என் மலர்
நீங்கள் தேடியது "Rajasthan minister"
- பார்மர் மாவட்டத்தில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சனை பல ஆண்டாக நீடித்து வருகிறது.
- ஜோஜாரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அங்குள்ள பார்மர் மாவட்டத்தின் பலோட்ரா பகுதியில் மாசடைந்த தண்ணீர் தேங்கும் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஜோத்பூர், பாலி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், ஜோஜாரி ஆற்றில் கலக்கின்றன.
அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, தொழிற்சாலை கழிவுகள் மாசடைந்த நீராக கரையோர பகுதிகளில் தேங்குகின்றன. வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்து விடுகிறது. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பார்மர் பகுதிக்குச் சென்ற ராஜஸ்தான் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை மந்திரி கே.கே.விஷ்ணோயிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், பார்மர் மாவட்டத்தில் பகவான் கிருஷ்ணர் மிகவும் தாராள மனதுடன் இருக்கிறார். நமது முதல் மந்திரி, பகவான் கிருஷ்ணரை வேண்டும் போதெல்லாம் இங்கு மழை கொட்டித் தீர்க்கிறது. பிறகு, இந்திரனிடம் சொல்லி, மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர மழையை தணிக்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.
கே.கே.விஷ்ணோயின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக, பார்மர் மாவட்டம் பேடூ தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹரிஷ் சவுத்ரி கூறுகையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சனையின் பொறுப்பை கடவுள்மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. மந்திரி, பிரச்சனையை திசைதிருப்புவது மட்டுமின்றி, பிரச்சனையை அரசாங்கத்தால் சரிசெய்ய முடியாது, பிரார்த்தனையால்தான் பலன் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் கூறுகிறார். இது அபத்தமானது என்றார்.
- ராஜஸ்தான் மாநில பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி.
- பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் பாபுலால் கார்டி. இவர் உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றி பெற்றவர்
இந்நிலையில், பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக் கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக் கொடுப்பார். வேறு என்ன பிரச்சனை உங்களுக்கு? என கேள்வி எழுப்பினார்.
பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அசோக் கெலாட் முதல்- மந்திரியாக பொறுப் பேற்றார்.
கெலாட் மந்திரி சபையில் மம்தாபூபேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை மந்திரியாக உள்ளார். தனி பொறுப்புடன் அவர் இந்த இலாகாவை கவனித்து வருகிறார்.
கெலாட் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள ஒரே பழங்குடியின உறுப்பினர் மம்தாபூபேஷ் ஆவார். மேலும் அவர் மந்திரி சபையில் உள்ள ஒரே பெண் மந்திரி ஆவார்.
இந்த நிலையில் எனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று பெண் மந்திரி மம்தா பூபேஷ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ரெனி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
எனது சாதிமக்களுக்கு வேலை செய்வதே எனது முதல் பணி. அவர்களை மேம்பாடு அடைய செய்வதற்கே முக்கியத்துவம் அளிப்பேன். எனது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் பலன் அடைய பாடுபடுவேன். இதுவே எனது நோக்கமாக இருக்கும். மற்ற சமூகத்திற்கு இணையாக எனது சாதியினரை கொண்டு வருவேன்.
இவ்வாறு மம்தா பூபேஷ் பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் முகேஷ்பரீக் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்று கூறி மம்தா பூபேஷ் பதவி ஏற்றார்.
தற்போது அவர் தனது சமூகத்துக்கு முன்னிரிமை அளிப்பேன் என்கிறார். இது தான் காங்கிரசின் நிலைப்பாடும். சாதி வாரியாக மக்களை துண்டாட நினைக்கிறது” என்றார்.
இந்த நிலையில் பெண் மந்திரி மம்தா பூபேஷ் தான் அப்படி பேசவில்லை என்று மறுத்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரையும் மதிக்கிறேன். அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். #MamtaBhupesh #congress #bjp
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசு தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக இங்குள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களால் இல்லாத மாவட்டங்களாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அஜ்மீர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் பங்கேற்ற அம்மாநில மந்திரி ஷாம்பு சிங் கேட்டசர், திறந்தவெளியில் ஒரு மதில் சுவரின் மேல் சிறுநீர் கழிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் சிறுநீர் கழிக்கும் இடத்தின் மிக அருகாமையில் பா.ஜ.க. போஸ்டர் ஒன்றும் காணப்படுகிறது.

அந்த பகுதியில் சில கிலோமீட்டர் சுற்றளவில் பொது கழிப்பறை எதுவும் கிடையாது. திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது காலகாலமாக இருந்துவரும் பழக்கம்தான். இயற்கையின் அழைப்பை சமாளிக்க முடியாமல் நான் திறந்தவெளியில் சிறுநீர் கழித்ததால் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது என்று அவர் தெரிவித்துள்ளார். #RajasthanMinisterurinating #ShambhuSinghKhetsar #SwachhBharatAbhiyan






