search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collapsed"

    • கரூர் செல்வநகர் காலனியில் தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
    • வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமிங்கி செல்வநகர்காலனி பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பலருக்கு தமிழக அரசு சார்பில் ஒட்டுவில்லை தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதேபோல் அந்தப் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (67). என்பவருக்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் ஓட்டு விலை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. வீடு கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அர்ஜுனன் என்பவரது வீடு மிகவும் பழுதடைந்தது இருந்தது.

    இந்நிலையில் அர்ஜுனன் மற்றும் அவரது குடும்பத்தினர் 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை சிதலடைந்து திடீரென விழுந்துள்ளது. அர்ஜுனனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளியில் வேலைக்கு சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதுகுறித்து அர்ஜுனன் புகளூர் தாசில்தார் முருகன், வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மலையப்பசாமி, வேட்டமங்கலம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது குறித்து விசாரணை நடத்தி சென்றனர். 

    • கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்துள்ளது.
    • மண்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த கனிஷ் மீது மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு ட்பட்ட தீபங்குடி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்.

    விவசாய கூலித் தொழிலாளி.

    இவரது மகன் கனிஷ் (வயது 8). இவர் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரர் பீட்டர் என்பவருக்கு திருமணம் நடக்கவிருப்பதால் தங்களது ஓட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்துள்ளது.

    மேலும் வேலையாட்கள் கீற்றுகளை பிரித்து விட்டு கீற்று போடுவதற்காக விட்டுச் சென்ற நிலையில் அந்த கூரைக் கொட்டகையில் உள்ள மண்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த கனிஷ் மீது மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

    சுவர் மேலே விழுந்ததால் சிறுவன் சத்தம் போட முடியாமல் சுவருக்கிடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

    இதனையடுத்து சிறிது நேரம் கழித்து இதனை கவனித்த குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து குடவாசல் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோ தனைக்காக வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    • விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர்.
    • அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகரில் விவசாயி வீரப்பன் (62) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மாலை மிளகாய் அறுவடை செய்யும் பணியில் 12 பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    குடிசை சரிந்து விழுந்தது

    இதையடுத்து விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர். அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது.

    இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பெண் பலி

    இந்த விபத்தில் சுமதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலா, மணி (39), சாலம்மாள் (55) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் இறந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை

    படுகாயம் அடைந்த வர்களில் மாதம்மாள் என்ப வர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
    • 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் சிராஜூதீன் நகர் பெரியசாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது.

    இந்த வாய்க்காலின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலத்தின் வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

    பாலம் கட்டப்பட்டு 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் புனரமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
    • பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    வாழப்பாடி:

    கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.

    கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • திடீரென செல்வன் நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார்.
    • சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் காந்தி காலனியை சேர்ந்தவர் செல்வன் (வயது 43). டிரம்ஸ் இசை கலைஞர். இவரது மனைவி ஆனந்தி கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர்களது ஊரில் உள்ள மகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவில் டிரம்ஸ் இசைப்பதற்காக செல்வன் சென்றார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகத்தில் டிரம்ஸ் அடித்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென செல்வன் நெஞ்சை பிடித்தபடி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக செல்வத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவில் திருவிழாவில் டிரம்ஸ் இசை கலைஞர் மாரடைப்பில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மின் கம்பங்கள்-மரங்கள் முறிந்து விழுந்தன.
    • பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    குறிப்பாக திண்டல், செங்கோடம்பாளையம், நசியனூர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம், பெருந்துறை சாலை பகுதிகளில் காற்று, மின்னல் இடியுடன் மழை பெய்தது.

    பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் அருகே சாலையோர மரம் விழுந்தது. நசியனூர் ராயபாளையம் உள்பட பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் முறிந்து விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 1-ல் மின்கம்பத்தின் மீது மின்னல் இடி தாக்கி மின்கம்பம் ஒடிந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. நசியனூர் ராயபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.

    இதேப்போல் நசியனூர் சாலை திண்டல்-ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கம்பம் சாய்ந்தும் கம்பிகளாலும் பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பாதாள சாக்கடை குழிகள் இருப்பது தெரியாமல் சிக்கி கொள்கின்றனர்.

    இந்நிலையில் நேற்றிரவு ஈரோட்டில் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கிரேன் மூலம் சரக்கு வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு வ.உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சத்ரபது ரெயில் நிலையத்தின் அருகே நடை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். #Mumbai #CSMT #footoverbridgecollapsed
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது சத்ரபதி ரெயில் நிலையம். இன்று மாலை வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன்கீழ் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர்.



    தகவலறிந்து உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

    இடிபாடுகளில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. #Mumbai #CSMT #footoverbridgecollapsed
    பிரேசிலில் அணை உடைந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. #Brazildam

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த அணை உடைந்தது.

    உடனே அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.

    இச்சம்பவத்தில் இரும்புதாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

    மொடக்குறிச்சி அருகே எதிரே வந்த கார் மீது ஈரோடு பஸ் மோதி ரோட்டோர பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோட்டில் இருந்து வெள்ள கோவிலுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர், மேட்டுபாளையத்தில் ஒரு வளைவில் திரும்பியது. அப்போது எதிரே எல்லக் கடையில் இருந்து ஒரு கார் வந்தது. பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதியது. பெரும் விபத்தை தவிர்க்க பஸ் டிரைவர் பஸ்சை ஒடித்து ஓட்டிய போது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ரோட்டோரத்தில் இறங்கி அதில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாய்ந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக, பஸ் கவிழவில்லை.

    இதனால் பஸ் பயனிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் முன்பகுதியில் இருந்த 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் காரின் முன் பகுதி நொருங்கியது. பஸ்சின் முன் பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மொடக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்து 5 பேர் படு காயம் அடைந்தனர்.
    ஊட்டி:

    மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து 15 பேர் தங்களது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18-ந் தேதி வந்தனர். 3 நாட்கள் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் 15 பேர் மைசூருக்கு இயக்கப்படும் சொகுசு பஸ்சில் நேற்று ஊட்டியில் இருந்து கோலாப்பூர் செல்வதற்காக புறப்பட்டனர். அந்த சொகுசு பஸ் ஊட்டி, தலைகுந்தா, பைக்காரா வழியாக கூடலூர் சென்று மைசூருக்கு செல்கிறது.



    பெங்களூருவை சேர்ந்த டிரைவர் மதுக்குமார் (வயது 45) பஸ்சை ஓட்டினார். ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன் சந்திப்பு அருகே சொகுசு பஸ் சென்ற போது, ஒரு வளைவில் திடீரென எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த மரத்தில் பஸ் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சதாசிவ், ஆஷாராணி, கனஉதானி, ராய்ப்பாகி, சிவநாயக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயம் அடைந்த 5 பேருக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு விசாரித்தார். ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் பலத்த சூறாவளியிடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்கம்பம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

    இந்நிலையில் நேற்று மாலையும் கல்லாறு, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக இன்று அதிகாலை மேட்டுப்பாளையம்- ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு, பர்லியார் இடையே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டு சாலையோரத்தில் இருந்த ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதி வழியே திருப்பூரை சேர்ந்த 6 பேர் ஊட்டிக்கு புறப்பட்டனர். பாறை சரிந்த இடம் அருகே வந்தபோது கார் விபத்துக்குள்ளானது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து லேசான காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    காயம் அடைந்தவர்களில் திருப்பூர் மங்கலம் ரோடு 4-வது தெரு சின்சாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்த முத்து ரத்தினம் (36) என்பது மட்டும் தெரியவந்தது. மற்ற 5 பேர் பற்றிய விபரம் உடனே தெரியவில்லை. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×