search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "severly injured"

    ராஜபாளையம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம் அருளாச்சியை சேர்ந்த அரவிந்த்(வயது24),அவரது தம்பி ராஜதுரை(21), இவர்களது மாமா மகன் சசி(20), நண்பர் விஸ்வநாத பிரதீப் ஆகிய 4 பேரும் பக்கத்து கிராமமான டி.ராமநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது காரை வாங்கி கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதியபேருந்துநிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் அண்ணாத்தே படத்தின் இரவு காட்சிக்கு சென்றனர். அங்கு படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஒருமணி அளவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதபிரதீப் ஓட்டினார்.

    தென்காசிரோட்டில் சோலைசேரி மண்ணோடி கண்மாய் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து 3 முறை உருண்டு தலைகுப்புற கவிழந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட சசி சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் ஊரக காவல்நிலைய சகறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    துறையூர் ஆருகே அரசு விடுதி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலையில் பழங்குடியினர் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டிடம் சேதம் அடைந்து இருந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அந்த விடுதி கட்டிடத்தை இடித்துவிட்டு தற்போது, ரூ.2கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு விடுதி கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் விடுதியின் முதல்தளம் கட்டும் பணியில் கண்ணனூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கொத்தனார் மணிபாரதி (வயது 42) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    முதல்தளத்தில் 20 அடி உயரத்தில் நின்று மணிபாரதி குறுக்கு சுவர் கட்டிக்கொண்டிருந்தபோது, திடீரென்று சுவர் இடிந்து கீழே விழுந்தது. அப்போது அங்கு நின்று சுவர் கட்டிக்கொண்டிருந்த மணிபாரதியும், அவருடன் நின்று பணியாற்றிய துறையூர் நத்தகாடு விநாயகர் தெருவை சேர்ந்த சங்கீதா (32) ஆகியோரும் கீழே விழுந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிபாரதி இறந்தார். சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆனந்த் தலைமையில் பொதுமக்கள் துறையூர்-திருச்சி சாலையில் கூடினர். பழங்குடியினர் மாணவிகள் விடுதி கட்டிடம் தரமற்ற கட்டுமான பொருட்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதனால் தான் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. எனவே தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விடுதி கட்டவேண்டும் என வலியுறுத்தி மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததை எடுத்து, அவர்கள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    தாராபுரம் அருகே ரோட்டை கடக்க முயன்ற சிறுமி மீது கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே உள்ள கள்ளிவலசை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ஜனவர்த்தினி (வயது 10). ஆனந்தகுமார் என்பவரது மனைவி ரேவதி (22), இவர்களது மகள் சாய் ஸ்ரீ (2), நடராஜ் என்பவரது மனைவி தங்கம்மாள் (50). ஆகியோர் இன்று மதியம் உடுமலை-தாராபுரம் ரோட்டை கடக்க முயன்றனர். 

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜனவர்த்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    படுகாயம் அடைந்த ரேவதி,சாய்ஸ்ரீ, தங்கம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டிவனம் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திண்டிவனம்:

    நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் நேற்று இரவு புறப்பட்டது. அந்த பஸ்சை மதுரையை சேர்ந்த ஜெகதீஸ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    அந்த நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மீனாட்சிமுத்து (49), நெல்லையை சேர்ந்த மல்லிகா (60), தினேஷ்பாபு (27), சென்னையை சேர்ந்த சுசீலா (45), மேரிநிர்மலா, தூத்துக்குடியை சேர்ந்த தங்கராஜ் (90), சாத்தான்குளத்தை சேர்ந்த ராஜகுமாரி (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற கூலி தொழிலாளர்கள் லாரியில் இருந்து குதித்த போது 7 பேர் படுகாயம் அடைந்தனர். #semmaramSmuggling

    திருப்பதி:

    திருப்பதியில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு திருவண்ணாமலையை சேர்ந்த 60 கூலி தொழிலாளர்கள் திருப்பதி வன பகுதியில் செம்மரம் வெட்ட லாரியில் வந்து கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி வடமாலைபேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு லாரி செக்போஸ்ட் அருகே திடீரென நின்றது. லாரியில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

    லாரியில் இருந்து குதித்ததில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி (வயது 41), ரவி (28), கோவிந்தசாமி (28), சக்கரவர்த்தி (28), கார்த்திக் (28), திருப்பதி (28), வேதநாயகம் (41) என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    திருப்பதியில் கூலி வேலை செய்ய ஒரு லாரியில் 60 பேர் வந்ததாகவும், செம்மரம் வெட்ட வரவில்லை என கூறி உள்ளனர்.  #semmaramSmuggling

    மன்னார்குடி அருகே இன்று அதிகாலை வீட்டு சுவர் இடிந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#Death

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதிமங்கலம் அரிவளூர் காலனி தெருவை சேர்ந்தவர் எலரா (வயது52). இவர் தனது மகன் மகேஷ்(25) மற்றும் பேரன் மணிகண்டன்(4) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பு பக்கம் உள்ள சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த 3 பேர் மீதும் திடீரென விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி எலரா உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.

    சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது எலரா பலியாகி கிடப்பதையும், படுகாயம் அடைந்து மணிகண்டன் மற்றும் மகேஷ் ஆகியோர் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே மணிகண்டன், மகேஷ் ஆகியோரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Death

    பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணி கள் இருந்தனர்.

    அந்த பஸ் இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். அதற்குள் அந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பேருந்தின் இடிபாட்டில் சிக்கி ஜக தாம்பிகை என்ற பெண், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவா (30) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார்.

    மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ் சாலையி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே மேலும் ஒரு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு பெரம்பலூரில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ் சென்றது. அப்போது எதிரே திட்டக்குடி நோக்கி வந்த வந்த லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியதில் பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேருந்துகள் ஒரே பகுதியில் அடுத்தடுத்து கவிழ்ந்ததால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.

    ×