என் மலர்
நீங்கள் தேடியது "கல்வி விருது விழா"
- த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
- நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெற்றது.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், தவெக சார்பில் 4 கட்டங்களாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி முடிவில் மேடையில் நின்றவாறு தவெக தலைவர் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
- நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
- மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது கட்ட விழா இன்று நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள சேலத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஷ்வரிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
அப்போது பேசிய விஜய், ராஜேஸ்வரி வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து உள்ளார். அவருக்கு விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசை. கண்டிப்பாக ஆவீங்க. என்னுடைய wishes. all th best என்று கூறி அவருக்கு பேனாவை பரிசளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாணவி ராஜேஷ்வரி, நான் எப்படி படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று எல்லோரும் பார்த்து இருப்பீங்க. நான் இந்த மேடைக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு சந்தோஷமாக இருக்கு. நீங்களும் என்னை மாதிரி ஆக வேண்டும் என்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டும்தான் அதை விட்டுறாதீங்க. all the best girls என்று கூறினார்.
சாரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ரொம்ப நாள் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. சார் எனக்கு cash கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். சாருக்கு ஒரு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
மேடையில் உணர்ச்சிவசப்பட்ட மாணவியை த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல்படுத்தினார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பாராட்டி, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தின் கீழ் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையை வழங்கினார். மேலும், ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கி உள்ளார்.
- பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
- புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது, பரிசளிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு த.வெ.க. விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் இன்று மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இன்று 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கிறார்.
- 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நாளை மாணவர்களுக்கான 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. நாளை 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.
- கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று 2ம் கட்டமாக விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக இன்றும் த.வெ.க. தலைவர் விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும்போது சில மாணவ- மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் ஹார்டின் போன்ற சைகை காட்டியும், சிலர் ரோஜா பூ கொடுத்தும், சிலர் கட்டி அணைத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்சையாக பேசியுள்ளார்.
இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் வேல்முருகன் பேசியதாவது:-
நடிகனை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.. 2 கிராம் பரிசு கொடுத்ததும் நம் முட்டாள் பயளுங்க.. அறிவு வேணாமா தமிழனுக்கு..?
பெற்று, வளர்த்து ஆளாக்கி நாளை மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பெண்ணை அப்பா, அம்மா, ஊடகப் பத்திரிகையாளர்கள் என அத்தனைப் பேர் முன்பு ஒரு சினிமா கூத்தாடிப் பயனை கட்டிப்பிடிக்க எப்படி அனுமதிக்கிற..?
இது என்ன ஈனப்பிறவி..? தமிழனுடைய பிறவியா இது? விஜய் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அஜித் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. ரஜினி நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அதைவிட்டு அப்படியே விஜய் அண்ணா என்று.. பெற்றோர்கள் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறீங்க..?
இதுவா தமிழ் சமூகம்? இதுவா தமிழருடைய பாரம்பரியம்? இதுவா வீரக்குல பெண்கள் வாழ்ந்த மண் என்கிறோம் ?
எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயளுகளுடைய பிறந்தநாள் என்றால் என்ன..? அவர்களின் படம் நூறு நாள் ஓடினால் என்ன? ஓடவிட்டால் என்ன ? அவனா உனக்கு சோறு போடப் போறான்..? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட போறான்? அவனா பள்ளிக்கூடம் கட்ட போறான் ?
இவ்வாறு அவர் பேசினார்.
- பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
- கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
இந்த நிலையில், த.வெ.க. சார்பில் இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது.
இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.
இதற்காக ஓட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த விழாவில் நீட் குறித்தும், பெரியார் குறித்தும் விஜய் பேசி இருந்தார். மேலும் 2026 தேர்தலில் வண்டி வண்டியாக பணத்தை கொட்டப்போகிறார்கள் என விஜய் விமர்சித்து இருந்தார்.
- கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு விஜய் வருகை.
தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.
இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.
- திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.
- மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த முறை பல கட்டங்களாக இந்த விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் முதற்கட்ட விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் அதிகாலையே வருகை தந்துள்ளார்.
இன்று நடைபெறும் விழாவில் 19 மாவட்ட மாணவர்களுக்கு விஜய் விருது வழங்க இருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை த.வெ.க. நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்க விழா அரங்கிற்கு த.வெ.க. தலைவர் விஜய் வருகை புரிந்தார். ஆளப்போறான் தமிழன் பாடலுடன் விஜய்க்கு விழா அரங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அனைவரும் எழுந்து நின்றனர்.
- நீட் தேர்வால் மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.
- நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியதாவது:
வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா... நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான பணிவான வணக்கங்கள்.
இன்று முக்கியமான விஷயம் குறித்து பேசப்போகிறேன்.
நீட்...
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவ -மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் சத்தியமான உண்மை.
நீட்டை 3 பிரச்சனையாக பார்க்கிறேன்.
1. நீட் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
2. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக பார்க்கிறேன்.
3. நீட் தேர்வு முறைகேடால் அதன்மேல் இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. நீட் விலக்கு தான் இதற்கு ஒரே தீர்வு.
நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.
இதற்கு நிரந்தர தீர்வாக, அந்த கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வேளை சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு திருத்தி, சிறப்பு பொது பட்டியல் உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
- பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது.
- ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான முதல் கட்ட பரிசளிப்பு விழா கடந்த 28-ந்தேதி சென்னையில் நடந்தது. அப்போது 127 தொகுதிகளை சேர்ந்த 800 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார்.
இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பரிசளிப்பு விழா திருவான்மியூரில் ராமச்சந்திரா கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம், ஆகிய 19 மாவட்டங்களில் உள்ள 107 தொகுதிகளை சேர்ந்த 640 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை வழங்கினார்.
விழாவில் விஜய் பேசியதாவது:-
வந்திருக்கும் இளம் சாதனையாளர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.
நான் இன்று பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது சரியாக இருக்காது என்று எனக்கு தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்று நீங்களே யூகித்து இருப்பீர்கள். நீட் தேர்வை பற்றித்தான்.
நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ-மாணவிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவ-மாணவிகள் அனைவருமே ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு சத்தியமான உண்மை.
இந்த நீட் தேர்வை 3 பிரச்சனையாக பார்க்கிறேன். ஒன்று நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. 1975-ம் ஆண்டுக்கு முன்னால் கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
அதன் பிறகு தான் அதை ஒன்றிய அரசு பொது பட்டியலில் சேர்த்தது. அதுதான் முதல் பிரச்சனையாக தொடங்கியது.
இரண்டாவது, ஒரே நாடு ஒரே பாடத் திட்டங்கள், ஒரே தேர்வு ஆகியவை அடிப்படையிலேயே கல்வி கற்கும் நோக்கத்துக்கே எதிரான விஷயமாக இருப்பதை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற மாதிரி அந்த பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
மாநில உரிமைகளுக்காக மட்டுமே நான் இதை கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை.
பன்முகத்தன்மை என்பது ஒரு பலமே தவிர அதை பலவீனம் என்று சொல்ல முடியாது. இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் மாநில மொழியில் படித்து விட்டு, மாநில அளவில் படித்து விட்டு என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி சரியாகும். அதுவும் மருத்துவம் படிக்க விரும்பும் கிராமப்புற மாணவ- மாணவிகளை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இது எவ்வளவு ஒரு கடினமான விஷயம்.
மூன்றாவது, நான் பார்க்கும் ஒரு பிரச்சனை கடந்த மே மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு நடந்தது. அதில் சில குளறுபடிகள் நடந்ததாக செய்திகளில் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு நீட் தேர்வு மீது உள்ள நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய் விட்டது. நாடு முழுக்க நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் அந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயங்கள்.
சரி இதற்கு என்னதான் தீர்வு என்றால் நீட் விலக்குதான் இதற்கு உடனடி தீர்வு. நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்திருக்கிற தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரமாகவே இதை தீர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
சரி.. இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்றால் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஒருவேளை அதில் சிக்கல்கள் இருக்கிறது என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும்.
இப்போது இருக்கும் பொதுப் பட்டியலில் என்ன ஒரு பிரச்சனை என்றால் மாநில அரசுகளுக்கு என்ன தான் அதில் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான ஒரு வேண்டுகோள்.
ஒன்றிய அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பி.ஜி.ஐ. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமென்றால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.
ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், இது என்னுடைய வேண்டுகோள்தான். இது நடக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் உடனே நடக்காது என்று எனக்கு தெரியும். அப்படியே நடந்தாலும் நடக்க விட மாட்டார்கள் என்றும் தெரியும்.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய வேண்டுகோளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுதான் நீட் தேர்வு பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்றபடி இங்கு வந்திருக்கும் அனைவரும் ஜாலியாக படியுங்கள். மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது.
வாய்ப்புகள் அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால் ஒன்று இரண்டு வாய்ப்புகள் நழுவி விட்டாலும் வருத்தப்படாதீர்கள். அப்படியென்றால் கடவுள் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை தருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அது என்ன என்று தேடி கண்டு பிடியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய்யிடம் பரிசு பெறுவதற்காக பெற்றோருடன் வந்த மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நுழைவு வாயிலில் நின்று வரவேற்று அனைவருக்கும் உணவு பொருட்களை வழங்கினார்.
- மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
- நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
* நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
* மாநில கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு தேசிய கல்வித்திட்டத்தில் தேர்வு வைத்தால் எப்படி?
* நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.
* மாநில மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை கூடாது.
* கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
விஜய் தனது உரையின்போது மத்திய அரசை திமுக பாணியில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
NEET நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
- உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன்
- உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் புதுச்சேரியை சேர்ந்த பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா பேசியதாவது:-
விஜய் அண்ணா, உங்கள் குரலைக் கேட்க வந்திருக்கிறேன். உங்களை ஒரு நல்ல மனிதராகவும் நல்ல தலைவராகவும் உணர்கிறேன் அண்ணா. இங்கு மதிப்பெண் பெற்று சாதனை படைத்ததை விட எங்களையும் எங்கள் பெற்றோரையும் அழைத்து மகிழ்வித்துள்ளீர்கள்.
தமிழகத்தின் தளபதியே கல்விக்கு கண் கொடுக்கும் நிகழ்கால கர்மவீரரே உங்களை காண முடியவில்லை என்றாலும் உங்கள் அறிவுரைகளை உள்வாங்கி மகிழும் மாணவி நான். உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள். இங்கு பேச வாய்ப்பளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவி சண்முகப்பிரியா பேசி முடிக்கும் வரை விஜய் அவருக்கு மைக்கை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.






