என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொருக்குப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது
- பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே போராட்டம்.
- போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சென்னை கொருக்குப்பேட்டையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொது வெளியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்ததாக கூறப்படும் நிலையில் வீட்டிலேயே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டில் உண்ணாவிரதம் இருந்த தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதனால், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உண்ணாவிரதம் இருந்து வரும் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தூய்மைப்பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போலீசார் அராஜகம் ஒழிக என தூய்மைப் பணியாளர்கள் முழக்கம் நடத்தி வருகின்றனர்.
Next Story






