search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திநகர் ஏ.வி.பி.,பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி. 

    காந்திநகர் ஏ.வி.பி.,பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது .
    • நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சிபிஎஸ்இ. பள்ளிமாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து சாலைப் பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

    திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது . இதில் மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளைஏந்தியும் , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கூறியும், சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளை வழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முன்னதாக மாணவர்கள் புஷ்பா நகர் ரவுண்டானா பகுதியில் சாலைப் பாதுகாப்பு குறித்த தெரு நாடகத்தை நிகழ்த்தி பொதுமக்களிடம் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். திருப்பூர் கொங்கு நகர் சரக சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் அனில் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி மாணவர்களின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின்தலைவர் கதிர்வேலுடன் இணைந்து பள்ளியின் முதல்வர் பிரமோதினி,ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா , நித்யா, பள்ளியின் இன்டராக்ட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×