search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனம் அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
    X

    திண்டிவனம் அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திண்டிவனம்:

    நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×