search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கல்
    X

    நிவாரணம் வழங்கப்பட்டது.

    தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கல்

    • 4 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
    • நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுர் கண்ணந்தங்குடியில் நான்கு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

    இதில் பணம், நகை, மாணவர்களின் சான்றிதழ், நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் சாம்பலானது.

    இதையடுத்து தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் செயலாளர் செந்தில்குமார், நிவாரணமாக தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×