search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நரபலி நடந்த வீட்டை பார்க்க தினமும் குவியும் மக்கள்
    X

    நரபலி நடந்த வீட்டை பார்க்க தினமும் குவியும் மக்கள்

    • பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    • ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள்.

    பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இப்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வீட்டை பார்க்க தினமும் பத்தினம் திட்டா பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இலத்தூரில் இறங்கி நரபலி வீட்டை பார்க்க ஆட்டோக்களை தேடி அலைந்தனர். இதையடுத்து இலத்தூரில் ஆட்டோ ஓட்டும் டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் அறிவிப்பு சீட்டு ஒன்றை ஒட்டியுள்ளார்.

    அதில் இலத்தூர் நரபலி வீட்டிற்கு செல்ல ரூ. 50 கட்டணம் என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள். இதன்மூலம் தினசரி தனக்கு ரூ.1200 வரை வருமானம் வருவதாக அந்த ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    Next Story
    ×