என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய ரெயிலுக்கு மானாமதுரை, சிவகங்கையில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் எதிர்ப்பு
Byமாலை மலர்27 May 2022 9:21 AM GMT (Updated: 27 May 2022 9:21 AM GMT)
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி வரைசெல்லும் புதிய ரெயிலுக்கு மானாமதுரை, சிவகங்கையில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி என 2 பெரிய ஜங்ஷன் ரெயில் நிலையங்கள் இருந்தன. அப்போதைய மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் ஏராளமான ரெயில் வசதிகள் இருந்தது.
நாடுமுழுவதும் அகலரெயில் பாதைகளாக மாற்றம் செய்து தற்போது குறைந்த அளவு ரெயில்கள் செல்கின்றது. தற்போது காரைக்குடி -மானாமதுரை வரை மின் பாதை பணிகளும் நடைபெற்றுவருகிறது.
காமராஜர் முதல்வராக இருந்தபோது சென்னை செல்ல தென்மாவட்ட பயணிகளுக்கு பயணநேரம்குறையும் வகையில் விருதுநகர்- மானாமதுரை இடையே ரெயில் பாதை அமைத்து சென்னைக்கு இணைப்பு ரெயிலாக மானாமதுரை வரை சென்று வந்தது. தற்போது அந்த ரெயில் பாதையில் செங்கோட்டை-சென்னை வரை வாரந்திர ரெயில் மட்டுமே செல்கிறது. தினசரி ரெயில் சேவை கிடையாது.
தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை வாரம்ஒருநாள் செல்லும் சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. அந்த ரெயில் வருகிற ஜூன் 4-ந் தேதி எர்ணாகுளத்தில்இருந்து மதியம் புறப்பட்டு மறுநாள் காலை வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் வரை செல்கிறது.
இதற்காக ரெயில் நின்று செல்லும் ரெயில் நிலையங்கள்பட்டியலை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமான ஜங்ஷன் ரெயில் நிலையங்கள் தென்காசி, மானாமதுரை நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது. இதுதவிர விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர்,சிவகங்கை மாவட்ட தலைநகர் சிவகங்கை ஆகிய ஊர்களில் ரெயில் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முக்கியமான புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மானாமதுரை, சிவகங்கை ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. ராமநாதபுரம் பகுதியில் இருந்தும் ரெயில்நிலையங்கள் இல்லாத ஊர்களான கமுதி,முதுகுளத்தூர், இளையான்குடி, பார்த்திபனூர், வீரசோழன், அபிராமம் போன்ற ஊர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் சென்னை மற்றும் பிறமாநிலங்களுக்கு செல்ல மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர்.
தற்போது புதிதாக விடப்பட்டுள்ள வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை, சிவகங்கையில் நின்று செல்ல மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மீட்டர்கேஜ் பாதை இருந்தபோது கொல்லத்தில் இருந்து நாகூர் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி தினமும் இருந்தது. அகலரெயில்பாதை வந்த பிறகு ரெயில்களில் தண்ணீர் நிரப்பும் வசதி கொண்ட மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்காமல் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகளை புறக்கணித்து செல்வதா? என பயணிகள் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி ஓய்வுபெற்ற ரெயில் என்ஜின் ஓட்டுநர், மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் தலைவர் ராஜாராம் கூறுகையில், தமிழகத்தில் அதிக அளவில் ரெயில்சேவைவசதி குறைக்கப்பட்டு உள்ளது.
வட இந்தியாவில் அதிக அளவில் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் வசதிகள் தினசரி உள்ளது. ஆனால் தமிழகத்தில் போதுமான ரெயில் சேவைகள் இல்லை. கொரோனாகாலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில் சேவை பலநகரங்களில் தொடங்கப்படவில்லை.
தற்போது விடப்பட்ட புதிய ரெயில் கேராளாவில் அதிக ஊர்களில் நின்று செல்லும் வகையிலும், தமிழகத்தில் முக்கியமான ரெயில் நிலையங்களான தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களில் ரெயில் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதனால் சிவகங்கை மாவட்ட ரெயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இது குறித்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் புதிய ரெயிலை தென்காசி, மானாமதுரை, சிவகங்கை ஊர்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து ரெயில்வே வாரிய துறைக்கும் மனுக்கள் அனுப்பி வைக்க பட்டு உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X