search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swachh Bharat Mission"

    பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநில அரசுகள் தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடும் நிலையில் ராஜஸ்தான் மந்திரி திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெய்ப்பூர்:

    பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசு தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக இங்குள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களால் இல்லாத மாவட்டங்களாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அஜ்மீர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஷாம்பு சிங் கேட்டசர், திறந்தவெளியில் ஒரு மதில் சுவரின் மேல் சிறுநீர் கழிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் சிறுநீர் கழிக்கும் இடத்தின் மிக அருகாமையில் பா.ஜ.க. போஸ்டர் ஒன்றும் காணப்படுகிறது.

    இதுதான், திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்ட தூய்மை இந்தியா என்னும் அடைமொழியுடன் சமூகவலைத்தளங்களில் பதிவாகிவரும் இந்த புகைப்படம் தொடர்பாக ஷாம்பு சிங் கேட்டசர் விளக்கம் அளித்துள்ளார்.


    அந்த பகுதியில் சில கிலோமீட்டர் சுற்றளவில் பொது கழிப்பறை எதுவும் கிடையாது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது காலகாலமாக இருந்துவரும் பழக்கம்தான். இயற்கையின் அழைப்பை சமாளிக்க முடியாமல் நான் திறந்தவெளியில் சிறுநீர் கழித்ததால் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது என்று அவர் தெரிவித்துள்ளார். #RajasthanMinisterurinating #ShambhuSinghKhetsar #SwachhBharatAbhiyan
    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தல்
    வில்லியனூர்:

    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

    கவர்னர் கிரண்பேடி இன்று காலை வில்லியனூர் அருகே அகரத்தில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கிருந்த கல்லூரி நிர்வாகத்தினரிடம் மழைநீரை சேகரிக்க எவ்வளவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது? மருத்துவ கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? கல்லூரி வளாகத்தில் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன? என்று கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கல்லூரி நிர்வா கத்தினர் மழைநீரை சேமிக்க 20 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என் றும், கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும், கழிவு நீரை சுத்திகரித்து தோட்டங்களுக்கு பயன்படுத்துவதாக பதில் அளித்தனர்.

    இதற்கு பாராட்டு தெரிவித்த கவர்னர் கிரண்பேடி கல்லூரி வளாகத்தில் மேலும் மழை காலங்களுக்குள் 100 மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும், 1 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இதனை செயல்படுத்தி தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கவர்னர் கூறினார்.

    அதோடு தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு மழைநீர் சேமிப்பு தொட்டிகளை பார்வையிட்டார்.

    அப்போது அங்கிருந்த பல்கலைக்கழக என்னீயர்களிடம் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் மழை நீரை சேகரித்து நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என்றும், அதற்காக கூடுதல் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உடன் இருந்தார்.
    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 8.39 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். #SwachhBharatMission #HouseholdToilets
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்த உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், கிராமப்புற சுகாதார மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.

    ‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புற சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ல் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது’ என்றார் பரமேஸ்வர ஐயர். #SwachhBharatMission #HouseholdToilets
    தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. #WHO #SwachhBharatMission
    புதுடெல்லி:

    துய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் குப்பை கூளங்கள் அகற்றப்பட்டு சுற்றுப்புற சூழல் மாசு பாட்டில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

    இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

    இதனால் கொடிய வயிற்றுப் போக்கு நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.


    சுகாதார குறைபாடு மற்றும் சத்துணவு இன்மையால் இந்தியாவில் குறை பிரசவம் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குறை பிரசவம் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. 1 கோடியே 40 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    இத் தகவலை குடிநீர் மற்றும் உடல் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் பரமேஸ்வரன் அய்யர் ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். அப்போது கடும் பணி சுமைக்கு இடையே தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக செயல்படுத்திய தனது குழுவை பாராட்டினார். #WHO #SwachhBharatMission
    ×