என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samajwadi"

    • நீதியை பெற்று தந்ததற்காக முதல் மந்திரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் பூஜா பால்.
    • கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பூஜா பால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    லக்னோ:

    உ.பி.யின் பிரயாக்ராஜில் 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வான ராஜு பால் சுட்டுக் கொல்லப்பட்டார். பூஜா பாலை திருமணம் செய்த சில நாட்களில் இந்தச் சம்பவம் நடந்தது. இதற்கு முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் 2023-ம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

    சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச சட்டசபை கூட்டத்தொடரின்போது சமாஜ்வாதி கட்சி பெண் எம்.எல்.ஏ.வான பூஜா பால், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தும், அவரை புகழ்ந்தும் பேசினார்.

    இதற்கிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கூறி பூஜா பாலை சமாஜ்வாதி கட்சியில் இருந்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நீக்கி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இல்லத்துக்கு சென்ற பூஜா பால், அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்
    • இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில், ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்.பி. பிரியா சரோஜின் திருமணம் நவம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

    இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நவம்பர் 18 அன்று திருமண தேதி குறித்துள்ளதாகவும், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் பிரியாவின் தந்தை தூஃபானி சரோஜ் தெரிவித்தார்.

    ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர்.
    • இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி (SP) எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், இன்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

    ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.
    • அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் விரைவில் குடும்பஸ்தனாக மாற உள்ளார்.

    அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி (SP) நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார்.

    இருவருக்கும் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவிற்கான இடமாக லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    பிரியாவின் தந்தையும் எம்.எல்.ஏ.வுமான துபானி சரோஜ், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்ததாக முன்பு தெரிவித்திருந்தார்.

    அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், இரு குடும்பங்களின் பெரியவர்களும் தங்கள் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த சூழலில், அவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

    மறுபுறம், ரிங்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக நற்பெயரைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய டி20 அணியில் உள்ளார். 

    • ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    • வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தார்.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது.

    இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடர உள்ளதாக அறிவித்துள்ளன.

    இந்நிலையில் வக்பு மசோதா அடுத்தாக ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமாவதற்கு முன்பே உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு சட்டவிரோத வக்பு சொத்துக்களை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அம்மாநில எதிர்க்க்காட்சியான சமாஜ்வாதி கட்சி எம்.பி. கோபால் யாதவ், இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டும். இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

    அதற்குள் சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த உத்தரப் பிரதேச முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுவிட்டார்.

    இந்த மசோதாவை எதிர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கிறது, நிற்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக வக்பு வாரியத்தை நில மாஃபியா என யோகி ஆதித்யநாத் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

    • உத்தர பிரதேச மாநிலத்தின் வலுவான கட்சியாக சமாஜ்வாடி திகழ்ந்து வருகிறது.
    • பல மாநிலங்களில் சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருவதால் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியாக சமாஜ்வாடி கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சி உத்தரகாண்ட், மத்தயி பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்சி தேசிய கட்சியாக கருதப்படுகிறது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் உள்ளார்.

    சமாஜ்வாடி கட்சிக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கு அமைப்புகள் உள்ளன. இந்த நிலையில் கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் அறிவுறுத்தலின்படி தலைவர் பதவி உள்பட தமிழ்நாடு பிரிவு கலைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்படடுள்ளது.

    • உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்றார் அகிலேஷ் யாதவ்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரசுக்கு வாரணாசி, ரேபரேலி, அமேதி, பாரபங்கி, ஜான்சி, காசியாபாத் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ல 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், எல்லாம் நன்றாகத்தான் முடிந்துள்ளது. காங்கிரசுடன் கூட்டணி உறுதியாகி உள்ளது. எங்களுக்குள் மோதல் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்தார்.

    • முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஷா ஆலம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்

    உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த ஷா ஆலம் அக்கட்சியில் இருந்து விலகி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

    உத்தரபிரதேசத்தில் முபாரக்பூர் தொகுதியில் (2012, 2017) இரண்டு முறை சட்டமனற உறுப்பினராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2014 மற்றும் 2022 மக்களவை தேர்தல்களில் அசம்கர் தொகுதியில், முறையே சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் தர்மேந்திரா யாதவ்க்கு எதிராக ஷா ஆலம் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
    • தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும் என்றார்.

    லக்னோ:

    டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உத்தர பிரதேச மாநிலம் சென்றார். லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சி அலுவலகத்துக்குச் சென்ற கெஜ்ரிவாலை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:

    டெல்லி, அரியானாவில் பா.ஜ.க. படுதோல்வி அடையும். பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. குறைந்த எண்ணிக்கையிலேயே வெற்றி பெறும்.

    தற்போதைய கள நிலவரப்படி பா.ஜ.க. 220-க்கும் குறைவான தொகுதிகளையே பெறும்.

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, பீகார், கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.

    மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 400 தொகுதிகளுக்கு மேல் வென்றால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள். இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி விரும்புகிறார். அமித் ஷாவை பிரதமராக்கவே பிரதமர் மோடி வாக்கு கேட்கிறார்.

    பா.ஜ.க.வில் 75 வயதானவர்கள் கட்சி பதவியில் இருந்து ஓய்வு பெறுவர் என்ற விதியை பிரதமர் மோடி பின்பற்றுவார் என நம்புகிறேன் என்றார்.

    இதைத் தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 143 இடங்கள்தான் கிடைக்கும் என தெரிவித்தார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான்" என்று தெரிவித்துள்ளார்.

    • இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 4-ம் கட்டமாக மே 13 அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

    இந்த தொகுதியில் இளைஞர் ஒருவர் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்களிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 8 முறை வாக்களிக்கும் நபர் தான் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.

    இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், தேர்தல் ஆணையமே இதை கொஞ்சம் பாருங்கள், இப்போதாவது கொஞ்சம் விழித்திருங்கள் என்று பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் ஒரு கொள்ளை கமிட்டிதான் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோ தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ×