என் மலர்
நீங்கள் தேடியது "சர்ச்சை பேச்சு"
- அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என டிஜபி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. புகார் இல்லாமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீதான ஒரு புகார் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நான்கைந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப் போய்விடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
- எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
- புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.
அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என டிஜபி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
- ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரை மட்டுமல்லாமல், தி.மு.க. கூட்டணி வகிக்கும் காங்கிரசையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
- நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
அருவங்காடு:
இந்து மதம் பற்றி எதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.. சமீபத்தில் கூட இந்து கடவுளான ராமர் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். நாங்கள் ஒருபோதும் ரா மரை ஏற்க மாட்டோம், ராமருக்கு நாங்கள் எதிரி. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என பேசி இருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சு பா.ஜ.க.வினரை மட்டுமல்லாமல், தி.மு.க. கூட்டணி வகிக்கும் காங்கிரசையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதுதொடர்பாக காங்கிரசாரே ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆ.ராசா எம்.பி. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் குன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசினார். அப்போது ஆன்மீகம் பற்றிய பேசிய அவரது பேச்சுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது:-
என் மனைவி சனிக்கிழமை ராமர் கோவிலில் கும்பிட்டதுடன், வியாழன் எனக்காகவும், திங்கள் சிவனுக்காகவும், 3 நாட்கள் விரதம் இருந்தார். அவரது பூஜை அறை இன்றும் இருக்கிறது.
நான் ஒருநாளும் உள்ளே சென்றது இல்லை. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இங்குள்ள எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும். அதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
பக்தி என்பது தனிமனித தேவைக்காக தான். என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது கோபம் இல்லை. கும்பிட்டு விட்டுபோ.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆ.ராசாவின் பேச்சு குறித்து எதிர்க்கட்சியினர் கூறுகையில் இதுவரை இந்து கடவுள்களுக்கு எதிராக ராசா பேசி வந்தார். தற்போது ஓட்டுக்காக அவர் பல்டி அடித்துள்ளார். கோத்தகிரியில் உள்ள கோவிலுக்கு கூட சென்று வந்துள்ளார். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றனர்.
- காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
- பா.ஜனதா தலைவர்கள் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தி வருகிறார்கள்.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் சொத்துகளில் (வளங்கள்) முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் காங்கிரஸ் அரசு தெரிவித்திருந்தது" என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசினார்.
2006 தேசிய வளர்ச்சி மாநாட்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக பா.ஜனதா வீடியோவும் வெளியிட்டிருந்தது.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் பேச்சை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடியின் பேச்சை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, 2006-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், "நாட்டின் வேகமான வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், வேலை வாய்ப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி" உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
அப்போது, "நமது முன்னுரிமைகள் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் ஆதாரங்கள், சுகாதாரம், கல்வி, கிராமப்புற உள்கட்டமைப்பில் முக்கியமான முதலீடு மற்றும் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றோடு, பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் தான் நமது முன்னுரிமை.
பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெற வேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களை சமமாகப் பெறுவதை உறுதிசெய்ய, திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். நமது வளங்கள் மீதான முதல் உரிமை இவற்றிற்கானது தான்." என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த கருத்துக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கிய பிறகு பிரதமர் அலுவலகம் விளக்கம் கொடுத்தது.

அதில், "வளங்கள் மீதான முன்னுரிமை" குறித்த பிரதமரின் பேச்சு வேண்டுமென்றே தவறாக பரப்பப்பட்டதின் காரணமாக சர்ச்சை உருவாகியுள்ளது. பிரதமரின் பேச்சினை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது இந்த சர்ச்சையை தூண்டியுள்ளது. பட்டியலினத்தோர், பிற பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் போன்ற அனைவரின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை தான் இது குறிக்கிறது.
சமீப மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை அடிப்படையாக கொண்டே பிரதமர் இந்த அறிவிப்புகளை மேற்கொண்டார். பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தினாலும், நலிவடைந்த மற்றும் சிறுபான்மை பிரிவினரின் நலனில் சிறப்பு கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். "இந்தியா பிரகாசிக்க வேண்டும், ஆனால் அது அனைவருக்குமே பிரகாசிக்க வேண்டும்" என்று பிரதமர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்".
"வளங்கள் மீதான முதல் உரிமைகோரல்" என்ற பிரதமரின் குறிப்பு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாடு உள்பட மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து "முன்னுரிமை" பகுதிகளையும் குறிக்கிறது என்பதை மேற்கூறியவற்றிலிருந்து பார்க்க முடியும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஊடுருவல்காரர்களுக்கு உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ?
- இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
ராஜஸ்தானில் நேற்று பரப்புரை செய்த பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்புக் கருத்துகளை பேசிய நிலையில், இன்று உ.பி. அலிகாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரிகளின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று பேசிய பிரதமர் மோடி," அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ? என கேட்டிருந்தார்.
நேற்று சர்ச்சையாக பேசிய நிலையில் இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி பேசியதாவது:-
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால், லஞ்சம் கொடுத்த அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹன் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது.
ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போல உள்ளனர்.
- மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போல உள்ளனர்.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல உள்ளனர் என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை நிறத்தின் அடிப்படையில் பல்வேறு நாட்டு மக்களோடு ஒப்பிட்டு, சாம் பிட்ரோடா பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும்," இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்கள் போலவும், கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் உள்ளனர். இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.
நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்" என காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அமெரிக்காவின் மரபு வழி சொத்துவரி பற்றி இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா ஏற்கனவே பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில், சாம் பிட்ரோடா மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசி மீண்டும் சர்ச்சையாக்கியுள்ளார்.
- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
- நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வை நடத்துவதில் தீவிரம் காட்டும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.
திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும்.
ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில். ஆனால், யாராவது போர்டு மாட்டுகிறார்களா?
எனவே, இந்த வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை மக்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை அழிப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது" என்று பேசினார்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதைதொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், "ஒரு காலத்தில், ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, அனைவருக்கும் கிடைக்க காரணம் திராவிட இயக்கம்தான் என்பதே தனது பேச்சின் நோக்கம். மேலும், நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்பது உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்து அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவது இல்லை.
- எப்போது வெளியில் செல்ல முடிகிறதோ அப்போது போய் கொள்ளலாம்.
சென்னை:
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் சொற் பொழிவாற்றிய திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது திருப்பூருக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மகாவிஷ்ணுவை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் சித்தர்களின் ஆலோசனையின்படியே நான் செயல்படுகிறேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிறையிலும் எனது ஆன்மிக சொற்பொழிவு தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி புழல் சிறையில் உள்ள மகாவிஷ்ணு தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள சக கைதிகளுக்கு ஆன்மீக அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறை வளாகத்தில் வைத்து தன்னுடன் உரையாடும் கைதிகளிடம் வாழ்க்கை முறை என்றால் என்ன என்பது பற்றியும், எதை யெல்லாம் செய்யக் கூடாது? என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் விளக்கமாக கூறி பாடம் நடத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் எடுத்த போது, ஜாமீன் மனு போடுவதற்காக வந்திருந்த தனது வக்கீலிடம் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மகாவிஷ்ணு அதுபற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். அதே மனநிலையில்தான் தற்போதும் மகாவிஷ்ணு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
எந்த சூழலிலும் ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யப் போவது இல்லை என்றும், எப்போது வெளியில் செல்ல முடிகிறதோ அப்போது போய் கொள்ளலாம் என்றும் கூறியுள்ள மகாவிஷ்ணு இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் தகவல்களை வெளியாகி உள்ளன.
இது பற்றி போலீசார் கூறும் போது, மகாவிஷ்ணு ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்யாத நிலையில் 3 மாதம் வரையில் சிறையில் இருக்க நேரிடும் என்றும் அதன்பிறகே கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர் வெளியில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எந்த வழக்கில் கைதானவர்களாக இருந்தாலும் எப்போது சிறையில் இருந்து வெளியில் செல்லலாம் என்கிற மனநிலையிலேயே இருப்பார்கள். ஆனால் மகா விஷ்ணுவின் நிலைப்பாடு ஆச்சரியம் அளிப்பதாக இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
- கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார்.
- கேவலமான அரசியல் மனம் கொண்டவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி நேற்று திருப்பதி மலைக்கு வந்தார். இதனால் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது காரில் வந்த பூமண கருணாகர ரெட்டி, எம்.பி. குருமூர்த்தி அவரது மகன் அபிநய ரெட்டி ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது திருப்பதி மலையில் ஆத்திரமூட்டும் வகையில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என விதிமுறை உள்ளதாக போலீசார் நோட்டீஸ் அளித்தனர். தான் எந்த அரசியலும் பேச வரவில்லை, சாமியை தரிசிக்க வந்துள்ளதாக போலீசார் கொடுத்த நோட்டீசில் பூமண கருணாகர ரெட்டி கையெழுத்திட்டார். பின்னர் போலீசார் அவரை மலைக்குச் செல்ல அனுமதித்தனர்.
திருப்பதி மலைக்கு வந்த பூமண கருணாகர ரெட்டி நேராக வராக சாமியை தரிசனம் செய்தார். பின்னர் புஷ்கரணிக்கு சென்று நீராடி விட்டு மாட வீதி வழியாக கோவில் முன்பாக வந்த அவர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.
அப்போது அவர் நான் எந்த தவறும் செய்யவில்லை. நெய்யில் கலப்படம் செய்து இருந்தால் என்னுடைய குடும்பம் ரத்த வெள்ளத்தில் அழிந்து போய் இருக்கும் என கூறியபடி கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார். மேலும் என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் நெருப்பில் இருப்பது போல் உணர்கிறேன். கோவிலில் கேவலமான அரசியல் மனம் கொண்டவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.
சுத்தப்படுத்த வேண்டியது ஏழுமலையான் கோவிலை அல்ல. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் நாக்கை தான் சுத்தபடுத்த வேண்டும் என்றார். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி மலை மீது அரசியல் மற்றும் அவதூறு பேசக்கூடாது என நோட்டீசில் தெரிவித்திருந்தும் விதிமுறை மீறி பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.
பூமண கருணாகர ரெட்டி மீது பக்தர்களின் மனதை புண்படுத்தியது, அநாகரிக, அவதூறு அரசியல் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
- இன்று மாலை கவர்னரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- கவர்னரின் நடவடிக்கை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவனந்தபுரம்:
தங்க கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
அதாவது கேரள மாநிலத்திற்கு மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் விமான நிலையம் வழியாக அதிகள வில் தங்க கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனைகள் அதிகளவில் நடப்பதாகவும், அவை தேச விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
பினராயி விஜயனின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினரை குறிப்பிட்டு அவர் பேசியி ருப்பதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

பினராயி விஜயனின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அவரது பேச்சு தொடர்பாக முதல்-மந்திரி அலுவலகம் விளக்கம் அளித்தது. தேச விரோத நடவடிக்கைகள் என்ற வார்த்தை மலப்புரத்திற்கு குறிப்பாக கூறப்படவில்லை என்று முதல்வர் அலுவலகம் தெளிவுபடுத்தியது.
இருந்தபோதிலும் பினராயி விஜயனின் பேச்சு தொடர்பாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு சில கேள்விகளையும் எழுப்பினார்.
அதாவது தேச விரோத சக்திகளாக யார் தகுதி பெறுகிறார்கள்? இந்த நடவடிக்கைகளின் தன்மைகள் ஏன் விவரிக்கப்படவில்லை? என்பது பற்றியும் விளக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் விளக்கம் கேட்டார்.
மேலும் இந்த விஷயங்கள் குறித்து முதல்-மந்திரிக்கு எப்போது தெரியவந்தது?, இவற்றின் பின்னணியில உள்ளவர்கள் யார்? தேச விரோத சக்திகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுமாறும் கவர்னர் கேட்டுக் கொண்டார்.
இதனால் பினராயி விஜயனின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்-மந்திரியின் பேச்சு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகுமாறு கேரள மாநில தலைமை செயலர் சாரதா முரளீதரன், டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் ஆகியோருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் சம்மன் அனுப்பி உள்ளார்.
அவர்கள் இருவரும் இன்று மாலை கவர்னரின் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கவர்னரின் கேள்விகளுக்கு முதல்-மந்திரியிடமிருந்து திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்பதால் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பினராயி விஜயனின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கவர்னரின் இந்த நடவடிக்கை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், அரசு ஊழியர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் அதிக லஞ்சம் பெறுவதாக பேசிய நடிகை கஸ்தூரியின் தரம் தாழ்ந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகளை வைத்து, குறிப்பிட்ட பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை கொச்சைப்படுத்துவதா ? என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட பிரிவினர் மீது தவறான பிம்பம் ஏற்படும் வகையில் விதமாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.






