search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Award Ceremony"

    • பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வி ஆண்டிற்கான மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது.

    பள்ளியில் செயல்பட்டு வரும் பல்வேறு மன்றங்களின் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளிலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே, டேக்வாண்டோ, சதுரங்கம்,கேரம்,நீச்சல், இறகுப்பந்து, கோ - கோ மற்றும் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளியின் பொருளாளர் லதா கார்த்திகேயன் மற்றும் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றி தழ்களையும், கேடயங்களையும் வழங்கினர்.

    முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். முடிவில் பள்ளியின் கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது.
    • கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது. கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். நிர்வாகிகள் நல்லுசாமி, கோபால், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரி, தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மதுரை பேராசிரியர் சுந்தரத்துக்கு கம்பர் விருதும், பெங்களூரு ராமசாமிக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது.

    என்.பி.எஸ்.சுந்தராஜன், டாக்டர். ராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சார்பில் கல்லாதது கம்பன் அளவு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து ராசிபுரம் பரமேஸ்வரனுக்கு நற்றமிழ் நாயகர் விருதும், கந்தசாமிக்கு சமூக ஆர்வலர் விருதும், இயற்கை விவசாயி கண்ணகிக்கு வேளாண் வித்தகர் விருதும், கிருஷ்ணமூர்த்திக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

    வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடுவர் ராஜா தலைமையில் இலங்கை வேந்தன் ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம் முடிவில்லா ஆனவமா, முறையற்ற காமமா என்ற தலைப்பி ல் பட்டி மன்றம் நடக்கிறது.

    அதில் ராஜ பாளையம் ராஜ்கு மார், திருச்சி மாது, மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    • நகராட்சி அதிகாரி பிரபாகரன் , அன்னை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
    • துணை செயலாளர் மனோஜ், இளைஞர் அணி பாலாஜி, கதிர், ப்ரீத்தீவு, இசை,முத்து மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் நேதாஜி நகரில் உள்ள நேதாஜி நகர் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி நடைபெற்றது .

    இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகராட்சி அதிகாரி பிரபாகரன் , அன்னை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

    மேலும் தி.மு.க. ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு , திராவிடர் கழகம் காளி, தி.மு.க. கிளைச் செயலாளர் ராகேஷ், துணை செயலாளர் மனோஜ், இளைஞர் அணி பாலாஜி, கதிர், ப்ரீத்தீவு, இசை,முத்து மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை புனித பேட்ரிக் பள்ளியில் 17-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை புனித பேட்ரிக் பள்ளியில் 17-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில டேபிள் டென்னிஸ் கழகத் தலைவர் நமச்சி வாயம் கலந்து கொண்டார்.

    துணைத் தலைவர் சுந்தர வரதன், மாநில டேபிள் டென்னிஸ் கழக பிரதிநிதிகள் குணசேகரன், அந்தோணி பிரிட்டோ, ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் சுழற் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் பிரடரிக் வரவேற்று பேசினார். பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜித்தா பிரடரிக், பள்ளியின் முதல்வர் அல்போன்ஸ் கில்டா, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை பள்ளியின் மாணவன் விஷ்ணு, மாணவி அனன்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவன் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஹேமலதா, ராயர், வனிதா, மணிவண்ணன் , ஹேமந்த் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான 3 நாள் கூடோ பயிற்சி முகாமை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தில் நடத்தியது.
    • கூடோ வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய கூடோ சங்கமும் புதுவை மாநில கூடோ சங்கமும் இணைந்து புதுவை மாநில அளவிலான 3 நாள் கூடோ பயிற்சி முகாமை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தில் நடத்தியது.

    இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கூடோ வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    பின்னர் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பாட்டன. நிகழ்ச்சிக்கு புதுவை கூடோ சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் கவுரவ விருந்தி னராக கலந்து கொண்ட கோத்தாரி மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் கோத்தாரி மற்றும் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் அகில இந்திய கூடோ பொருளாளர் ஜாஸ்மின் மகானா, சீனியர் பயிற்சியாளர்கள் மொகல் சாகித்யா, ராணா, நிர்வாகிகள் கோவிந்தராஜ், நடராஜ், செந்தில்வேல், பாலச்சந்தர், ஆறுமுகம், லட்சுமணன், கதிர்காமம் அசோக், பாலாஜி தியேட்டர் அசோக், காலப்பட்டு செல்வம், அண்ணா நகர் செல்வம், மகேஷ், காலாப்பட்டு சசிகுமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.
    • அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் நவாஸ்கனி எம்.பி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் சரியாக 3 மணிக்கு விழா தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் 10 நிமிடத்திற்கு முன்பாக வந்ததால் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் சரியாக 3 மணிக்கு விழா மேடைக்கு நவாஸ்கனி எம்.பி. வந்தார். அப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை கண்ட அவர், நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.

    இதனை கண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி.யை சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நவாஸ்கனி எம்.பி. நான் வருவதற்கு முன்பாக நிகழ்ச்சியை தொடங்குவதாக இருந்தால், உங்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாமே? என்னை எதற்காக அழைக்க வேண்டும்? என கடுமையாக சாடினார்.

    இதனால் அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் மேடையில் வைத்தே வாக்குவாதம் செய்தனர். ஒரு பக்கம் அமைச்சர், மறு பக்கம் எம்.பி., நடப்பதோ அரசு நிகழ்ச்சி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

    அப்போது அருகிலிருந்த நவாஸ் கனி எம்.பி.யின் ஆதரவாளர்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனை தள்ளி விட்டனர். இதில் கலெக்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை அவரது உதவியாளர்கள் தூக்கினர். இதனால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியில் நிகழ்ச்சியை புறக்கணித்த நவாஸ் கனி வெளிநடப்பு செய்தார்.

    ஏற்கனவே மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் அரசு நிகழ்ச்சியில் நேருக்கு நேராக அமைச்சரும், எம்.பி.யும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

    இந்நிலையில் அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார், கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கலெக்டரை தள்ளிவிட்டதாக நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளரான சாயல்குடியை சேர்ந்த விஜயராமு என்பவர் மீது போலீசார் இன்று வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது 506 (ii), 294 (பி) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் விஜயராமுவை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரத்தில் எம்.பி.யின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் வனத்துறை அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் தலைமை தாங்கினார். உதவி வன அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து ஜூன் 1-ந்தேதி முதல் 4 வரை மாணவர்களுக்கான ஓவியம் வரைதல், கவிதை, வினாடி-வினா போட்டிகள் நடந்தது. இதில் மீனவ கிராமங்களை சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் ராமநாதபுரம் வனஅலுவலர்கள் நவநீதன், ராஜேஸ் பங்கேற்றனர்.

    • பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன.
    • பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா ஜூன் 10-ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம், இறகுப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, மேசைப்பந்து மற்றும் நீச்சல் என 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    இதில் முதல் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.1000 என மொத்தம் 1,675 வீரா், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காரைக்குடி அருகே சிறுவர் கால்பந்து போட்டியை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார் .
    • பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி புளூஸ் கால்பந்து கழகம் சார்பில் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அணிகள் கலந்து கொண்டன. 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி ஆரோகிக் அகாடமி முதலிடத்தையும், ஒரத்தநாடு ஒய்.பி.ஆர். அகாடமி 2-ம் இடத்தையும், கோட்டையூர் முத்தையா அழகப்பா பள்ளி3-ம் இடத்தையும் வென்றன. 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காரைக்குடி காட்டுத்தலைவாசல் அப்பாஸ் மெமோரியல் அணி முதலிடத்தையும், சென்னை அணி 2-ம் இடத்தையும், ஒய்.பி.ஆர். அணி 3-ம் இடத்தையும் வென்றன.

    போட்டிகளை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், சிவகங்கை மாவட்ட கால்பந்து கழக தலைவருமான கே.ஆர்.ஆனந்த் மற்றும் பலர் தொடங்கி வைத்தனர். பரிசளிப்பு விழாவில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    • கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டி ஊர்க்காவல் படை மைதானத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும், வத்திராயிருப்பு வீ.கே.ஏ.என். அணியும் மோதியது. இதில் மீனாட்சிபுரம் அணி வெற்றி பெற்றது. வத்திராயிருப்பு அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது. கிருஷ்ணாபுரம் கே.எஸ்.சி. அணிக்கு 3-வது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடி குழு அணிக்கு 4-வது பரிசும் கிடைத்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கே.எஸ்.ஆர். பஸ் அதிபர் ஜெகதீஷ் சவுந்தர் பரிசுகளை வழங்கினார். சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். ராமராஜ், ராதாகிருஷ்ண ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி குழு தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனி முத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.
    • முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.,டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2022-23ம் கல்வியாண்டில் படிப்பு, விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழில்துறையை சேர்ந்த சிவபிரகாஷ், யுகேபிஎம்.கார்த்திக், சென்னியப்பன், பூபதி, ரமேஷ்குமார், விசித்ரா செந்தில்குமார், மாரிமுத்து கலந்து கொண்டனர்.

    பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணை ப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    முத்தூர் :

    முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு ஆற்றல் அறக்கட்டளையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், முத்தூர், செட்டியார்பாளையம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி குழு தலைவர் பி.அய்யாத்துரை தலைமை தாங்கினார். தாளாளர் மற்றும் செயலாளர் எம்.கே.பழனிசாமி, பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.பி.சரவணன் வரவேற்று பேசினார்.

    விழாவில் ஈரோடு ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் தற்போதைய 2022-2023-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக தேர்வில் முதன்மையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி, விளையாட்டு, கலை, இலக்கிய துறையில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் என மொத்தம் 60 மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது, பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு கல்வியில் முக்கியமான காலகட்டம் கல்லூரி படிப்பு ஆகும். மேலும் மாணவர்கள் கல்வியில் முழுமையான கவனம் செலுத்தி சிந்தனையை சிதறவிடாமல் பட்டப்படிப்பு பயில வேண்டும். ஆற்றல் அறக்கட்டளையின் மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் கட்டிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் கல்வியே சிறந்த செல்வம் என கருதி நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டில் சிறப்பான எதிர்காலத்துடன் வாழ்வதற்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் துணை செயலாளர் வி.ஜி.ரமேஷ், செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை தங்கமணி நன்றி கூறினார்.

    ×