search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

    • பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தேசிய தலித் கண்காணிப்பகம், புதுடெல்லி தலித் மனித உரிமைக்கான தேசிய அமைப்பு, மதுரை காஸ்கோ சேவை நிறுவனம் மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தியது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தனிப்பது, பேரிடருக்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்துவது மற்றும் அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மாநில அளவிலான பயிற்சியாளர் அன்னப்பூ ரணி, மாநில அளவிலான தேசிய கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளரும், காஸ்கோ நிறுவனருமான துரைபாண்டி ஆகியோர் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகை மாவட்ட தலித் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் செய்திருந்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    Next Story
    ×