என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
    X

    குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

    • சாராய வியாபாரியான ஹரிகிருஷ்ணன் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கலெக்டர் உத்தரவுபடி, ஹரிகிருஷ்ணனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை மேலக்காட்டை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 43) சாராய வியா பாரி.

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதனால் இவரி ன்குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் கலெக்டர் உத்தரவுபடி, ஹரிகிருஷ்ணனை போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×