என் மலர்
நீங்கள் தேடியது "Controversy speech"
- கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று 2ம் கட்டமாக விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக இன்றும் த.வெ.க. தலைவர் விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும்போது சில மாணவ- மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் ஹார்டின் போன்ற சைகை காட்டியும், சிலர் ரோஜா பூ கொடுத்தும், சிலர் கட்டி அணைத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்சையாக பேசியுள்ளார்.
இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் வேல்முருகன் பேசியதாவது:-
நடிகனை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.. 2 கிராம் பரிசு கொடுத்ததும் நம் முட்டாள் பயளுங்க.. அறிவு வேணாமா தமிழனுக்கு..?
பெற்று, வளர்த்து ஆளாக்கி நாளை மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பெண்ணை அப்பா, அம்மா, ஊடகப் பத்திரிகையாளர்கள் என அத்தனைப் பேர் முன்பு ஒரு சினிமா கூத்தாடிப் பயனை கட்டிப்பிடிக்க எப்படி அனுமதிக்கிற..?
இது என்ன ஈனப்பிறவி..? தமிழனுடைய பிறவியா இது? விஜய் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அஜித் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. ரஜினி நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அதைவிட்டு அப்படியே விஜய் அண்ணா என்று.. பெற்றோர்கள் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறீங்க..?
இதுவா தமிழ் சமூகம்? இதுவா தமிழருடைய பாரம்பரியம்? இதுவா வீரக்குல பெண்கள் வாழ்ந்த மண் என்கிறோம் ?
எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயளுகளுடைய பிறந்தநாள் என்றால் என்ன..? அவர்களின் படம் நூறு நாள் ஓடினால் என்ன? ஓடவிட்டால் என்ன ? அவனா உனக்கு சோறு போடப் போறான்..? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட போறான்? அவனா பள்ளிக்கூடம் கட்ட போறான் ?
இவ்வாறு அவர் பேசினார்.
- எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
- புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.
அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என டிஜபி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
- ஊடுருவல்காரர்களுக்கு உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ?
- இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
ராஜஸ்தானில் நேற்று பரப்புரை செய்த பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்புக் கருத்துகளை பேசிய நிலையில், இன்று உ.பி. அலிகாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரிகளின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று பேசிய பிரதமர் மோடி," அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ? என கேட்டிருந்தார்.
நேற்று சர்ச்சையாக பேசிய நிலையில் இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி பேசியதாவது:-
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால், லஞ்சம் கொடுத்த அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹன் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது.
ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
- தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலமாக பேசி இருக்கிறார்.
திருச்சி:
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக பேசியிருந்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அரசு வக்கீல் முரளி கிருஷ்ணன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள 2 வரிகளை தூக்கியதற்காக கொந்தளிப்பதா? என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று மிகவும் கண்ணியக் குறைவாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
இது சமூக வலைதளத்தில் பரவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மனச்சோர்வு அடைந்து, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்தை சீமான் மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவின்றி தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீது உள்ள நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே சீமான் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தேச துரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
- கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க போலீசார் முடிவு.
- கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக கூறியிருக்கிறார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களை பாது காப்பதற்காக வன்கொடுைம தடுப்பு சட்டத்தை போல புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் எழும்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்படி கஸ்தூரி மீது கலவரத்தை தூண்டுதல், 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி குறிப்பிட்ட நாளில் நேரில் வரவழைக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார். இது பற்றியும் ஆலோசித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடிகை கஸ்தூரி மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சியை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நடிகை கஸ்தூரி மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், ஆண்டிப்பட்டியில் நடிகை கஸ்தூரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர், துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மற்றும் உள்துறை மந்திரி வாங்கலபுடி அனிதா ஆகியோரது படங்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்து வருகின்றனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திராபுரம் மோரம்புடியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் பத்மாவதி நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பொம்மூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
- முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவானார்.
பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.

எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை விசாரிக்கும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததால் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
- இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது பா.ஜ.க.வை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
இந்த கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

மராட்டியத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது கையில் ஒரு சிறிய சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க திட்ட மிடுகிறார்' என்று பிரசாரம் செய்தார்.
மேலும் அதானிக்கும் மோடிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், அதானிக்கு நாட்டை மோடி தாரைவார்த்து விட்டதாகவும் பிரசாரம் செய்தார். என்றாலும் மராட்டிய தேர்தலில் காங்கிரசுக்கு படு தோல்வியே மிஞ்சியது.
என்றாலும் ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை. கடந்த 25-ந்தேதி முதல் பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து தினமும் அவர் பாராளுமன்றத்தில் அதானி பிரச்சனையை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்கிறார்.
அதோடு பாராளுமன்றத்துக்கு வெளியே வந்து தினமும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்துகிறார். இதனால் முக்கிய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேச இயலவில்லை என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ராகுல் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மழை சேதத்திற்கு கூடுதல் நிதி கேட்டு திட்டமிட்டு இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மேற்கு வங்காள பிரச்சனையை எழுப்ப ஆர்வமாக இருந்தனர்.
சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி பிரச்சனையை மட்டும் பேசியதால் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கத் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்ட ணிக்கு தலைமையேற்று வழி நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.
மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

அதுபோல இந்தியா கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நேரடியாகவே ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது என்று கூறி உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி என இரண்டிலும் இடம் பெறாத ஆந்திர மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மம்தா திறமையானவர். அவரால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் அணியை திறம்பட வழிநடத்த முடியும்" என்று கூறியுள்ளது.
இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலை காரணமாக அந்த கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் சர்ச்சை மேலும் விரிவடைந்துள்ளது. ராகுலின் தனிச்சசையான முடிவு காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக சரத்பவார், லல்லுபிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கருதுகிறார்கள்.
இது இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஆம்ஆத்மி கட்சி அதற்கு தயாராகி வருகிறது. வேட்பாளர்களையும் அந்த கட்சி அறிவித்து விட்டது. டெல்லி தேர்தலில் காங்கி ரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கூறியுள்ளது.
இதன் மூலம் இந்தியா கூட்டணியின் நோக்கம் சிதைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
ஆனால் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை விட்டுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயங்குகிறார்கள். தலைமை பதவியை விட்டுக் கொடுத்தால் சாதாரண கட்சி போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று ராகுலும், கார்கேவும் கருதுவதாக தெரிய வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தனித்து களம் இறங்குவதுதான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறி வருகிறார்கள்.
மாநில சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள மாநிலங்களில் வெறும் 30 அல்லது 40 இடங்களில் மட்டும் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனம் தளர்ந்து போகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆக முடியாத நிலை நீடிக்கிறது.
எனவேதான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரும் கட்சியை விட்டு விலகிச் செல்கிறார்கள். இதை தடுத்து காங்கிரசை வலுப்படுத்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியில் இடம் பெறாமல் தனித்து போட்டியிடுவதுதான் நல்லது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது.
- அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திராவிடர் கழகத்தினர் சென்னையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்
நிலக்கோட்டை திராவிட கழக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்த்தை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார். மக்கள் மத்தியில் தவறான கருத்தை பதிவு செய்து, அரசியல் லாப நோக்கத்திற்காக தரக்குறைவான அருவருக்கத்தக்க வகையில் பேட்டி அளித்துள்ளார்.
அது எங்கள் கட்சியினர் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து, வலைதளங்களில் உள்ள பெரியார் குறித்து சீமான் பேசிய வீடியோவை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் திண்டுக்கல் பெரியார் சிலை அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்று திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.
நெல்லை
நெல்லை மாநகரில் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் வேல்முருகன் புகார் அளித்தார். அதில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 192 (கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல்), புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 352 (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
கோவை
சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் விடுதலை இயக்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், உள்ளிட்ட 7 அமைப்புகள் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சுந்தராபுரம், போத்தனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், திராவிடர் விடுதலை இயக்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து, பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கோவையில் உள்ள தடாகம், பெரியநாய க்கன்பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, மகாலிங்கபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் சீமான் மீது மொத்தம் 8 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான் மீது இதுவரை கோவை, கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீமான் மீது போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- சர்ச்சையான கருத்துக்களை பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
- தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க திட்டம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் கூறியதாக சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல், எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்களையும் பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
இந்த நிலையில் பெரியாரின் நன்மதிப்பையும், அவரது புகழையும் குறைக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, தரவுகளும் இன்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
சீமானின் இந்த பேச்சு பெரியாரின் புகழை சீர்குலைப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டு பேசியதாக தெரிகிறது.
எனவே, சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், ஆதாரமற்ற தரவுகளை கொண்டு அவதூறாக பேசியது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி செந்தில், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






