என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female doctor"

    • கணவரும் மீதமுள்ள மகனும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
    • இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    நேற்று காசாவில் பாலஸ்தீனிய பெண் மருத்துவரின் வீட்டில் இஸ்ரேல் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் அவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட 9 குழந்தைகள், நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் ஆவர்.

    கான் யூனிஸில் உள்ள அவரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.

    மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது. 

    • ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார்.
    • அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை.

    மகாராஷ்டிராவின் நாக்பூரில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 30 வயது ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண் அந்த நபரை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து நண்பர் ஆகியுள்ளார். அப்போது அந்த பெண் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்தார். அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை அவருடன் அந்த நபர் உடல் ரீதியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அந்த பெண்ணும் படிப்பை முடித்து மருத்துவர் ஆனார். ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்த நபர் பெண்ணை  திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

    அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவரது புகாரின் அடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி மீது இன்று பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவரது மகள் அன்பரசி (வயது 27). பிசியோதெரபி டாக்டர். இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் திருச்சியில் வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஈரோடு வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இது தெரியாமல் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது அன்பரசி தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என காலம் தாழ்த்தி வந்தார்.

    பின்னர் மகள் வேறு வாலிபரை காதலிக்கும் தகவல் கிடைத்தது. இதனால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்தினர். இதற்கிடையே காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அன்பரசி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

    பின்னர் பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார். இதை த்தொடர்ந்து பெற்றோர் அன்பரசிக்கு திருச்சியில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.

    மேலும் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் அன்பரசி மீண்டும் ஈரோடு வாலிபருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து தாய் தமிழரசி மகளை கண்டித்தார்.

    இதில் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி க்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல அளிக்காமல் அன்பரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் நிச்சயக்கப்பட்ட பிசியோதெரபி பெண் டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
    • பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.

    அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.

    அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.

    தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.

    இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதயை சேர்ந்தவர் ஷபீக் ரகுமான். இவரது மனைவி மெகருன்னிசா (வயது48). இவர் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களது மூத்த மகன் பென்யாமின் கனடா நாட்டில் உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கி பெய்னாமின் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்தது குறித்து ஆலப்புழாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.

    விபத்தில் மகன் இறந்த தகவலைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் இறப்பை மெகருன்னிசாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மெகருன்னிசா தூக்கு போடுதவற்கு முன்னதாக தனது தோழி ஒருவரிடம் போனில் பேசி, தனது மகன் இறந்துவிட்டதால் தனக்கு வாழ விரும்பமில்லை என்று கூறியிருக்கிறார். அதுபற்றி அவர், மசூதிக்கு சென்றிருந்த மெகருன்னிசாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதனால் பதட்டமடைந்த அவர் தனது இளைய மகனுடன், மசூதியில் இருந்து வீட்டுக்கு அவசரஅவசரமாக வந்திருக்கிறார். அவர் வீட் டுக்கு வந்து பார்த்த போது மெகருன்னிசா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து காயம்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கத்தில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா (வயது26).

    இதற்காக அவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனை இரவு பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் தங்கியிருந்த குடுயிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் ஷஹானா சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனால் அதர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷஹானா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.

    அதில் அனைவருக்கும் பணம் தேவை, பணம் எல்லாவற்றையும் வெல்லும் என்று மட்டும் எழுதியிருந்தார். அதனடிப்படையில் ஷஹானா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன.

    ஷஹானாவுக்கும், அவரது நண்பரான மருத்துவர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதாகவும், அதனை தராவிட்டால் திருமணம் நடக்காது என்றும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. அதிக தொகை வரதட்சணையாக கேட்டதால் ஷஹானா குடும்பத்தினரால் அந்த தொகையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக ஷஹானாவை திருமணம் செய்யும் முடிவில் இருந்து அவரது நண்பர் பின்வாங்கியதாக தெரிகிறது. திருமணம் முடிவில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் பின் வாங்கிய வேதனையில் ஷஹானா தற்கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுகலை படிக்கும் பெண் மருத்துவர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹானா(வயது28). எம்.பி.பி.எஸ். முடித்திருக்கும் இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவு முதுகலை படித்து வந்தார்.

    இதற்காக அவர் மருத்து வக்கல்லூரி அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மாணவி ஷஹானா ஆஸ்பத்திரி பணிக்கு வரவில்லை. இதனால் சந்தே கமடைந்த மருத்துவர்கள், அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு மயங்கிய நிலையில் ஷஹானா கிடந்தார். அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கெண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அவர் மயக்க மருந்தை அதிகளவில் சாப்பிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது மாணவி ஷஹானா, டாக்டரான நண்பர் ஒருவரை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துவந்த நிலையில், நண்பரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டதாக வும், அதன் காரணமாக ஷஹானா தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    இளம் மருத்துவர் ஷஹானா தனது நண்பரான டாக்டர் ரூவைஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள 150 சவரன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை வரதட்சணையாக தர வேண்டும் என்று ரூவைஸ் கேட்டிருக்கிறார்.

    அதனைக்கேட்டு ஷஹானா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவ்வளவு வரதட்சனை தர ஷஹானாவின் குடும்பத்தினர் முன்வரவில்லை. இதனால் திருமண முடிவில் இருந்து ரூவைஸ் பின்வாங்கியதாக தெரிகிறது. திருணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் மனவேதனையில் இருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு மாத காலமாக மருத்துவ கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். பின்பு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பிறகு மருத்துவக்கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அதன்பிறகு தான், ஷஹானா தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.

    தான் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மயக்க மருந்தை அதிகளவில் உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக் கிறார். தற்கொலை செய்வதற்கு முன், தனது தற்கொலைக்காக காரணத்தை கடிதமாகவும் எழுதி வைத்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    பெண் டாக்டர் தற்கொலை விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்க எடுக்க மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து ஷஹானாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து விட்டு ஏமாற்றிய அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் கருநாகப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்த டாக்டர் ரூவைசை போலீசார் பிடித்தனர். அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் டாக்டர் ரூவைஸ் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.

    டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். அந்த பொறுப்பில் இருந்து டாக்டர் ரூவைஸ் நீக்கப்பட்டுள்ளார். விசாரணையில் வெளிப் படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அவர் நிக்கப்படடுள்ளதாக மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    • அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.
    • பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கசன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அடிக்கடி இருவரும் சண்டை போட்ட நிலையில், இருவரும் பிரிந்தனர். அதே நேரம் இருவரும் விவாகரத்து செய்யாமலேயே கடந்த ஓரு ஆண்டாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் தனது 2 ஆண் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த அந்த பெண்ணின் கணவரான டாக்டர் நேராக அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு ஓட்டல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, தனது மனைவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

    அப்போது மனைவி இரண்டு ஆண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்ட அவர் ஆவேசம் அடைந்து மனைவியை கடுமையாக அடித்து உதைத்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்த அந்த பெண், ஆண் நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டாக்டர் மற்றும் பெண் டாக்டர், அவரது ஆண் நண்பர்கள் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பெண் டாக்டருடன் நெருக்கமாக இருந்தது காஜியாபாத் மற்றும் புலந்த் சாகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே பெண் டாக்டரை அவரது கணவர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருத்துவசேவை கட்டாயம் தேவை.
    • சி.சி.டி.வி. உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருத்துவசேவை கட்டாயம் தேவை. வருமானம் என்பதைத் தாண்டி இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் உரிய வசதிகள் சரிவர செய்து தரப்படவேண்டும்.

    சி.சி.டி.வி. உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இது போன்ற உள்கட்டமைப்புகள் அவசியம் என்பதை உணர்ந்து ஆளும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நோயாளி மருத்துவரை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்தில் கடந்த 24-ந்தேதி பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் சரமாரி தாக்கி உள்ளார். இதன் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் நோயாளி ஒருவர் டாக்டரை துரத்தி சென்று அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தலையை ஒரு உலோக படுக்கையில் வைத்து இடித்து சரமாரி தாக்குகிறார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலை நடத்திய நோயாளி வீசியங்கரம் மாவட்டம் பொப்பிலியை சேர்ந்த பங்கரா ராஜூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வலிப்பு நோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பல இளநிலை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழக துணைவேந்தர் டாக்டர் ரவிக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோக்கை விடுத்துள்ளார்.


    • கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    • மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்ததால் 29 நோயாளிகள் உயிரிழந்தனர்.

    மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

    அந்த சமயத்தில் பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

    ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக மேற்கு வங்க அரசு தெரிவித்தது.

    இதனையடுத்து உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

    உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் தீவிரமாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    இதனிடையே ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளிலிருந்து ராஜினாமா செய்தனர்.

    இதனை தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைப்படும் அபாயம் ஏற்பட்டது.

    இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கொல்கத்தா ஐகோர்ட் அறிவுறுத்தியது.

    அதன்படி விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ், தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்தனர்.

    இதனையடுத்து சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மேற்கு வங்காள சீல்டா கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

    சட்டப்படி 90 நாட்களுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது.

    பெண் டாக்டர் வழக்கில் தொடர்புடைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதால் கொல்கத்தாவில் இந்த மாதம் மீண்டும் போராட்டங்கள் வெடித்தது.

    பல மாதங்கள் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியும் இந்த பாலியல் வழக்கில் தீர்வு காணப்படவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

    மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டரை கற்பழிக்க முயன்றவர் தப்பி ஓடிய போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மும்பை:

    மும்பையில் மலாடு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் முதல் மாடியில் செரியன் எலன் (வயது 60) என்பவர் வசித்து வருகிறார்.

    அதே குடியிருப்பில் 2-வது மாடியில் பெண் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். அந்த டாக்டர் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது செரியன் எலன் நைசாக பெண் டாக்டரை பின்தொடர்ந்து வந்தார். டாக்டர் தனது வீட்டு கதவை திறந்து உள்ளே சென்ற போது, திடீரென செரியன் எலனும் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.

    பின்னர் கதவை பூட்டி விட்டு டாக்டரை கற்பழிக்க முயன்றார். இதனால் அவர் கூச்சலிட்டார். ஆத்திரம் அடைந்த செரியன் எலன் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து டாக்டரின் தலையில் அடித்தார். இதில், ரத்தம் கொட்டியது. அவர் அலறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே செரியன் எலன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.

    அருகில் இருந்த மாலுக்குள் நுழைந்த அவர் மாடியில் ஏறி சென்றார். அவரை மற்றவர்கள் விரட்டி சென்றனர். அப்போது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். இது சம்பந்தமாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காயம் அடைந்த டாக்டர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #tamilnews
    ×