search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காட்சியை காந்தியின் செயலாளர் கல்யாணம் பார்வையிட்டார்.
    X
    கண்காட்சியை காந்தியின் செயலாளர் கல்யாணம் பார்வையிட்டார்.

    இந்தியாவில் லஞ்சம்-ஊழலை ஒழிக்க ஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் - காந்தியின் செயலாளர்

    இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க ஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று காந்தியின் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார். #GandhiJayanti150 #MahatmaGandhi #Bribe

    மதுரை:

    மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சி யகத்தில் மகாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தி விழா நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட காந்தியின் செயலாளர் கல்யாணம் மகாத்மா காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை மாணவ-மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    நாட்டில் வாழும் ஏழை மக்களின் நலன்களை சுற்றியே காந்தியின் சிந்தனையும், பேச்சும், செயலும் இருந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மவுன விரதம் கடைபிடிப்பார்.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது காந்தியை கொலை செய்வதற்கு 6 முறை முயற்சி நடந்தது. அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை நாம் விடுதலை பெற்ற 5 1/2 மாதங்களில் இழந்தோம்.


    சுதந்திரத்துக்கு பின்னர் தான் இந்தியாவில் லஞ்சம், ஊழல் வரத்தொடங்கியது. தற்போது அது தலை விரித்தாடுகிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் நம்மால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியவில்லை.

    அந்த வெள்ளைக்காரன் ஆட்சி மறுபடியும் வந்தால் இந்தியா நன்றாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.

    தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் நிலை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. அவர்கள் நம்மை கொள்ளையடித்தது உண்மை தான்.

    அப்போது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்.

    நமது நாட்டில் இப்போது காந்தியை முற்றிலுமாக மறந்து விட்டார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தற்போது காந்தியை தெய்வமாக வணங்குகிறார்கள்.

    3 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நமக்கு இன்னொரு காந்தி கிடைக்க மாட்டார். இந்தியா விடுதலையடையும் போது நேதாஜி தலைமையிலான ஆட்சிமுறை 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தை தான் கூறினார்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #GandhiJayanti150 #MahatmaGandhi #Bribe

    Next Story
    ×