என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மருத்துவர்"

    • மருத்துவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் தகவல்.
    • அமெரிக்கா செல்லும் கனவு தடைப்பட்ட நிலையில் மருத்துவர் உயிர்மாய்ப்பு.

    ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற 38 வயது பெண் மருத்துவர், அமெரிக்க விசா மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள பத்மாராவ் நகரில் ரோகிணி தனியாக வசித்து வந்தநிலையில், குடும்பத்தினர் அவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ரோகிணி வீட்டு பணிப்பெண்ணும் நீண்டநேரம் கதவை தட்டியுள்ளார். ரோகிணி கதவைத் திறக்காததால், அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இறந்தநிலையில் கிடந்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் மாய்ப்பு குறிப்பு ஒன்றையும் ரோகிணியின் அறையிலிருந்து எடுத்துள்ளனர். மருத்துவப் பணியில் கவனம் செலுத்தி வந்த ரோகிணி, அமெரிக்காவில் தனது எதிர்காலத்தை திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் விசா மறுக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

    • ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
    • அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

    ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.

    அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.

    நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
    • மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

    4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.

    பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிரசாந்த் பங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    போலியான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதாக பெண் டாக்டரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்கொலை இல்லை என்றும் பிரேத பரிசோதனையை மாற்ற டாக்டர் ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
    • தலைமறைவான எஸ்.பி. கோபால் கைது செய்யப்பட்டார்.

    மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த வியாழன் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.

    தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.

    DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

    தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

     இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

    இந்த வழக்கில் குற்றமசாட்டப்பட்டு தலைமறைவான எஸ்.பி. கோபால் நேற்று கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மகாராஷ்டிராவின் சதாராவில் டாக்டர் சம்பதா முண்டே துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டது, எந்தவொரு நாகரிக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் ஒரு சோகம்.

    மற்றவர்களின் துன்பத்தைத் தணிக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் அமைப்பிற்குள் குற்றவாளிகளின் சித்திரவதைக்கு பலியானார்.

    குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளனர்.

    அறிக்கைகளின்படி, பாஜகவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள் அவரை ஊழலுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்ட குற்றவியல் சித்தாந்தத்தின் மிகவும் இழிவான உதாரணம் இது. இது தற்கொலை அல்ல, அமைப்பு ரீதியான கொலை.

    அதிகாரம் குற்றவாளிகளைக் காப்பாற்றும்போது, யார் நீதியை எதிர்பார்க்க முடியும்? டாக்டர் சம்பதாவின் மரணம் இந்த பாஜக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது.

    நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் இனி பயம் இல்லை, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.  

    • அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
    • எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் நேற்று முன் தினம் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.

    தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.

    DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

    தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

    பிரேத பரிசோதனை அறிக்கை கொடுப்பதிலும் உடற்தகுதி சான்று கொடுப்பதிலும் பெண் மருத்துவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பிரச்னை இருந்ததை காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

    மேலும், உதவி ஆய்வாளர் கோபால், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தததையும் உறுதி செய்துள்ளனர். பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்தின் பின் தலைமறைவாகியுள்ள கோபால் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.  

    • தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே DSP-க்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்

    மகாராஷ்டிராவில் காவல்துறையினரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது கையில் எழுதி வைத்து பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அந்த பெண் மருத்துவர் நேற்று இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

    அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.

    தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது.

    DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

    தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    மாகாராஷ்டிர காலவத்துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்ராவ் வடேட்டிவார் தனது எக்ஸ் பதிவில், "காவல்துறையின் கடமை பாதுகாப்பது, ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரைச் சுரண்டினால், எப்படி நீதி கிடைக்கும்? பாதுகாக்க வேண்டியவர்களே வேட்டையாடுபவர்களாக மாறினால் எப்படி?..

    இந்தப் பெண் ஏற்கனவே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஆளும் மகாயுதி அரசாங்கம் மீண்டும் மீண்டும் காவல்துறையைப் பாதுகாக்கிறது, இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. கோபால் பத்னே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

    • கணவரும் மீதமுள்ள மகனும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
    • இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    நேற்று காசாவில் பாலஸ்தீனிய பெண் மருத்துவரின் வீட்டில் இஸ்ரேல் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் அவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட 9 குழந்தைகள், நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் ஆவர்.

    கான் யூனிஸில் உள்ள அவரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. 

    • ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி கொள்ளை முயற்சி.
    • சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை வளசரவாக்கத்தில் பெண் மருத்துவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி பெண் மருத்துவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், பெண் மருத்துவரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராமாபுரம் பகுதியை சேர்ந்த நாகமுகத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா (வயது26).

    இதற்காக அவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனை இரவு பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் தங்கியிருந்த குடுயிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் ஷஹானா சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனால் அதர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷஹானா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.

    அதில் அனைவருக்கும் பணம் தேவை, பணம் எல்லாவற்றையும் வெல்லும் என்று மட்டும் எழுதியிருந்தார். அதனடிப்படையில் ஷஹானா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன.

    ஷஹானாவுக்கும், அவரது நண்பரான மருத்துவர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதாகவும், அதனை தராவிட்டால் திருமணம் நடக்காது என்றும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. அதிக தொகை வரதட்சணையாக கேட்டதால் ஷஹானா குடும்பத்தினரால் அந்த தொகையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக ஷஹானாவை திருமணம் செய்யும் முடிவில் இருந்து அவரது நண்பர் பின்வாங்கியதாக தெரிகிறது. திருமணம் முடிவில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் பின் வாங்கிய வேதனையில் ஷஹானா தற்கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுகலை படிக்கும் பெண் மருத்துவர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருப்பதி தேவாஸ்தன மருத்துவமனையில் பெண் மருத்துவர் தாக்கப்பட்டார்.
    • மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

    திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விசாரணையில் பெண் மருத்துவரை தாக்கிய நபர் மன நோயாளி என்று தெரியவந்தது. மன நல சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மருத்துவரை தாக்கியுள்ளார். பெண் மருத்துவர் தாக்கப்பட்டது, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    மேலும், மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நோயாளி மருத்துவரை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்தில் கடந்த 24-ந்தேதி பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் சரமாரி தாக்கி உள்ளார். இதன் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் நோயாளி ஒருவர் டாக்டரை துரத்தி சென்று அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தலையை ஒரு உலோக படுக்கையில் வைத்து இடித்து சரமாரி தாக்குகிறார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலை நடத்திய நோயாளி வீசியங்கரம் மாவட்டம் பொப்பிலியை சேர்ந்த பங்கரா ராஜூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வலிப்பு நோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பல இளநிலை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழக துணைவேந்தர் டாக்டர் ரவிக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோக்கை விடுத்துள்ளார்.


    • முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.
    • போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர்.

    மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை. டாக்டர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டாக்டர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை டாக்டர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர்.

    முதல்வர் மம்தா பானர்ஜியை, மேற்கு வங்காள ஜூனியர் டாக்டர்கள் மன்ற நிர்வாகிகள் பேருந்து மூலம் தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். ஆனால், மருத்துவர்களின் நேரலை கோரிக்கையை ஏற்க மம்தா அரசு மறுத்ததால், இருதரப்பு சந்திப்பு நடைபெறாமல் போனது.

    இதைதொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "மேற்கு வங்க முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    மேலும், " பதவி குறித்து கவலைப்படவில்லை, எனக்கு நீதிதான் முக்கியம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    ×