search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா"

    • வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
    • தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.

    இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

    • கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெற உள்ளது. இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் இருந்து இரும்பு வெடிகுண்டுகள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு இன்று காலை ஒரு பெண் புல் வெட்டச் சென்றுள்ளார். அப்போது அங்கு 2 வாளிகளில் 9 இரும்பு வெடிகுண்டுகள் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர். அவை இரும்பு குண்டுகள் என தெரியவந்தது.

    அதனை அங்கு பதுக்கியது யார்? எதற்காக பதுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் பானூர் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
    • இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது

    தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.

    இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கண்ணில் பிளாஸ்திரியுடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் பாஜக தொண்டர் சனல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, நான் தான் தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் காவல்துறை சனலுக்கு ஜாமீன் வழங்கியது.

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
    • கேரளாவில் சில நாட்களில் கேரளாவில் வாக்குப்பதிவு.

    நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 13 ஆம் தேதி நாட்டின் 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழக - கேரள எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு கேரளா மாநில எல்லைகளில் சோதனை செய்யப்படுகிறது.

    • திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
    • பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.

    சென்னை:

    முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி தமிழகத்தில் தேர்தல் முடிந்ததால் கேரளாவில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    தலைநகரான திருவனந்தபுரத்தில் தமிழர்கள், மலையாளிகள், வேறு மாநிலத்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள்.

    எனவே விஜயதரணி தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பேசி வாக்கு சேகரிக்கிறார். ஏற்கனவே விஜயதரணி எம்.எல்.ஏ.வாக இருந்த விளவங்கோடு தொகுதியை அடுத்து திருவனந்தபுரம் இருப்பதால் தமிழ், மலையாளம் கலந்து பேசும் மக்கள் பெருமளவு அவர்கள் மத்தியில் இரு மொழிகளையும் கலந்து பேசுகிறார்.

    3 முறை தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்ததாகவும் கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்றும் எனவே பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.

    • கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை அனுமதி கோரியிருந்தது
    • இந்த யாத்திரை தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது

    கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது.

    தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடையும் இந்த யாத்திரைக்கு சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது.

    தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ராம நவமி யாத்திரைக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? இதனால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை ராம நவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

    இதையடுத்து ராம நவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, அதுகுறித்து 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    • குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும்.
    • தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    கேரள மாநிலத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெப்ப நிலை இந்த ஆண்டு 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதைவிட அதிகம்.

    பள்ளி நேரங்களில் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு "வாட்டர் பெல்" என்ற முறை கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அமலானது.

    இந்த புதிய முறையின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், தினமும் காலை 10.30 மணி மற்றும் மதியம் 2.30 மணி ஆகிய 2 முறை குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக மணி அடிக்கப்படும். குழந்தைகள் தண்ணீர் குடிக்க 5 நிமிடம் இடைவேளை வழங்கப்படும். 

    அந்த நேரத்தில் குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிக்கவேண்டும். குழந்தைகள் அனைவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த வாட்டர் பெல் முறையின் மூலம், வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள் காத்துக் கொள்ள முடியும்.

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் கூட இன்னும் ஆரம்பிக்காத நிலையில், வெயில் இப்போதே ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

    இதனால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, தினமும் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும்.

    அதனால், கேரளாவின் "வாட்டர் பெல்" நடைமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த்
    • அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார் பிரஷாந்த். பின் பல முன்னணி படங்களில் நடித்து இருக்கிறார்.

    தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படத்திலும் நடித்து இருக்கிறார். தற்பொழுது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரஷாந்திற்கு 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் குழு சார்பாக வாழ்த்தி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
    • நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது

    தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

    அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    • இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்

    ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் GOAT என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    இந்த படத்தில் பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தபடத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது.

    இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றார்.அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.

    இநிலையில் தற்போது விஜய்யின் 'கோட்' படப்பிடிப்புகேரளாவில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர்.ரசிகர்கள் மத்தியில் விஜய் மலையாளத்தில் பேசி அசத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.




     

    இந்நிலையில் விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

    மேலும் அந்த குழந்தையிடம் 'அங்கிளுக்கு' ஒரு 'உம்மா' கொடுங்க என நடிகர் விஜய் கேட்பது போன்ற காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து உள்ளது.

    கேரள குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சிய போது அந்த குழந்தையின் அம்மா, " அங்கிளுக்கு உம்மா ஒன்னு கொடு" என சொன்னதும் அந்த குழந்தை க்யூட்டாக விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது
    • நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

    நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.

    அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.

    விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.
    • 2 பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    அடிமாலி மாங்குளம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

    இதில், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்டு குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

    ×