என் மலர்
நீங்கள் தேடியது "150 wickets"
- ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
கிங்ஸ்டவுன்:
கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.
ரஷித் கான் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
150 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார்.
வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.
புதுடெல்லி:
ஐபிஎல் போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
நேற்று நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.

இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.






