என் மலர்
நீங்கள் தேடியது "Female doctor"
- ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
- அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.
அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.
நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
- மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.
பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிரசாந்த் பங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
போலியான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதாக பெண் டாக்டரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்கொலை இல்லை என்றும் பிரேத பரிசோதனையை மாற்ற டாக்டர் ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
- தலைமறைவான எஸ்.பி. கோபால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் கடந்த வியாழன் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
இந்த வழக்கில் குற்றமசாட்டப்பட்டு தலைமறைவான எஸ்.பி. கோபால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மகாராஷ்டிராவின் சதாராவில் டாக்டர் சம்பதா முண்டே துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டது, எந்தவொரு நாகரிக சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கும் ஒரு சோகம்.
மற்றவர்களின் துன்பத்தைத் தணிக்க விரும்பிய ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவர், ஊழல் அமைப்பிற்குள் குற்றவாளிகளின் சித்திரவதைக்கு பலியானார்.
குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த அப்பாவிப் பெண்ணுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளனர்.
அறிக்கைகளின்படி, பாஜகவுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்கள் அவரை ஊழலுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்ட குற்றவியல் சித்தாந்தத்தின் மிகவும் இழிவான உதாரணம் இது. இது தற்கொலை அல்ல, அமைப்பு ரீதியான கொலை.
அதிகாரம் குற்றவாளிகளைக் காப்பாற்றும்போது, யார் நீதியை எதிர்பார்க்க முடியும்? டாக்டர் சம்பதாவின் மரணம் இந்த பாஜக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற மற்றும் இரக்கமற்ற தன்மையை அம்பலப்படுத்துகிறது.
நீதிக்கான இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் இனி பயம் இல்லை, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
- அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
- எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் நேற்று முன் தினம் இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்தது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலும் 4 பக்க தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதில், காவல்துறையில் குற்றவாளிகளுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் கொடுக்க தன்னை கட்டாயப்படுத்தினர். பலரை மருத்துவ பரிசோதனைகளுக்கு கூட அழைத்து வராமல் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க அழுத்தம் தந்தனர். அதற்கு சம்மதிக்காததால் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு வழக்கில் ஒரு எம்.பி.யின் இரு உதவியாளர்கள் வந்து தன்னை மிரட்டியதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார். எம்.பி.க்கு போன் செய்து அவரிடம் பேச வைத்தனர் என்றும் அந்த எம்.பி. மறைமுகமாக தன்னை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் எம்.பி.யின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கொடுப்பதிலும் உடற்தகுதி சான்று கொடுப்பதிலும் பெண் மருத்துவருக்கும் காவல்துறையினருக்கும் இடையே பிரச்னை இருந்ததை காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
மேலும், உதவி ஆய்வாளர் கோபால், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தததையும் உறுதி செய்துள்ளனர். பெண் மருத்துவர் தற்கொலை சம்பவத்தின் பின் தலைமறைவாகியுள்ள கோபால் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
- தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே DSP-க்கு கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்
மகாராஷ்டிராவில் காவல்துறையினரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது கையில் எழுதி வைத்து பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அந்த பெண் மருத்துவர் நேற்று இரவு ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், "எனது மரணத்திற்கு காவல்துறை ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம். அவர் என்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக என்னை பாலியல் வன்கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்" என்று என்று எழுதப்பட்டிருந்தது.
தற்கொலைக்கு செய்துகொள்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 19 அன்று, இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஃபல்டான் DSPக்கும் அந்த பெண் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது.
DSP-க்கு எழுதிய கடிதத்தில், ஃபல்டான் ஊரக காவல் துறையைச் சேர்ந்த கோபால் பத்னே, துணைக் கோட்ட காவல்துறை ஆய்வாளர் பாட்டீல் மற்றும் உதவி காவல்துறை ஆய்வாளர் லாட்புத்ரே ஆகிய மூன்று அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று இரவு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாகாராஷ்டிர காலவத்துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளால் பெண் மருத்துவர் தற்கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் விஜய் நாம்ராவ் வடேட்டிவார் தனது எக்ஸ் பதிவில், "காவல்துறையின் கடமை பாதுகாப்பது, ஆனால் அவர்களே ஒரு பெண் மருத்துவரைச் சுரண்டினால், எப்படி நீதி கிடைக்கும்? பாதுகாக்க வேண்டியவர்களே வேட்டையாடுபவர்களாக மாறினால் எப்படி?..
இந்தப் பெண் ஏற்கனவே புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஆளும் மகாயுதி அரசாங்கம் மீண்டும் மீண்டும் காவல்துறையைப் பாதுகாக்கிறது, இது காவல்துறை அட்டூழியங்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. கோபால் பத்னே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கணவரும் மீதமுள்ள மகனும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
- இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
நேற்று காசாவில் பாலஸ்தீனிய பெண் மருத்துவரின் வீட்டில் இஸ்ரேல் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் அவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 9 குழந்தைகள், நாசர் மருத்துவ வளாகத்தில் உள்ள அல் தஹ்ரிர் மருத்துவமனை குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குழந்தைகள் ஆவர்.

கான் யூனிஸில் உள்ள அவரின் வீட்டை இஸ்ரேல் தாக்கியது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களின் மீதமுள்ள மகன் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
- ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார்.
- அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 30 வயது ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அந்த நபரை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து நண்பர் ஆகியுள்ளார். அப்போது அந்த பெண் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்தார். அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.
பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை அவருடன் அந்த நபர் உடல் ரீதியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அந்த பெண்ணும் படிப்பை முடித்து மருத்துவர் ஆனார். ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்த நபர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி மீது இன்று பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சலக்குடி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவரது மகள் அன்பரசி (வயது 27). பிசியோதெரபி டாக்டர். இவர் திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் திருச்சியில் வேறொரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஈரோடு வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. இது தெரியாமல் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது அன்பரசி தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என காலம் தாழ்த்தி வந்தார்.
பின்னர் மகள் வேறு வாலிபரை காதலிக்கும் தகவல் கிடைத்தது. இதனால் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்தினர். இதற்கிடையே காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அன்பரசி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
பின்னர் பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார். இதை த்தொடர்ந்து பெற்றோர் அன்பரசிக்கு திருச்சியில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.
மேலும் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் அன்பரசி மீண்டும் ஈரோடு வாலிபருடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து தாய் தமிழரசி மகளை கண்டித்தார்.
இதில் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி க்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல அளிக்காமல் அன்பரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தமிழரசி லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயக்கப்பட்ட பிசியோதெரபி பெண் டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் மாப்பிள்ளை வீட்டாருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
- பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் டாக்டர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் பணி புரிந்தபோது, பொது மருத்துவதுறையில் தலைவராக பணியாற்றிய டாக்டர் மனோஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் கொடுத்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்த போது மூத்த ஆலோசகர் ஒருவர் தன்னிடம் அத்துமீற முயன்றது குறித்து புகார் அளிக்க, மனோஜின் ஆலோசனை அறைக்கு சென்றபோது, அவர் தன்னை பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதாக அந்த பெண் மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் மருத்துவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி போலீசாருக்கு இ-மெயிலில் தனது புகார் மனுவை அனுப்பினார்.
அதன்பேரில் மின்னஞ்சல் மூலமாக பெண் டாக்டரை தொடர்பு கொண்டு புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது தனக்கு டாக்டர் மனோஜ், பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசாரிடம் பெண் டாக்டர் தெரிவித்திருக்கிறார்.
தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் டாக்டர் மனோஜ் மீது 4 ஆண்டுகளாக புகார் கொடுக்காமல், தற்போது கொடுத்திருப்பதாகவும் அப்போது அவர் போலீசாரிடம் விளக்கமும் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் பெண் டாக்டர் பாலியல் புகார் அளித்த டாக்டர் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது டாக்டர் மனோஜ், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவ மனையில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதயை சேர்ந்தவர் ஷபீக் ரகுமான். இவரது மனைவி மெகருன்னிசா (வயது48). இவர் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களது மூத்த மகன் பென்யாமின் கனடா நாட்டில் உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கி பெய்னாமின் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்தது குறித்து ஆலப்புழாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.
விபத்தில் மகன் இறந்த தகவலைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் இறப்பை மெகருன்னிசாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மெகருன்னிசா தூக்கு போடுதவற்கு முன்னதாக தனது தோழி ஒருவரிடம் போனில் பேசி, தனது மகன் இறந்துவிட்டதால் தனக்கு வாழ விரும்பமில்லை என்று கூறியிருக்கிறார். அதுபற்றி அவர், மசூதிக்கு சென்றிருந்த மெகருன்னிசாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் பதட்டமடைந்த அவர் தனது இளைய மகனுடன், மசூதியில் இருந்து வீட்டுக்கு அவசரஅவசரமாக வந்திருக்கிறார். அவர் வீட் டுக்கு வந்து பார்த்த போது மெகருன்னிசா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து காயம்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கத்தில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.
- தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா (வயது26).
இதற்காக அவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனை இரவு பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் தங்கியிருந்த குடுயிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் ஷஹானா சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.
இதனால் அதர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷஹானா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.
அதில் அனைவருக்கும் பணம் தேவை, பணம் எல்லாவற்றையும் வெல்லும் என்று மட்டும் எழுதியிருந்தார். அதனடிப்படையில் ஷஹானா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன.
ஷஹானாவுக்கும், அவரது நண்பரான மருத்துவர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதாகவும், அதனை தராவிட்டால் திருமணம் நடக்காது என்றும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. அதிக தொகை வரதட்சணையாக கேட்டதால் ஷஹானா குடும்பத்தினரால் அந்த தொகையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஷஹானாவை திருமணம் செய்யும் முடிவில் இருந்து அவரது நண்பர் பின்வாங்கியதாக தெரிகிறது. திருமணம் முடிவில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் பின் வாங்கிய வேதனையில் ஷஹானா தற்கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுகலை படிக்கும் பெண் மருத்துவர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹானா(வயது28). எம்.பி.பி.எஸ். முடித்திருக்கும் இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவு முதுகலை படித்து வந்தார்.
இதற்காக அவர் மருத்து வக்கல்லூரி அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மாணவி ஷஹானா ஆஸ்பத்திரி பணிக்கு வரவில்லை. இதனால் சந்தே கமடைந்த மருத்துவர்கள், அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு மயங்கிய நிலையில் ஷஹானா கிடந்தார். அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கெண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர் மயக்க மருந்தை அதிகளவில் சாப்பிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மாணவி ஷஹானா, டாக்டரான நண்பர் ஒருவரை காதலித்து வந்ததும், அவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துவந்த நிலையில், நண்பரின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்டதாக வும், அதன் காரணமாக ஷஹானா தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இளம் மருத்துவர் ஷஹானா தனது நண்பரான டாக்டர் ரூவைஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள 150 சவரன் தங்க நகைகள், 15 ஏக்கர் நிலம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் உள்ளிட்டவைகளை வரதட்சணையாக தர வேண்டும் என்று ரூவைஸ் கேட்டிருக்கிறார்.
அதனைக்கேட்டு ஷஹானா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவ்வளவு வரதட்சனை தர ஷஹானாவின் குடும்பத்தினர் முன்வரவில்லை. இதனால் திருமண முடிவில் இருந்து ரூவைஸ் பின்வாங்கியதாக தெரிகிறது. திருணம் நிச்சயிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிக வரதட்சணை தராத காரணத்தால் திருமணத்திற்கு ரூவைஸ் மறுப்பு தெரிவித்தது ஷஹானாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மனவேதனையில் இருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு மாத காலமாக மருத்துவ கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். பின்பு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பிறகு மருத்துவக்கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அதன்பிறகு தான், ஷஹானா தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்.
தான் தங்கியிருந்த அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மயக்க மருந்தை அதிகளவில் உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக் கிறார். தற்கொலை செய்வதற்கு முன், தனது தற்கொலைக்காக காரணத்தை கடிதமாகவும் எழுதி வைத்திருக்கிறார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பெண் டாக்டர் தற்கொலை விவகாரம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்க எடுக்க மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து ஷஹானாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயம் செய்து விட்டு ஏமாற்றிய அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டியது, வரதட்சணை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் கருநாகப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்த டாக்டர் ரூவைசை போலீசார் பிடித்தனர். அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் டாக்டர் ரூவைஸ் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.
டாக்டர் ரூவைஸ் கேரள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். அந்த பொறுப்பில் இருந்து டாக்டர் ரூவைஸ் நீக்கப்பட்டுள்ளார். விசாரணையில் வெளிப் படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அவர் நிக்கப்படடுள்ளதாக மருத்துவ முதுநிலை பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.






