search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "destruction"

    கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிரா மங்களில் சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குடிநீரை பேரல்களில் நிரப்புகின்றனர் யூரியா, மரப்பட்டை, வெல்லம் போன்ற பல்வேறு பொருட் களை பேரல் நீரில் ஊற வைக்கின்றனர்.சில நாட்கள் கழித்து பேரல்களில் ஊறிய நீரினை அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றனர். இது நாட்டுச் சரக்கு என்ற பெயரில் மதுப்பிரியர்களி டம் விற்கின்றனர். இது அப்பகுதியில் மட்டு மின்றி அரியலூர், விழுப்புரம், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்தின் ஒரு சில இடங்க ளிலும் விற்கப்படு கிறது.

    இது தொடர்பாக கள்ளக் குறிச்சி மாவட்ட போலீசா ருக்கும், கல்வராயன்மலை போலீசாருக்கும் புகார் வருவதும், இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று சாராய ஊறல்களை அழிப்ப தும் தொடர் நிகழ்வாக உள்ளது. இருந்தபோதும் இந்த சாராய ஊறல்களை வைத்திருந்தவர்கள் யார் என்பதும், அவர்கள் இன்று வரையில் கைது செய்யப் படாததும் மர்மமாகவே உள்ளது.இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தர வின்பேரில் கல்வராயன் இன்ஸ்பெக்டர் பால கிருஷ் ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடாத் திற்கு விரைந்து சென்றனர்.அங்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அதனை அங்கேயே கொட்டி அழித்தனர். மேலும், இதனை காய்ச்சு வதற்காக வைக்கப்பட்டி ருந்த அடுப்பு, ஊறல்கள் செய்வதற்கான மூலப் பொருட்கள் போன்ற வற்றையும் அழித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாராய ஊற லை வைத்திருந்தவர்யார் என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும், அடையாளம் தெரியாத அந்த நபரை வலை வீசி தேடி வருகின்ற னர்.

    • மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது.
    • அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் சாலையில், தாமரைக் குளம் பகுதியில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இங்கு தர்மபுரி மாவட்டம் எம். பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி சிவகாமியுடனும், அதே பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் தனது மனைவி உமாவுடனும், தனித்தனியாக தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு குமாரின் மனைவி சிவகாமி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. இதில் மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது. சிறிது நேரத்திலேயே இரு குடிசைகளும் முற்றிலும் தீயில் எரிந்ததால் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர். அவிநாசி வட்டாட்சியர் மோகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தீ விபத்து பகுதியில் ஆய்வு செய்து இரு குடும்பத்தினரும் மாற்றிடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் வனப்ப குதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்காக சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கெடார் பட்டிவளவு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அதனை பதுக்கி வைத்த வர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள ஓடையில் வண்டைக்காப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவத ற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெ க்டர் குணசேகரன் வண்டை க்காப்பாடி வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 4 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சாராயம் பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.
    • இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையால் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 577 கிலோ எடை உள்ள கஞ்சா நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் உயர் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.

    எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் உள்ள மருத்துவக் கழிவு எரியூட்டும் நிலையத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்ரீ முன்னிலையில் சுமார் 577 கிலோ கஞ்சாவினை போலீசார் தீயிட்டு எரித்தனர்.

    இந்நிகழ்வின்போது டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், திருப்பூர் மாநகர துணை ஆணையர் ஆசைத்தம்பி, சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
    • கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன்மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராய ஊழல்களை கண்டுபிடித்து போலீசார் அழித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண் டு மோகன்ராஜ் தலைமையில் கொண்ட போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன் மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது கோவில் மொழிபட்டு கிராமம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய மூன்று பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட தலைமறைவான குற்றவாளி வெங்கட்ராமன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

    • பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.
    • வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வண்டலூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது45). நேற்று மின்கசிவு காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது.

    அப்போது காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வண்டலூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த தமிழரசி , வெங்கடேசன், பாப்பையன், ராஜேந்திரன், ராஜேஷ் கண்ணா, மதீஷ் ராஜ், சுப்பிரமணியன், அரவிந்த் , பெரியசாமி, ராகுல் ஆகியோ ரின் கூரைவீடுகளுக்கும் பரவியது.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை, கீழ்வேளூர், வேளா ங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பல மணிநேரம் போராட்ட த்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

    ஆனாலும் இந்த தீவிபத்தில் 11 கூரைவீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலானது. மேலும் வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த தீவிபத்தில் ஒரு ஆடும் இறந்தது.

    இதன் சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தகவல் அறிந்ததும் அமைச்சர் ரகுபதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9 ஏக்கரில் முந்திரி விவசாயம் செய்து வந்தார்.
    • பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமானது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் மற்றும் பழையாறு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் உள்பட 9 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி விவசாயம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது முந்திரி தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த பூம்புகார் மற்றும் சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
    • வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.

    எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.

    ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
    • ரூ.5 ஆயிரம் நிவாரணம், காய்கறி மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளியான நடேசன் என்பவரின் கூரை வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகிவிட்டது.

    இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் படி, பேராவூரணி தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிவாரணத் தொகையும், காய்கறி மற்றும் அரிசி வழங்கினார்.

    இந்நிகழ்வில் கட்டையங்காடு ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வ குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராசு, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன் கூட்டுறவு சங்க தலைவர் வே.கூத்தலிங்கம், இளைஞரணி செயலாளர் கே.எஸ்.வினோத் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வலங்கைமான் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக கூடுகட்டியிருந்த கதண்டுகளை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.
    நீடாமங்கலம்:
     
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா வில் உள்ள வலங்கைமாபுரம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக கதண்டு கூடுகட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், சிலரை கொட்டியும் வந்தன.

    இந்நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வலங்கைமான் தீயணை ப்புத்துறையினர்உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் கதண்டுகளை தீயிட்டு அழித்தனர்.

    இதை அகற்றநடவடிக்கை எடுத்த வலங்கைமான் பேரூராட்சி துணை த்தலைவர் மாறன் மற்றும் 11வது வார்டு உறுப்பினர் வசந்தி பாஸ்கர் ஆகியோருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    வலங்கைமான் பகுதிகளில் நாற்றங்கால் மற்றும் பருத்தி செடிகளை காட்டுப்பன்றிகள் அழித்து அட்டூழியம் செய்துவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் வீரமங்கலம், வேலங்குடி, படப் பைகுடி, வீராணம், மணலுர், உள்ளிட்ட வெட்டாறை ஒட்டிய கிராமங்களில் உள்ள வயல்களில் நாற்றங்கால் மற்றும் பருத்தி செடிகளை  காட்டுப்பன்றிகள்அழித்து அட்டூழியம் செய்துவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து, வீரமங்க லத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்ற விவசாயி கூறுகையில்:-

    நாற்றங்கால்கள் அமைத்து அது நெற் பயிராக வளரும் வரை குழந்தையைப் போன்று கூடவே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் கடந்த சில நாட்களாகவே காட்டுப்பன்றிகள் அருகிலுள்ள வெட்டாறில்  புதர்கள் மண்டி உள்ளன, அதில் காட்டுப் பன்றிகள் மறைந்து கொண்டு இரவு நேரங்களில் வெளி வந்து நெற்பயிர்களையும், நாற்றங்கால் களையும் நாசமாக்கி வருவதாக அவர் கூறினார்.

    வயலை சுற்றியும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரவு முழுவதும் கண்வி ழித்து வருகிறேன் ஆனாலும் ஒரு சில நாட்கள் கண்காணிப்பில் ஈடு படாமல் விட்டு விட்டால், அந்தப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து விடுகின்றன. அருகிலுள்ள  கிராமத்தில் வேட்டை நாய்களை கொண்டு ஒரு காட்டுப்பன்றியை  பிடித்துள்ளனர். 

    இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் இல்லையெனில்வரும் காலங்களில் காட்டுப்ப ன்றிகள் அதிகம் பெருகி வயல் முழுவதையுமே நாசமாக்கி உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதுவரை பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து ள்ளேன், இனி விதைநெல் வாங்குவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

    ×