என் மலர்
நீங்கள் தேடியது "Actor Mohanlal"
- ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம்.
- மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது திரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகம் முழுதும் உள்ள மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. திரைப்படம் பிற மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, சீன ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேரடி ஓடிடி ரிலீசாக வெளியானது. இப்படத்தையும் ஜீது ஜோசப் இயக்கி இருந்தார். இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது மோகன்லால் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் பரோஸ். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் திரிஷ்யம் 3 திரைப்படத்தை குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும்.
- சந்தோஷ் சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன் லால். நீண்ட காலம் நடிகராக வலம் வருபவரும், தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மோகன் லால், புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். பரோஸ் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மோகன் லால், "47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள். இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான். இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும்."
"இப்படத்தில் மிக திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். லிடியன் முதன் முதலில் எங்களைப் பார்க்க வந்த போது 13 வயது தான், மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார்."
"படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது."
"ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தற்பொழுது பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- பான் இந்தியா முறையில் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தற்பொழுது பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.
குழந்தைகளை கவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்த படம் என்கிறார்கள். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் பாடலான பம்பூசியா பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகி வருகிறது.
- திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகி வருகிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷணா, பிரம்மானந்தம், மோகன் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதுமட்டும்மல்லாமல் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மோகன்லால் கதாப்பாத்திரத்தில் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லால் இப்படத்தில் கிராடா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இம்மாதிரியான ஒரு அசாதாரண நடிகருடன் நடிப்படதற்கு பெருமை கொள்கிறேன் என படத்தின் கதாநாயகனான விஷ்ணி மஞ்சு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'KIRATA'! The legend Sri. Mohanlal in #Kannappa. I had the honor of sharing the screen space with one of the greatest Actor of our time. This entire sequence will be ????? ! @Mohanlal pic.twitter.com/q9imkDZIxz
— Vishnu Manchu (@iVishnuManchu) December 16, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தற்பொழுது பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தற்பொழுது பரோஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.
குழந்தைகளை கவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைத்துள்ளார். 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்த படம் என்கிறார்கள். திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ்-ஐ முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் தமிழ் டிரெய்லரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை விர்ச்சுவன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர்.
படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'.
- திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முடிவடைந்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார்.
'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது..
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். இவர்களுடன் மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முடிவடைந்துள்ளது. இதனை குறித்து பிருத்விராஜ் குறிப்பிடுகையில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மலம்புழா நீர்த்தேக்கத்தில் படத்தின் இறுதி ஷாட்டை படம்பிடித்து முடித்தோம். இன்னும் 117 நாட்களில் திரையரங்கில் சந்திப்போம். என பதிவிட்டுள்ளார்.
திரைப்படம் சொன்ன தேதியில் வெளிவருவதை உறுதி செய்ய புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
At 5:35 am today, by the banks of the Malampuzha reservoir, we canned the final shot of #L2E #EMPURAAN See you in theatres in 117 days! ?@mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje #GeorgePius… pic.twitter.com/4jkBpNHesd
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 1, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.
- பிரணவ் மோகன்லால் இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார்.
மலையாள திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் மோகன்லால், திரைப்பட தயாரிப்பாளரான கே.பாலாஜியின் மகளான சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் பிரணவ் மோகன்லால் என்ற மகனும் உள்ளனர்.
FTQ வித் ரேகா மேனன் என்ற மலையாள யூடியூப் நிகழ்ச்சிக்கு சுசித்ரா மோகன்லால் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அப்பு (பிரணவ்) இப்போது ஸ்பெயினில் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக சம்பவம் எதுவும் வாங்காமல் அவர் வேலை செய்து வருகிறார். அவர் அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்.
எனக்கு சினிமா பட ஸ்கிரிப்ட்களைக் கேட்பது பிடிக்கும், அதனால் நான் உட்கார்ந்து கேட்கிறேன். அவர் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கிறார். வருடத்திற்கு குறைந்தது 2 படங்களாவது நடிக்குமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அவர் சினிமா வாழ்க்கை என அனைத்தையும் பேலன்ஸ் செய்ய நினைக்கிறார்.
அதே சமயம் அவரது அப்பாவுடன் அப்பு சேர்ந்து நடிப்பதை நான் விரும்பவில்லை. இருவரையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பார்ப்பது தனக்கு பிடிக்காது" என்று தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு வெளியான ஹிருதயம் திரைப்படத்தின் மூலம் பிரணவ் மலையாள ரசிகர்களிடையே புகழ்பெற்றார். இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான வர்ஷங்கல்க்கு ஷேஷம் என்ற மலையாளப் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.
- லூசிஃபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது..
- இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இப்படத்தை மோகன்ராஜா இயக்கினார்.
'லூசிஃபர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன்படி இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது..
ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். இவர்களுடன் மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ், சாய்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை பிருத்விராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
On to the final leg. Home stretch! #L2E #EMPURAAN pic.twitter.com/J4GZks20WG
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) November 9, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் வெளியாகி வருகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சந்தித்தார்.
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படம் அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'காந்தாரா சேப்ட்டர் 1' மேக்கிங்கில் உள்ள நிலையில் இதுகுறித்து அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. முதல் படமான காந்தரா கதைக்கு முற்கதையாக ப்ரீகுவல் படமாக இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி மலையாள ஹீரோ மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அதிலும் குறிப்பாக கதைப்படி ரிஷப் செட்டியின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து படக்குழு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியுடன் ரிஷப் செட்டி மோகன்லாலை சென்று சந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
- மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.
திருவனந்தபுரத்தில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் லோகோவை வெளியிட்ட நடிகர் மோகன்லால், கேரள திரையுலகை உலுக்கிய பாலியல் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, இங்கே தான் இருக்கிறேன்.
* மலையாள திரையுலகினரின் அம்மா சங்கத்தில் நான் 2 முறை பொறுப்பில் இருந்துள்ளேன்.
* பாலியல் புகார் குறித்து விசாரிக்க போலீஸ் உள்ளது. அனைவரும் பொறுமை காக்க வேண்டும்.
* பாலியல் புகார்களால் பெருமை மிகுந்த கேரள சினிமா சிதைந்து போயுள்ளது.
* மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறேன்.
* குழு கலைக்கப்பட்டாலும் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை, பணிகள் தொடர்கிறது.
* ஹேமா குழு அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டியது ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் தான்.
* பாலியல் குற்றச்சாட்டுகளால் கேரள நடிகர் சங்கம் சிதறி விடக்கூடாது.
* மலையாள நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டது. அதன் மீது அவதூறு பரப்ப வேண்டாம்.
* பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
* சங்கத்தில் இருந்து விலகினாலும் இந்த பிரச்சனைகளை கூர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருந்தேன்.
* கேரள சினிமாவை தகர்த்து விட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான்.
- ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான்.
சென்னை:
மலையாள திரை உலகில் புயலை கிளப்பி வரும் நடிகைகளின் பாலியல் புகார்கள் எதிரொலியாக மலையாள திரைப்பட நடிகர் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் மோகன் லால் உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளார்கள்.
மோகன்லாலின் இந்த முடிவை குஷ்பு வரவேற்றுள்ளார். பெண்களை பாதுகாக்க முடியாத நிலையில் அவர் எடுத்த முடிவு சரியானதுதான். இனி சம்பவம் என்று நடந்தாலும் சரி அந்த கர்மா என்றாவது ஒருநாள் நம் தலையில்தான் விழும் என்ற பயம் வரும் என்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைத்துறையில் நிலவும் இந்த பிரச்சனையில் நிலைத்து நின்று வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டுகள். தொடரும் இந்த துஷ்பிரயோகத்தை உடைக்க ஹேமா கமிட்டி அவசியப்பட்டது. ஆனால் செய்து முடிக்குமா?
இந்த மாதிரி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, பாலியல் உதவிகளை கேட்பது, பெண்கள் காலூன்றவோ அல்லது தங்கள் வாழ்க்கையை நடத்தவோ சமரசம் செய்துதான் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.
ஒரு பெண் மட்டும் ஏன் இப்படி தவறான வழியில் தான் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களும் இதை எதிர்கொண்டாலும் வேதனையை சுமப்பது பெண்கள்தான்.
இந்த பிரச்சனை தொடர்பாக எனது மகள்களுடன் நீண்ட நேரம் உரையாடினேன். பாதிக்கப்பட்டவர்களிடம் இருக்கும் பச்சாதாபத்தையும், புரிதலையும் கண்டு வியந்தார்கள்.
இன்று பேசுவதா? நாளை பேசுவதா? என்பது முக்கியமல்ல. பேசுங்கள். உடனடியாக பேசுவதுதான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவும், திறமையாக விசாரணை நடத்துவதற்கும் உதவும்.
அவமானம் வருமோ என்ற பயம். 'ஏன் செய்தாய்' என்ற கேள்விகளால் தயக்கம் வரும். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு அந்நியராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எங்கள் ஆதரவு உண்டு.
பாதிக்கப்பட்டவர்கள் ஏன் முன்பே வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழலாம். அப்போது அவருடைய சூழ்நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.
ஒரு பெண்ணாகவும், தாயாகவும் பார்க்கும்போது இத்தகைய காயங்கள், சதையில் மட்டுமல்ல ஆன்மாவிலும் ஆழமாக பதிந்து போகின்றன.
இந்தக் கொடூரச் செயல்கள் நமது நம்பிக்கை, அன்பு, வலிமை ஆகியவற்றின் அடித்தளத்தையே உலுக்குகின்றன. ஒவ்வொரு தாய்க்கும் பின்னால், வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு விருப்பம் இருக்கிறது, அந்த புனிதம் சிதைந்தால், அது நம் அனைவரையும் பாதிக்கிறது.
என் தந்தையின் துஷ்பிரயோகம் பற்றி பேச இவ்வளவு நேரம் எடுத்தது ஏன் என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் முன்பே பேசியிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு நடந்தது, என் தொழிலை உருவாக்குவதற்கான சமரசம் அல்ல.
நான் விழுந்தால் என்னைப் பிடிக்க வலிமையான கரங்களை எனக்குத் தருவதாக கருதும் நபரின் கைகளில் நான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன்.
அங்குள்ள அனைத்து ஆண்களிடமும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆணும் நம்ப முடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்குதான் பிறந்தான். பல பெண்கள் உங்கள் வளர்ப்பில் இன்றியமையாத பாத்திரங்களை வகிக்கிறார்கள்.
உங்களை வடிவமைக்கிறார்கள்-உங்கள் தாய்மார்கள், சகோதரிகள், அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள். உங்கள் ஒற்றுமை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கலாம், நீதியும் கருணையும் வெல்லும். எங்களுடன் நிற்கவும், எங்களைப் பாதுகாக்கவும், உங்களுக்கு வாழ்க்கையையும் அன்பையும் வழங்கிய பெண்களை மதிக்கவும்.
வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும், உங்கள் செயல்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுதியான மரியாதை மற்றும் பச்சாதாபத்தை பிரதிபலிக்கட்டும். நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம், ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த காயங்களை சரிசெய்து பாதுகாப்பான, அதிக இரக்கமுள்ள உலகத்திற்கு வழி வகுக்க முடியும்.
பல பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கூட இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அவர்கள் கண்களில் நட்சத்திர கனவுகளுடன் சிறிய நகரங்களிலிருந்து வருகிறார்கள், பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் கனவுகள் மொட்டுக்களிலேயே நசுக்கப்படுகிறது.
இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுரண்டல்கள் இத்துடன் நிறுத்தப்படட்டும்.
பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒரு போதும் சரி செய்யவோ சமரசம் செய்யவோ வேண்டாம்.
இந்த துயரங்களை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் நானும் நிற்கிறேன். ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
- நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.
மலையாள திரையுலகில் பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் புகாரளித்த பெண்களுடன் துணை நிற்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியிருப்பதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும் துணை நிற்கிறேன்.
பெண்கள் காலூன்றி நிற்க சமரசம் செய்ய வேண்டிய நிலை அனைத்து துறைகளிலும் உள்ளது.
பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் துணை நிற்க வேண்டும்.
நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் இளம்பெண்கள் பலர் மொட்டுகளாக நசுக்கப்படுகின்றனர்.
பெண்களே வெளியே வந்து பேசுங்கள். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை எந்த நிலையிலும் சமரசம் செய்யாதீர்கள்.
No என்றால் கண்டிப்பாக No-தான் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காதீர்கள் என்று பெண்களுக்கு குஷ்பு அறிவுறுத்தி உள்ளார்.
? This moment of #MeToo prevailing in our industry breaks you. Kudos to the women who have stood their ground and emerged victorious. ✊ The #HemaCommittee was much needed to break the abuse. But will it?Abuse, asking for sexual favors, and expecting women to compromise to…
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024