என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Award Ceremony"

    • த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
    • நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெற்றது.

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில், தவெக சார்பில் 4 கட்டங்களாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது.

    நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

    • கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று 2ம் கட்டமாக விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக இன்றும் த.வெ.க. தலைவர் விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும்போது சில மாணவ- மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் ஹார்டின் போன்ற சைகை காட்டியும், சிலர் ரோஜா பூ கொடுத்தும், சிலர் கட்டி அணைத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்சையாக பேசியுள்ளார்.

    இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் வேல்முருகன் பேசியதாவது:-

    நடிகனை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.. 2 கிராம் பரிசு கொடுத்ததும் நம் முட்டாள் பயளுங்க.. அறிவு வேணாமா தமிழனுக்கு..?

    பெற்று, வளர்த்து ஆளாக்கி நாளை மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பெண்ணை அப்பா, அம்மா, ஊடகப் பத்திரிகையாளர்கள் என அத்தனைப் பேர் முன்பு ஒரு சினிமா கூத்தாடிப் பயனை கட்டிப்பிடிக்க எப்படி அனுமதிக்கிற..?

    இது என்ன ஈனப்பிறவி..? தமிழனுடைய பிறவியா இது? விஜய் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அஜித் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. ரஜினி நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அதைவிட்டு அப்படியே விஜய் அண்ணா என்று.. பெற்றோர்கள் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறீங்க..?

    இதுவா தமிழ் சமூகம்? இதுவா தமிழருடைய பாரம்பரியம்? இதுவா வீரக்குல பெண்கள் வாழ்ந்த மண் என்கிறோம் ?

    எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயளுகளுடைய பிறந்தநாள் என்றால் என்ன..? அவர்களின் படம் நூறு நாள் ஓடினால் என்ன? ஓடவிட்டால் என்ன ? அவனா உனக்கு சோறு போடப் போறான்..? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட போறான்? அவனா பள்ளிக்கூடம் கட்ட போறான் ?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமையில், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம் அகம்மது முன்னிலையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    பள்ளியின் தாளாளரும், பேரூராட்சி சேர்மனுமான ஷாஜஹான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காதர் ஷா, லியாகத் அலி, காதர்முகைதீன், வரிசைமுகம்மது, மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னாள் ஜமாத் தலைவர் இக்பால், பாசில்அமீன், கல்வி குழு தலைவர்காதர் முகைதீன், முகமது மீரா, சீனிமுகம் மது உள்பட பலர் பங்கேற்றனர்.

    • குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நாராயணன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி , முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை திருவிழா காலங்களுடன் பிணைந்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் நலன் காக்க கரும்பு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என்றார். 

    • இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.

    பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • குருசாமிபாளையம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் புரவலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் 100 மாணவர்களை நூலக உறுப்பினராக சேர்க்க ரூ.2 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் புரவலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ரவி கலந்து கொண்டு 65 புரவலர்களுக்கு பட்டயம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் 9 பேர் புதிய புரவலராக சேர்ந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் 100 மாணவர்களை நூலக உறுப்பினராக சேர்க்க ரூ.2 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் தாளமுத்து தலைமை தாங்கினார். சதானந்தம் வரவேற்றார். பிள்ளா நல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    ஊர் பெரிய தனக்காரர் ராஜேந்திரன், செங்குந்தர் மகாஜனப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி, நாகராஜன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமன், டி.எஸ்.குணசேகரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட நிர்வாகிகள் அலமேலு நாகமாணிக்கம், ஜோதி, சக்திவேல், சீனிவாசன், சண்முகசுந்தரம், கார்த்திகேயன், மேகநாதன், உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.

    • மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
    • முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.

     திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். 2021-22ம் கல்வி ஆண்டில் பாடவாரியாக 100 / 100மதிப்பெண்கள் பெற்ற 78 மாணவர்களுக்கு பாரத் டையிங் முருகநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 2022 -23 நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் வகுப்புவாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள், தந்தையர் தினம், நிறுவனர் தினம், குழந்தைகள் தினம், ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினம், தீரன் சின்னமலை பிறந்த தினம் போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெல்வின் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பாபு அந்தோணி, ஆதவன் காட்டன்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பூபதி சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினர். ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பிரதாப், நட்ராஜ் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில் 1060 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். 

    • 2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
    • மாணவர்களிடையே உழைப்பின் நோக்கம் வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.

    திருப்பூர் :

    திருப்பூர்,காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு கோவை பேன்டெக்ஸ் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான ஏ.கே.எஸ்.பி.தனசேகர் மற்றும் பொள்ளாச்சி பாரதி வித்யா பவன் பள்ளியின் நிறுவனத் தலைவரும் ரொட்டேரியனுமான

    ஏ. செந்தில்குமார் காளிய ங்கராயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ ர்களிடையே உழைப்பின் நோக்கம்வெற்றி என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினர்.இதனைத் தொடர்ந்து 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி,விளையாட்டு, தமிழ் மன்றம், ஆங்கில மன்றம் போன்ற பல மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்க ளுக்கும், ஐஐடி, ஜேஇஇ ஒலிம்பியாய்டு, விவிஎம் ஆகிய போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கும், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கல்வி,விளையாட்டுப் போ ட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.முன்னதாகப் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஏ.வி.பி.கல்விக் குழுமங்களின் தாளாளர். கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். பள்ளியின் பொருளாளர் .லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் .ஜி பிரமோதினி வரவேற்றுப் பேசினார்.இறுதியாகப் பள்ளியின் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.நித்யா நன்றியுரை வழ ங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வி. மோகனாவுடன் இணைந்து பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    முத்தூர் :

    முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு ஆற்றல் அறக்கட்டளையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், முத்தூர், செட்டியார்பாளையம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி குழு தலைவர் பி.அய்யாத்துரை தலைமை தாங்கினார். தாளாளர் மற்றும் செயலாளர் எம்.கே.பழனிசாமி, பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.பி.சரவணன் வரவேற்று பேசினார்.

    விழாவில் ஈரோடு ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் தற்போதைய 2022-2023-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக தேர்வில் முதன்மையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி, விளையாட்டு, கலை, இலக்கிய துறையில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் என மொத்தம் 60 மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது, பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு கல்வியில் முக்கியமான காலகட்டம் கல்லூரி படிப்பு ஆகும். மேலும் மாணவர்கள் கல்வியில் முழுமையான கவனம் செலுத்தி சிந்தனையை சிதறவிடாமல் பட்டப்படிப்பு பயில வேண்டும். ஆற்றல் அறக்கட்டளையின் மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் கட்டிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் கல்வியே சிறந்த செல்வம் என கருதி நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டில் சிறப்பான எதிர்காலத்துடன் வாழ்வதற்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் துணை செயலாளர் வி.ஜி.ரமேஷ், செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை தங்கமணி நன்றி கூறினார்.

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.
    • முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.,டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2022-23ம் கல்வியாண்டில் படிப்பு, விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழில்துறையை சேர்ந்த சிவபிரகாஷ், யுகேபிஎம்.கார்த்திக், சென்னியப்பன், பூபதி, ரமேஷ்குமார், விசித்ரா செந்தில்குமார், மாரிமுத்து கலந்து கொண்டனர்.

    பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணை ப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×