என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "150"
- மணியனூர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு, மணியனூர் சுற்று வட்டா ரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்ன தானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் மணியனூர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தாத காப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த பிச்சா கார்த்தி என்கிற கார்த்திக் ( வயது 24), மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்கிற லட்சுமணன் (38) ஆகிய 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டி ருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிட மிருந்து ரூ.11,150 மதிப்புள்ள 1.150 கிலோ கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்