search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seaman"

    • அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.
    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சி னையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தி னரின் எண்ணிக்கை தொட ர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.

    சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது. அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவ டிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டதாக உலக வங்கி கருத்து தெரி வித்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக மக்களை ஏமாற்று கின்றனர். வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளை அறிவிப்பதற்கு 44 நாள் தாமதப்படுத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலையின் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதே போல தமிழக நதி நீர் உரிமையை பாதுகாப்பதில் பாரதிய ஜனதாவின் நிலை என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தேசியம் பேசுகிறவர்கள் கர்நாடகத்தில் மாநில உரிமைகள் குறித்து பேசுகின்றனர். எனவே ஒரு சொட்டு கூட தண்ணீர் தர முடியாது என்பவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடையாது என மக்கள் முடிவெடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது கன்னடராக இருப்பது தனக்கு பெருமை என பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தமிழகத்தில் எதற்கு போட்டியிட வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.

    • கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.
    • சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை மத்தூர், பர்கூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இரவு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் வித்யாராணியை ஆதரித்து சீமான் பேசினார்.

    அப்போது சீமான் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்து ஒரு வாலிபர் திடீரென்று ஓடிவந்து அவரை கட்டி பிடித்து செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடனே ஆதரவாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மேடையில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.

    இதனால் சீமான் அந்த வாலிபரை முறைத்தபடி திட்டினார். இதனைத்தொடர்ந்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பிரசார கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
    • இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் இன்று பிரசாரம் செய்தார்.

    தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றத்தையே சந்தித்துள்ளனர். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக எளிய பிள்ளைகளாகிய நாங்கள் உங்களை நாடி வந்துள்ளோம். எனவே இந்தமுறை மைக் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.

    இன்று நாட்டில் ஊழலும் லஞ்சமும் பெருகிவிட்டது. லஞ்சப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

    டிஜிட்டல் இந்தியா என்று கூறி மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்காமல் அலட்சியமாக செயல்படுபவர்களை கைது செய்து 10 ஆண்டு ஜெயில் தண்டனை அளிக்க வேண்டும்.

    தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள பா.ம.க., த.மா.கா.வுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எளிதாக சின்னம் கிடைத்துவிட்டது. நாங்கள் பா.ஜனதாவை எதிர்ப்பதாலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்வதாலும் கரும்பு விவசாயி சின்னத்தை எங்களுக்கு தராமல் முடக்கி வேறு ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள். என் மீதான பயத்திலேயே இப்படி செய்துள்ளனர்.

    ஓட்டுப்பதிவு எந்திரத்தை கண்டுபிடித்த ஜப்பான் அதனை பயன்படுத்துவது இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் தூக்கி எறிந்துவிட்டன.

    இந்தியாவும் நைஜீரியாவும் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. அந்த எந்திரத்தை பயன்படுத்துபவர்கள் முட்டாள்கள் என்று ஜப்பான் கூறி இருக்கிறது.

    வாக்குப்பதிவு முடிந்து 41 நாள் கழித்துதான் எந்திரத்தில் பதிவான ஓட்டை எண்ணுகிறார்கள். இத்தனை நாட்களில் அதில் தில்லு முல்லு செய்ய முடியாதா? தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. லஞ்ச ஊழல் அழுக்கு எங்கள் மீது படிந்துவிடக்கூடாது என்பதால் தனித்தே களம் இறங்கி இருக்கிறோம்.

    மத்திய சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தமிழர் கட்சி சின்னமான மைக் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு சீமான் பேசினார்.

    • வாயு கசிவு ஏற்பட்ட தொழிற் சாலை முன்பு போராட்டம் நடத்த 34 மீனவ கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர்.
    • சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர்:

    எண்ணூர், பெரிய குப்பத்தில் செயல்படும் தனியார் உரத்தொழிற் சாலையில் இருந்து கடந்த 26-ந்தேதி நள்ளிரவு திடீரென அமோனியாக வாயு கசிவு ஏற்பட்டது.

    அதிக அளவு காற்றில் கலந்ததால் பெரியகுப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்களுக்கு மயக்கம், கண்எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கடல் நீரிலும் அமோனியா வாயு கலந்ததால் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.

    அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட 45 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 6 பேர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் உரத்தொழிற்சாலைக்கு எதிராக மீனவகிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டால் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடுதிரும்பிய நிலையில் பெரியகுப்பத்தை சேர்ந்த வனஜா(40), சூரிய காந்தி(70) ஆகிய 2 பேர் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே வாயு கசிவு ஏற்பட்ட தொழிற் சாலை முன்பு போராட்டம் நடத்த 34 மீனவ கிராமமக்கள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து மீனவ கிராம நிர்வாகி ஒருவர் கூறும்போது, உரத்தொழிற் சாலையை 2-ந்தேதி திறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் தொழிற்சாலை முன்பு மிகப்பெரியபோராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக அனைத்து மீனவ கிராமத்தினரிடமும் ஆதரவு கேட்கப்படுகிறது என்றார்.

    இதற்கிடையே அமோனியா வாயுகசிவுக்கு காரணமான உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தொழிற்சாலை வாசலில் தொடர்ந்து இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்று அமர்ந்து உள்ளனர். இந்தநிலையில் மீன வர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×