என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்"

    • தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார்.
    • இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை அடையாறு மேம்பாலத்தில் 50 வயது மதிக்க தக்க பெண் தூய்மைப் பணியாளிடம் இளைஞர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இதனை கண்டு கோவமடைந்த பெண் தூய்மைப் பணியாளர் அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் அடித்து விரட்டினார். இதனையடுத்து அந்த இளைஞர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடினார்.

    இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த விவகாரம் விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்பவரை கைது செய்துள்ளனர்

    • ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
    • சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூட முடியாது என்று அவர் தெரிவித்தார்.

    சென்னை ராயபுரத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தூய்மைப் பணியாளர்கள் தொடர்பான கேள்விக்கு காது கேட்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த மாதம் சென்னையில் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இன்று ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் செய்தியாளர்கள் அந்த கேள்வியை மீண்டும் கேட்க, காது கேட்கவில்லை என்று அவர் பதில் அளித்தார்.

    மேலும், ராயபுரம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தொந்தரவாக சிலர் மது அருந்துவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் சரக்கு அடிப்பதில்லை" என்று சேகர்பாபு பதில் அளித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    • பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே போராட்டம்.
    • போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டில் உண்ணாவிரதம் இருந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    போலீசார் அராஜகம் ஒழிக என தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இரண்டு கண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.

    தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி வளாகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியது. இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 9 மணியளவில் திடீரென போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    • 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
    • தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

    இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனால் தூய்மை பணியாளர்களுடன் சமரசம் ஏற்பட்டது.

    இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது.

    அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம்.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தது அதிமுக ஆட்சி. அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மீதமுள்ள 4இல் 2 மண்டலங்களை தனியார் மயமாக்கும் முடிவை தற்போதைய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியறுத்தினார்.  

    • திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை சீமான் நேரில் சந்தித்தார்.
    • அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் கைது செய்பட்டு வேளச்சேரி திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூலிக்கு போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர்.

    மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வுசெய்தது மக்களின் தவறு. ஆட்சியாளர்களை குறை சொல்ல நமக்கு தகுதி இல்லை. ஏனெனில் அஆட்சியை நிறுவியதே நாம்தான்.

    அதிகார வலிமை இல்லாத மக்களைதான் அரசு குறிவைக்கிறது. இன்றைக்கு அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு 10 லட்சத்திற்கு காப்பீடு உள்ளிட்டவை கொடுப்போம் என்கிறது.

    தூய்மைப்பணி தனியாரிடம் செல்லும்போது அரசு ஏன் இதெல்லாம் வழங்குகிறது? அனைத்தும் கொடுக்கும் அரசு, நிரந்தர வேலையையும் கொடுக்கலாமே.

    பணியில் எடுக்கும்போதே அரசுப்பணி என்று சொல்லித்தானே எடுத்தார்கள். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா. தனியார் முதலாளிகளின் பொறுப்பா" என்று கேள்வி எழுப்பினார்.   

    • போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும்.
    • திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 12 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.

    தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கமுடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.

    தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-ஆம் நாளாக நீடித்த நிலையில், போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூகநீதியில் சிறந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ?

    ஒன்று மட்டும் உறுதி. ஏழை எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது.
    • தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.

    தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.

    தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.

    அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

    பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது. நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

    தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்.

    • 18 நாட்கள் ஆகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
    • ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    கோவை, ஆக

    கோவை மாநகரட்சி மத்திய மண்டலம் 25,81, மற்றும் வடக்கு மண்டலம் 3-வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்தநிலையில் இந்த மாதம் தொடங்கி 18 நாட்கள் ஆகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் இன்று பணிக்குச் செல்லாமல் அந்தந்த மண்டல அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

    ஒவ்வொரு மாதமும் எங்களுக்கான ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இதனால் பணத் தேவை அதிகரித்து சிரமம் அடைகிறோம். எங்களுக்கு முறையான ஊதியத்தை குறித்த காலத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    ×