search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Visa"

    • அமெரிக்க தூதரகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • மோசடியின் பின்னணியில் அரசியல் தொடர்பு உள்ளதா?

    சென்னை:

    சென்னை வில்லிவாக்கம் பகுதியில் போலியாக கல்வி நிறுவனம் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்த நபர் ஒருவர் அளித்த கல்வி சான்றிதழ் போலியானது என்பதை தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வில்லிவாக்கத்தில் செயல்பட்டு வந்த போலி கல்வி நிறுவனம் 500 பேருக்கு போலி சான்றிதழ்களை வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அளித்த பேட்டியில், இந்த மோசடியின் பின்னணியில் அரசியல் தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது பற்றியெல்லாம் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

    • சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.
    • இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய எச்.பி. விசா வழங்கப்படுகிறது. அதே போல் தொழிலுக்காக பி1 விசாவும், சுற்றுலாவுக்காக பி2 விசாவும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் அமெரிக்காவுக்கு சென்று படிக்கவும் மாணவர்களுக்கு விசா வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் வழங்கப்படுவதற்கு முன்பு விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படும்.

    இந்த நிலையில் சுற்றுலா, தொழிலுக்காக வழங்கும் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலுக்கு காத்திருப்பு காலம் 999 நாட்களாக உயர்ந்து உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்து உள்ளது.

    சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களில் விசாவுக்காக நேர்காணலுக்கு சுமார் 2½ ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

    சுற்றுலா மற்றும் தொழில் பிரிவில் விசா விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் குறைவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியாவில் விசா நடைமுறைகளை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதிக அளவிலான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்க டிராப் பாக்ஸ் விண்ணப்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தீர்ப்பு வழங்குதல், தற்காலிக பணியாளர்களை அமர்த்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்றார்.

    விசா விண்ணப்பங்கள் கிட்டத்தட்ட கொரோனா காலத்திற்கு முன்பு இருந்து நிலையை எட்டி விட்டதாலும் அதை செயல்படுத்த இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் போதுமான பணியாளர்கள் இல்லை.

    இந்தியாவில் விசா காத்திருப்பு காலத்தை குறைக்க அமெரிக்கா நிர்வாகம் கடந்த 2 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 2023-ம் நிதியாண்டில் கொரோனா காலத்துக்கு முந்தைய விசா செயலாக்க நிலைகளை எட்டுவோம் என்றும் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு 2022-ம் நிதியாண்டில் அதிக மாணவர் விசாக்களை வழங்கி உள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

    ×