணர்வாக வந்தது. ஒரு வருடம் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடுவேன். அதன்பின் எவ்வளவு காலம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியாது. அதன்பின் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.
பயிற்சியாளராக ஆவது குறித்து நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அது குறித்து எனது ஓய்வு காலத்தில் யோசிப்பேன். தற்போது என்னுடைய எண்ணத்தில் அது இல்லை.
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரை தவிர்த்து, விராட் கோலியிடம் எனது ஓய்வு குறித்து தெரிவித்தேன். அவர் எனக்கு மிகவம் நெருக்கமானவர். அவர் என்னை புரிந்து கொள்கிறார்.
இவ்வாறு சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).

நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.






