என் மலர்
நீங்கள் தேடியது "Manmohan Singh"
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தற்போது 90 வயதாகிறது.
- இவருக்கு அவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி :
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் (வயது 90) மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவருக்கு அவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். எனவே அவைக்குள் இந்த நாற்காலியை பயன்படுத்துவதற்கு வசதியாக, மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை மாற்றப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், திக்விஜய் சிங் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இருக்கை மாற்ற நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு உள்ளது.
- இந்தியா-இங்கிலாந்து இணைந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
- இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
லண்டன் :
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், "நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்தமுள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகிறது. நமது தேசத்தை நிறுவிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
- பொருளாதார நிபுணர் ஆட்சியில் 10வது இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆனது.
- டீ விற்றவர் ஆட்சியில் 10ல் இருந்து 5வது இடத்தை அடைய 8 ஆண்டுகள் ஆனது.
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில். ராஜ்கோட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்கும் முன், 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் (மன்மோகன் சிங்) நமது பிரதமராக இருந்தார்.
இந்திய பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுகளில், அவர்கள் என்ன செய்தாலும், இந்தியப் பொருளாதாரம் பத்தாவது இடத்திற்கு மாறியது. இதன் மூலம் 11வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரம், 10வது இடத்தைப் பெற பத்து ஆண்டுகள் ஆனது.
2014-ல் நீங்கள் ஒரு சாய்வாலாவுக்கு (டீ விற்பவர்) ஆட்சியைக் கொடுத்தீர்கள். நான் ஒரு பொருளாதார நிபுணர் என்று ஒரு போதும் கூறவில்லை. ஆனால், மக்களின் பலம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியது.
11வது இடத்தில் இருந்து 10வது இடத்தைப் பிடிக்க பத்து ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (காங்கிரஸ்) ஆட்சியையும், 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தை அடைய எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (பாஜக) ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார்.
- பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.
காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் உள்ளனர். ஆனால், ஒரு மேல்-சபை எம்.பி.யை தேர்ந்தெடுக்க 43 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
எனவே, அசாம் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேல்-சபை இடம் கூட கிடைக்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், 1991-ம் ஆண்டு முதல் அங்கிருந்து தான் மேல்-சபை உறுப்பினராக மன்மோகன்சிங் இருந்து வருகிறார். கவுகாத்தியில் வாடகை வீட்டில் தங்கியுள்ள அவருக்கு ஓட்டும் அங்கு தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவருக்கு ஓட்டு கவுகாத்தியில் தான் இருந்தது.
தற்போதைய நிலையில், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்- சபை உறுப்பினர்களின் பதவி எதுவும் காலியாகவில்லை. இதனால், மன்மோகன்சிங் மீண்டும் மேல்-சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால், கூடுதலாக ஒரு மேல்-சபை எம்.பி. பதவி அக்கட்சிக்கு கிடைக்கிறது. அந்தப் பதவியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசுவார்கள் என்று தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 -ம் ஆண்டு பதவி ஏற்றார். பிரதமராக பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அடிக்கடி அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது சர்ச்சையானது.
பிரதமராக பதவி ஏற்ற ஒரு ஆண்டுக்குள் 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் வரை மட்டும் 20 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக அரசு சார்பில் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டது. இதன் பிறகு ஆண்டுதோறும் இதை விட அதிகமான தொகை பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு செலவழிக்கப்பட்டது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பா.ஜனதா கட்சியினர் நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காக பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என்று விளக்கம் அளித்தனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை சமீபத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அதில் 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 பயணங்கள் சென்றுள்ளார்.
ஒரே பயணத்தில் ஆறு நாடுகளுக்கு சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது என பல்வேறு பயணங்கள் இதில் அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது என பிரதமர் அலுவலகத்துக்கு ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது.

மன்மோகன் சிங்கைவிட நிறைய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த மோடி அவரைவிட ரூ.50 கோடி குறைவான செலவில் பயணம் செய்தது எப்படி என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே பயணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல நாடுகளுக்கு சென்றதால் ஏர் இந்தியாவுக்கான கட்டணம் குறைந்துள்ளது. பிரதமர் தனது வெளிநாட்டு பயணங்கள் பற்றிய பேட்டியிலேயே ஒரே டிக்கெட்டில் நிறைய நாடுகள் என்று இதை குறிப்பிட்டு இருக்கிறார். 44 பயணங்களில் 16 பயணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்று இருக்கிறார்.
விரைவில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் செல்ல இருக்கிறார். இந்த ஆட்சி காலத்தில் அவரது கடைசி வெளிநாட்டு பயணமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. #AirIndia #PMModi
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அசாமில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
எனவே வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிடுவார் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்து இருந்தார்.
அதை பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங் மறுத்துள்ளார். மன்மோகன் சிங் அமிர்தசரஸ் தொகுதியில் நிச்சயம் போட்டியிட மாட்டார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவே இதற்கு காரணம்.

எனவே ஆம் ஆத்மி கட்சியுடனோ, வேறு எந்த கட்சியுடனோ கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றார்.
டெல்லியில் நேற்று மன்மோகன்சிங்கை அம்ரீந்தர்சிங் சந்தித்து பேசினார். அப்போது நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்யிட மாட்டார் என்று அவர் அறிவித்தார். #ManmohanSingh #AmarinderSingh
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. போட்டியிட அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.

1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. மக்களவைத் தேர்தல்களில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. 1999 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் பா.ஜனதாவின் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. #LSPolls #ManmohanSingh
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:-

பல்வேறு நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகின்றன. அணு ஆயுத பரவல் தடைக்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு சைபர் பாதிப்புகள் அதிகரிப்பதால் நிச்சயமற்ற தன்மையும் அதிகரிக்கிறது.
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுத தடை தொடர்பான விரிவான, நவீன அமைதித் திட்டங்களைக் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அணு ஆயுத விவகாரத்தில் சுமார் 25 ஆண்டுகள் வரை சுய கட்டுப்பாட்டுடன் இருந்தது. அதனால்தான் அணுசக்தி விநியோக நாடுகள் குழு, 2008ம் ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது.
இவ்வாறு அவர் பேசினார். #ManmohanSingh