search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allies"

    • கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரி ராஜா, துணை மேயராக தாமரைச்செல்வன் இருந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மாநகரா ட்சி மேயர் தேர்தலில் சுந்தரி ராஜா போட்டியிட்டு கவுன்சிலர்கள் வாக்களித்து வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்றார் . இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம், கடலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்,தி.மு.க. கவுன்சிலர்கள் ஆகியோர் நேரில் வந்து பரபரப்பு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரை ச்செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்டி யின்றி தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆதரவுடன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டடார். எங்கள் வார்டு பகுதிகளில் தொடர்ந்து துணை மேயர், வார்டு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார்கள் வந்துள்ளது. இதன் காரணமாக வருகின்ற மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, 21 தி.மு.க. கவுன்சிலர்கள் வழங்கிய புகார் மனுவை பெற்றுக் கொண்டார் . தி.மு.க.தலைமை மற்றும் மாவட்ட செயலாளர் எடுக்கும் முடிவு இறுதியானதாகும் என தெரிவித்தார். தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகின்றன. தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரே துணை மேயராக தாமரைச்செல்வன் மட்டும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென்று துணைமேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என போர்கொடி தூக்கி புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் பணம் பறித்த ரவுடி கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
    • இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 44). இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் பாலமுருகன் நேற்று மதியம் காளவாசலில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் கத்திமுனையில் மிரட்டி ரூ. 2500-யை பறித்து சென்றார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், திடீர்நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி, அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது பாலமுருகனிடம் கத்தி முனையில் பணம் பறித்து சென்றது பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு கீரைத்துறைக்கு சென்று, அங்கு உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

    இதில் அவர் கீரைத்துறை, கோதண்டராமன் மகன் செல்வம் என்ற பிணந்திண்ணி செல்வம் (24) என்பது தெரியவந்தது.

    அவர் மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பிரபல ரவுடி வெள்ளைகாளியின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர் ஆவார். 

    மராட்டியத்திலும் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. #Samajwadi #BahujanSamajParty
    மும்பை :

    உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மராட்டியத்தில் சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மராட்டியத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியதாவது:-

    கூட்டணி குறித்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறோம். அகிலேஷ் யாதவிடம் பேசிவிட்டு இறுதி முடிவு எடுப்போம். பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிவதை தடுக்க வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடுவோம். காங்கிரசுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை.

    இ்வ்வாறு அவர் கூறினார்.



    இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் சுரேஜ் சக்காரே கூறுகையில், ‘‘வருகிற 20-ந்தேதிக்குள் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். விதர்பா, மரத்வாடா மண்டலத்தில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 16 லட்சம் வாக்குகளையும், 2014-ல் நடந்த தேர்தலில் 14 லட்சம் வாக்குகளையும் பெற்று உள்ளோம். எங்கள் கூட்டணியில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 முதல் 6 தொகுதிகள் ஒதுக்கப்படும்’’ என்றார்.

    பிரகாஷ் அம்பேத்கர் தனித்து போட்டியிடுவது, எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மகன் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தது காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கொண்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு விதர்பா மண்டலத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளில் அந்த கட்சி 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வாக்குகளை பெற்று இருந்தது. இதேபோல முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பிவண்டி, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, நாந்தெட், அவுரங்காபாத் ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Samajwadi #BahujanSamajParty
    கூட்டணி கட்சிகளை பாஜக இழப்பதற்கு பிரதமர் மோடியின் தலைக்கணமே காரணம் என ஆந்திர முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #AndhraCM #BJP
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு வரவுள்ள பொதுத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், மோடியை விட அரசியலில் தான் மூத்தவர் என்றும் இருப்பினும் நான் மோடிக்கு மிகுந்த மரியாதை அளித்து வந்ததாகவும், ஆனால் மோடி அதனை உணரவில்லை எனவும் கூறியுள்ளார்.

    அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அவரது கூட்டணி கட்சிகளை நலிவடையச் செய்வதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், அதனை முறியடித்து தனித்து இயங்க முடியும் என்பதை உணர்த்தவே கூட்டணியை முறித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஆந்திர மாநிலத்தின் நலனுக்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்ததாகவும், ஆனால் அதனால் எவ்வித பயனும் இல்லாத நிலையில் ஏன் கூட்டணியை தொடர வேண்டும் எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, கடந்த 2014 பொதுத்தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளும் அதன்பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் மக்களுக்கு கடும் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநிலங்களில் பாஜக இனி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும், பாஜகவுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கூறியுள்ளார்.

    மேலும், மத்தியில் 3-வது கட்சி ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆந்திர முதல்மந்திரி, 3-வது கட்சி ஆட்சியில் அமர்வது சுலபம் அல்ல. எனினும், பாஜகவுக்கு அந்த 3-வது கட்சி மிகப்பெரிய தலைவலியை நிச்சயம் உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.

    அதையடுத்து, பிரதமர் மோடியின் தலைக்கணத்தின் காரணமாகத்தான் கூட்டணி கட்சிகளை பாஜக இழந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், தனித்து போட்டியிடப்போகும் தெலுங்கு தேசம் கட்சி நிச்சயம் பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் எனவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார். #AndhraCM #BJP
    ×