search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AVP School"

    • விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர்.
    • பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் பள்ளியில் "உணவுத் திருவிழா" கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் கார்த்திகேயன் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் என்று அந்தந்த மாநிலங்களின் சிறப்புமிக்க உணவு வகைகளை சுவை மிகுந்ததாகவும், சத்துள்ளதாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தினர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவின் பயன்களையும் மற்றும் செய்முறை விளக்க த்தினையும் எடுத்துரைத்தனர். சமூக அறிவியல் துறையால் தானிய வகைகள் மூலம் அலங்கரிக்க ப்பட்ட 'உலக வரைபடம்" அனைவரையும் கவர்ந்தது. விழாவில் பெற்றோர்களும் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகமூட்டினர். பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதா பானு,மேலாளர் ராமசாமி ஆகியோர் மாணவர்களையும், அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    • கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
    • முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் உலக மாணவர் தின விழா கொண்டாடப்பட்டது.ஏ.வி.பி. சிபிஎஸ்சி., பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் சாந்தாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கனவுமெய்ப்படும் என்னும் தலைப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தியும், சிரிப்போடு கூடிய சிந்தனையை தூண்டியும் சிறப்புரை ஆற்றினார்.

    வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினருடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தநாளில் ஏ.வி.பி.கல்விக் குழுமங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 10000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டும் சுமார் 10,200 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் சார்பில் 100000-க்கும் அதிகமான மரங்களை வழங்கி பசுமைத்தாயகத்திற்கு அடிகோலிய ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதியின் சமூகப்பணியினை பாராட்டியும் ஏவுகணைநாயகனின் கனவினை நனவாக்குவதற்காகவும் ஏ.வி.பி.நாயகன் என்னும் விருது வழங்கப்பட்டது.

    முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். மாணவி அதுல்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.
    • முதல்வர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.,டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2022-23ம் கல்வியாண்டில் படிப்பு, விளையாட்டு என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழில்துறையை சேர்ந்த சிவபிரகாஷ், யுகேபிஎம்.கார்த்திக், சென்னியப்பன், பூபதி, ரமேஷ்குமார், விசித்ரா செந்தில்குமார், மாரிமுத்து கலந்து கொண்டனர்.

    பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணை ப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
    • முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.

     திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். 2021-22ம் கல்வி ஆண்டில் பாடவாரியாக 100 / 100மதிப்பெண்கள் பெற்ற 78 மாணவர்களுக்கு பாரத் டையிங் முருகநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 2022 -23 நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் வகுப்புவாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள், தந்தையர் தினம், நிறுவனர் தினம், குழந்தைகள் தினம், ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினம், தீரன் சின்னமலை பிறந்த தினம் போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெல்வின் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பாபு அந்தோணி, ஆதவன் காட்டன்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பூபதி சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினர். ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பிரதாப், நட்ராஜ் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில் 1060 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். 

    • பள்ளியில் விளையாட்டு தின விழா போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் விளையாட்டுதினவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வாலிபால் அசோசியேசன் திருப்பூர் மாவட்ட தலைவரும் எனிடைம் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனருமான ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

    • திருமுறை திருக்காவணம் சேலம் ஹரிகர தேசிக சுவாமிகள்” தலைமையில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
    • பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினர்.

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் பாதபூஜை வழிபாடு மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. ஏ.வி.பி. பூண்டி பள்ளியுடன் இணைந்து ஏ.வி.பி கல்வி குழுமங்களான காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி, காந்திநகர் ஏ.வி.பி. (சிபிஎஸ்இ) பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வி ஞானம் சிறந்து விளங்கவும், அரசு பொதுத்தேர்வில் முதன்மை பெறவும் "திருமுறை திருக்காவணம் சேலம் ஹரிகர தேசிக சுவாமிகள்" தலைமையில் பெற்றோர் பாதபூஜை மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினர்.

    மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர். கூட்டு பிரார்த்தனையில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன் , முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்தினர்.

    • மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர்செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். பள்ளி ஆசிரியை ரஞ்சிதா வரவேற்று பேசினார்.

    மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக நடனம், நாடகம்,பட்டிமன்றம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து மாணவர்களை மகிழ்வித்தனர்.குழந்தைகளை கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பள்ளியின்முதல்வர் பிரமோதினி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மன்றத்தினை சேர்ந்த மாணவி கீர்த்தனா நன்றி கூறினார். இந்நிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின்ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் கலை நிகழ்ச்சிஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன.
    • விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்ததினம் குழந்தைகள் தின விழாவாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி வெள்ளிவிழா கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின்முதல்வர் பிரியா ராஜா வரவேற்று பேசினார்.விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன. குழந்தைகள் நேரு போலவே வேடமிட்டு வந்து உற்சாகமாக கலந்துகொண்டனர். மேலும், பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் குழந்தைகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். விழாவின்நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதா பானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிரபல விஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட்பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் இன்றைய விஞ்ஞானம் நாளையதொழில்நுட்பம் என்னும் தலைப்பில் அறிவியல் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனத்தின் அறிவியலாளரும், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் பிரபலவிஞ்ஞானியுமான டாக்டர். வெங்கடேஸ்வரன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களிடையே மனித உடல்உறுப்புகள்,மனிதசெல் பயன்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் நாம்எதிர்கொள்ளும் சவால்கள் , புவி வெப்ப மயமாதல், உலகை ஆளும்அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    முன்னதாகப் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். பள்ளியின் முதல்வர் பிரமோதினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முடிவில் மாணவி கரிஷ்மா மன்ஷாரமணி நன்றி கூறினார்.

    • திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது .
    • நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சிபிஎஸ்இ. பள்ளிமாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து சாலைப் பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

    திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது . இதில் மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளைஏந்தியும் , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கூறியும், சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளை வழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முன்னதாக மாணவர்கள் புஷ்பா நகர் ரவுண்டானா பகுதியில் சாலைப் பாதுகாப்பு குறித்த தெரு நாடகத்தை நிகழ்த்தி பொதுமக்களிடம் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். திருப்பூர் கொங்கு நகர் சரக சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் அனில் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி மாணவர்களின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின்தலைவர் கதிர்வேலுடன் இணைந்து பள்ளியின் முதல்வர் பிரமோதினி,ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா , நித்யா, பள்ளியின் இன்டராக்ட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது
    • கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அப்துல்கலாம் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  

    • 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது.
    • மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன்,பள்ளி முதல்வர் டயானா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்திமிருதுளா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ மாணவிகள் தங்கள் கலாசார நடனத்தின் மூலமாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் கல்வியின் முக்கியத்துவத்தையும்,ஒழுக்கத்தையும் மாணவர்களுக்கு விளக்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். 

    ×