என் மலர்
செய்திகள்

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 3 பேர் பலி
பெரம்பலூர்:
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணி கள் இருந்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். அதற்குள் அந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தின் இடிபாட்டில் சிக்கி ஜக தாம்பிகை என்ற பெண், முகேஷ் என்ற 5 வயது சிறுவன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிவா (30) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார்.
மேலும் இந்த விபத்தில் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 13 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ் சாலையி நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் அருகே மேலும் ஒரு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலைக்கு பெரம்பலூரில் இருந்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ் சென்றது. அப்போது எதிரே திட்டக்குடி நோக்கி வந்த வந்த லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியதில் பஸ் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேருந்துகள் ஒரே பகுதியில் அடுத்தடுத்து கவிழ்ந்ததால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.