search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஆந்திரா வாலிபர் பலி

    பாபநாசம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஆந்திரா வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராவ் மகன் வேமண்டு சீனு (வயது 38). இவர் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பாபநாசம் அருகே மேல செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேமண்டுசீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தங்கி வேலை பார்க்க கூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வேமண்டு சீனு மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வேமண்டுசீனு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த சுரேசை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×