search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Human Sacrifice"

    • போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர்.
    • நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தர்மபுரி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.

    பத்மா, நீண்ட நாட்களாக உறவினர்களுடன் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கேரளா சென்று அவரை தேடினர். இதில் பத்மா, அதே பகுதியை சேர்ந்த முகமது ஷபி என்பவரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

    போலீசார் முகமது ஷபியை பிடித்து விசாரித்தனர். இதில் முகமது ஷபியும், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த மந்திரவாதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சேர்ந்து நரபலி கொடுத்தது தெரியவந்தது. பத்மாவுடன் கொச்சி பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கைதான 3 பேரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் ஆதாரங்களை திரட்டினர். மேலும் அவர்கள் வீட்டின் பிரிட்ஜ்ஜில் இருந்த மனித மாமிசத்தையும் கைப்பற்றினர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில் கைதான 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். முதற்கட்டமாக தர்மபுரி பெண் பத்மா நரபலி வழக்கில் 200 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து உள்ளனர். பெரும்பாவூர் கோர்ட்டில் இன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அதில் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை போலீசார் இணைத்துள்ளனர். நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர். முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் ரோஸ்லி வழக்கில் போலீசார் 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.

    • பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
    • புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பத்மா. சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார்.

    2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் இருவரும் நரபலிக்காக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

    அவர்கள் அங்கு சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகள் முடிந்து இன்று பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

    • கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார்.
    • மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, மற்றும் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் லைலாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து லைலாவின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்ததும் போலீசாரின் விசாரணை தீவிரம் அடையும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி நரபலி கொடுக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, இலத்தூரை சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து பத்மாவின் உடல் பாகங்களை கைப்பற்றினர். 56 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கைதான 3 பேரும் தங்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்ததும் போலீசாரின் விசாரணை தீவிரம் அடையும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

    அதன்பின்பு இந்த வழக்கில் மந்திரவாதிக்கு உதவிய நபர்கள் யார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய தகவல்களும் வெளியாகும் என தெரிகிறது. இதனால் இனி வரும் நாட்களில் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
    • ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது ஷபி கைது செய்யப்பட்டார். மந்திரவாதியான இவருடன் தொடர்பில் இருந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    பகவல் சிங்குடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட முகமது ஷபி, அவரை செல்வந்தர் ஆக்குவேன் எனக்கூறியே பெண்களை கடத்தி நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

    நரபலி கொடுத்த பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி அவற்றை சமைத்து சாப்பிட்டதுடன், மீதி இருக்கும் மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்கவும் கூறியுள்ளார்.

    முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

    பகவல் சிங் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து நரமாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நரமாமிசத்தை பதுக்கி வைத்தது ஏன்? என்று கேட்டபோது, அதனை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று முகமது ஷபி கூறியதாக கைதான லைலா போலீசாரிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார். அந்த பெண்ணின் மாமிசத்தை ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறினார்.

    பெங்களூருவில் இருந்து வந்த மந்திரவாதிகள் அதனை வாங்கி சென்றதாகவும் தெரிவித்தார். இதனை நம்பித்தான் நாங்கள் வீட்டில் நரமாமிசத்தை பாதுகாப்பாக வைத்தோம், என்றார்.

    இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் கூறும்போது, நரமாமிசம் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. பகவல் சிங், லைலாவை ஏமாற்றவே முகமது ஷபி இப்படி கூறியுள்ளார்.

    என்றாலும் நாங்கள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களையே சேகரித்து வருகிறோம். இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விரைவில் அதனை கோர்ட்டில் சமர்ப்பிப்போம், என்றார்.

    • முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.
    • முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தமிழக பெண் பத்மா உள்பட 2 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் பத்மாவின் செல்போனில் கடைசியாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்தான் பத்மாவை கொலை செய்தது தெரியவந்தது. எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அவரது பெயர் முகமது ஷபி.

    மந்திரவாதியான இவர் பத்தினம்திட்டா, இலத்தூரில் மசாஜ் வைத்தியம் செய்து வந்த பகவல் சிங், அவரது மனைவி லைலாவுடன் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 3 பேரையும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பு கடத்தியதாகவும், அவரை இலத்தூர் வீட்டிற்கு அழைத்து வந்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்ததாக தெரிவித்தனர்.

    பின்னர் பத்மாவை கடந்த மாதம் இதுபோல கடத்தி வந்து அவரையும் நரபலி கொடுத்ததாக கூறினர். அடுத்தடுத்து 2 பெண்கள் நரபலி கொடுத்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை 12 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரிடமும் தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்ட தகவல் வெளியானது. மேலும் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து அதனை பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறினர்.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் இலத்தூர் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பிரிட்ஜில் இருந்த நரமாமிசத்தை கைப்பற்றினர். அவற்றை ஆய்வுக்கு அனுப்பிய போலீசார், டி.என்.ஏ. பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தனர்.

    இதற்கிடையே இலத்தூர் பகவல் சிங் வீட்டிற்கு முகமது ஷபி சில மாணவிகளை அழைத்து வந்தது தெரிய வந்தது. அந்த மாணவிகள் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் முகமது ஷபியின் கைகளில் இருந்து 2 பெண்கள் தப்பியதாக தகவல் வெளியானது. இதில் ஒரு பெண் இலத்தூர் வீடு வரை சென்று அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும், இன்னொரு பெண், முகமதுஷபி அழைத்தும் அவருடன் செல்ல தாமதம் காட்டியதால் தப்பிய விபரமும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கைதான பகவல் சிங்கின் மனைவி லைலாவை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.

    அந்த பெண்ணை நரபலி கொடுத்து அவரது உடல் உறுப்புகளை நல்ல விலைக்கு விற்றதாக முகமது ஷபி கூறியதாக லைலா போலீசாரிடம் கூறினார். மேலும் அந்த பெண் யார்? எப்போது அவர் கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.

    இதுபற்றி போலீசார் உடனடி விசாரணை மேற்கொண்டனர். அதில் உடல் உறுப்புகள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பகவல் சிங்கை நம்பவைக்கவே முகமது ஷபி இதுபோன்று கூறியிருக்கலாம் எனவும் போலீசார் கூறினர்.

    கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ், இதுபற்றி கூறும்போது, இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். எங்களின் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அதுபற்றிய விபரங்கள் கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்றார்.

    • பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    • ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள்.

    பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இப்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வீட்டை பார்க்க தினமும் பத்தினம் திட்டா பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இலத்தூரில் இறங்கி நரபலி வீட்டை பார்க்க ஆட்டோக்களை தேடி அலைந்தனர். இதையடுத்து இலத்தூரில் ஆட்டோ ஓட்டும் டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் அறிவிப்பு சீட்டு ஒன்றை ஒட்டியுள்ளார்.

    அதில் இலத்தூர் நரபலி வீட்டிற்கு செல்ல ரூ. 50 கட்டணம் என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள். இதன்மூலம் தினசரி தனக்கு ரூ.1200 வரை வருமானம் வருவதாக அந்த ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலத்தூரில் நரபலி நடந்த வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    • வீட்டின் அனைத்து பகுதிகளையும் கைரேகை நிபுணர்களும் சோதித்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரை சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி லைலா.

    இவர்களுக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது ஷபி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. முகமது ஷபி மந்திரவாதி என அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களிடம் பழகி உள்ளார்.

    மேலும் நரபலி கொடுத்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்று கூறியுள்ளார். அதனை நம்பிய பகவல் சிங்கும், அவரது மனைவி லைலாவும் இலத்தூர் வீட்டில் நரபலி கொடுக்க ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து முகமது ஷபியே நரபலி கொடுக்க பெண்களை கடத்தி வந்துள்ளார். எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தர்மபுரியை சேர்ந்த பத்மா ஆகியோரை இலத்தூருக்கு கடத்தி சென்றார்.

    பகவல் சிங் வீட்டில் அவர்கள் இருவரையும் வைத்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்துள்ளார்.

    பின்னர் அவர்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி குக்கரில் போட்டு சமைத்து சாப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முகமது ஷபி, பகவல் சிங், லைலா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின்போது அவர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா? என்று கேட்டபோது 3 பேருமே அதனை ஒப்புக்கொண்டுள்ளனர். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அவர்களுக்கு எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. மேலும் 3 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இலத்தூரில் நரபலி நடந்த வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். வீட்டின் அனைத்து பகுதிகளையும் கைரேகை நிபுணர்களும் சோதித்து வருகிறார்கள்.

    இது தவிர இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களையும் கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    • பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
    • தனது தாயாரின் எஞ்சிய பாகங்களை தந்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்.

    கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மாவின் மகன்கள் செல்வராஜ், சேட் ஆகியோர் எர்ணாகுளத்தில் தங்கி உள்ளனர்.

    அவர்கள் தாயார் பத்மாவின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    பத்மாவின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதால், அவை பத்மா உடல் தானா? என்பதை கண்டுபிடிக்க அவரது மகன்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்முடிவுகள் வந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இந்த நிலையில் பத்மாவின் மகன் செல்வராஜ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் தனது தாயாரின் எஞ்சிய பாகங்களை தந்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்.

    கடந்த 11-ந் தேதி முதல் எர்ணாகுளத்தில் தான் இருக்கிறோம். எங்களது டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்தபின்னர்தான் உடலை ஒப்படைப்போம் என போலீசார் கூறுகிறார்கள்.

    அதனை விரைவாக முடித்து உடலை ஒப்படைக்க கேரள அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதுபோல தமிழக முதல்வருக்கும் பத்மாவின் மகன்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    • பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பெண் பத்மா உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி மற்றும் அவரது கூட்டாளி பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களை போலீசார் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    முதல்கட்ட விசாரணையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பும், பத்மாவை கடந்த மாதமும் நரபலி கொடுத்ததாக 3 பேரும் தெரிவித்தனர்.

    மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதையும் ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு அவர்களின் மர்ம உறுப்புகளை தனித்தனியாக வெட்டி எடுத்து சில உடல் பாகங்களையும், நர மாமிசத்தையும் பிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அவற்றை போலீசார் மீட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    நர மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாத்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது அவற்றை பெங்களூருவில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து நரமாமிசத்தை வாங்க தயாராக இருந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த முயற்சி ஒரு புறம் நடக்க நரபலி கொடுத்த பெண்களின் உடல் உறுப்புகள் நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி முகமது ஷபியிடம் கேட்டபோது, சில மாதங்கள் பிணவறையில் பணி புரிந்ததாகவும், அங்கு பிரேத பரிசோதனையின்போது உடல் உறுப்புகள் வெட்டப்படுவதை பார்த்து தெரிந்து கொண்டதாக கூறினார். இதனை போலீசார் முழுமையாக நம்பவில்லை.

    எனவே இவர்களுக்கு வேறு நபர்கள் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே நரபலி பூஜை நடந்த பகவல் சிங் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை தோண்டி எடுத்து அங்கிருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு வருகிறார்கள். சில இடங்களில் எலும்பு துண்டுகளும் கிடைத்துள்ளன. அவை யாருடையது என்பதை கண்டுபிடிக்க பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்முடிவுகள் வந்த பின்னரே பகவல் சிங் தம்பதி மற்றும் முகமது ஷபி ஆகியோர் வேறு யாரையும் நரபலி கொடுத்துள்ளார்களா? என்பது தெரியவரும்.

    • முகமது ஷபி எர்ணாகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது.
    • மாணவிகளை முகமது ஷபி அடிக்கடி நரபலி நடந்த பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி (வயது 50), தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) ஆகியோர் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போனார்கள்.

    காணாமல் போன பத்மாவை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை முகமது ஷபி என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    போலீசார் முகமது ஷபியை கைது செய்து விசாரித்தபோது, அவர் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டுக்கு அழைத்து சென்று பத்மாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதுபோல எர்ணாகுளத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் மாயமான ரோஸ்லியும் இதுபோல நரபலி கொடுக்கப்பட்டதையும் முகமது ஷபி ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் முகமது ஷபியின் நண்பர்களான பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் போலீசார் நரபலி நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். இதில் பகவல் சிங் வாழ்க்கையில் செல்வம் பெருக பூஜை நடத்தியதும், இதற்காக ரோஸ்லி மற்றும் பத்மாவை கடத்தி வந்து நரபலி கொடுத்ததாகவும் கூறினர்.

    நரபலி கொடுக்கும் முன்பு அவர்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறி அதிரவைத்தனர்.

    ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்க கடத்தி வந்தது முகமது ஷபி என்பதால் அவரை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்த போலீசார் அவரது பின்னணி பற்றி விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.

    இதில் முகமது ஷபியின் குரூர மனம், அவர் பெண்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தார் என்பது பற்றிய பகீர் தகவல்கள் தெரியவந்தது. மேலும் முகமது ஷபி மீது 8-க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகளும், 70 வயதான மூதாட்டியையும் கற்பழித்து அவரது மர்ம உறுப்புகளை சிதைத்த குற்றச்சாட்டும் அவர் மீது இருப்பது தெரியவந்தது.

    அப்படிதான் இவர் பகவல் சிங்கையும் தன் வசப்படுத்தி உள்ளார். பகவல் சிங்குக்கும் இவருக்கு பேஸ்புக் மூலமே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் தொடங்கிய பேஸ்புக் பக்கத்தில் பல ஹைக்கூ கவிதைகளை பதிவிட்டுள்ளார்.

    அதில் மாந்திரீகம் மூலம் செல்வம் பெருக வழிகள் இருப்பதாக கூறியுள்ளார். இதனை பார்த்துதான் பகவல் சிங், முகமது ஷபியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அதன்பின்பு இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதன்பின்புதான் பெண்களை வைத்து நிர்வாண பூஜை, நரபலி அளவுக்கு சென்றுள்ளனர்.

    இதன் ஒரு கட்டமாக பகவல் சிங்கின் கண்முன்பே அவரது மனைவியுடன் முகமது ஷபி உல்லாசமாக இருந்துள்ளார். இதுவும் செல்வம் தரும் பூஜையின் ஒரு பகுதி என பகவல் சிங்கிடம் கூறியுள்ளார்.

    முகமது ஷபி எர்ணாகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் நடத்தி வந்துள்ளார். இதன் அருகே கல்லூரி மாணவிகள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கி இருக்கும் சில மாணவிகள் அடிக்கடி முகமது ஷபியின் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களில் 2 பேரிடம் முகமது ஷபிக்கு அதிக நெருக்கம் இருந்ததை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

    அந்த மாணவிகளை முகமது ஷபி அடிக்கடி நரபலி நடந்த பகவல் சிங் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவிகளை அவர் செக்ஸ் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் நரபலி சம்பவம் வெளியான பின்னர் இதுபோன்று வேறு யாரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் எர்ணாகுளம் மட்டுமின்றி கேரளா முழுவதும் இந்த காலகட்டத்தில் சுமார் 26 பெண்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இவர்களில் யாராவது நரபலி கொடுக்கப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்காக கைதான 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். இதில் அவர்களை 12 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இந்த 12 நாட்களிலும் போலீசார் முகமது ஷபி மற்றும் லைலா, பகவல் சிங் ஆகிய 3 பேரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அப்போது நரபலி சம்பவம் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
    • கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின்(வயது 50). லாட்டரி வியாபாரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து காலடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மா(54), எர்ணாகுளம் நகருக்கு வேலை தேடி வந்தார். பின்னர் பொண்ணுரணி பகுதியில் தங்கியிருந்து, லாட்டரி வியாபாரம் செய்து வந்தார். அவர், கடந்த 26-ந் தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து கடவந்தரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    மர்மமான முறையில் 2 பெண்கள் அடுத்தடுத்து மாயமானது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பத்மாவின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். இதில் பெரும்பாவூரை சேர்ந்த முகமது ஷபி என்ற ஷிகாப்பு (48) என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதாவது, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இலந்தூர் பகுதியை சேர்ந்த வைத்தியர் பகவந்த் (55), அவரது மனைவி லைலா (52) ஆகியோர் செல்வந்தராகும் ஆசையில் பத்மா, ரோஸ்லின் ஆகியோரை கடத்தி சென்று நரபலி கொடுத்தது தெரியவந்தது.

    மேலும் பரிகார பூஜை என்ற பெயரில் உடல்களை துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதுடன், ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. மீதமுள்ள உடல் பாகங்களை குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து பகவந்த், லைலா மற்றும் முகமது ஷபி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து முகமது ஷபி மற்றும் பகவத்சிங் ஆகியோர் காக்கநாடு மாவட்ட சிறைச்சாலையிலும், லைலா அதே பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் கேரளாவில் மேலும் பல பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கு காரணம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 12 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் உறவினர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கலக்கத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் காணாமல் போனவர்களின் முழு பட்டியலை தீவிரமாக சேகரித்து வருவதாகவும், நரபலி சம்பவம் தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜூ தெரிவித்தார்.

    கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நரபலி வழக்கை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள டி.ஜி.பி. அனில் காந்த் கூறியதாவது:-

    இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொச்சி மாநகராட்சி துணை கமிஷனர் எஸ்.சசிதரன் தலைவராகவும், பெரும்பாவூர் துணை சூப்பிரண்டு அனூஜ் பாலிவால் முக்கிய விசாரணை அதிகாரியாகவும் செயல்படுவார்கள். இவர்களுக்கு உதவியாக எர்ணாகுளம் மத்திய போலீஸ் கமிஷனர் சி.ஜெயக்குமார், கடவந்தரா போலீ்ஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பைஜூ ஜோஸ், காலடி இன்ஸ்பெக்டர் ஆகியோர் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×