என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISI"

    • ஐ.எஸ்.ஐ.- ரா இணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.
    • இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தான்- இந்தியா இடையிலான புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு, தெற்காசியாவில் குறிப்பிடத்தகுந்த வகையில் பயங்கரவாதத்தை குறைக்கும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிலாவல் கூறியதாவது:-

    ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் புலனாய்வு). ரா (RAW- இந்திய புலனாய்வு) பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருந்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் போதுமான அளவு பயங்கரவாதம் குறைவதை நம்மால் பார்க்க முடியும. இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது. இந்த முதல்படியை நான் வரவேற்கிறேன். ஆனால், இது முதல்படி மட்டும்தான்.

    200 மில்லியன் மக்களின் நீர் விநியோகத்தை துண்டிப்பதாக மிரட்டுவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். இந்த அச்சுறுத்தல், பாகிஸ்தானால் போர் நடவடிக்கையாக கருதப்படும்.

    இவ்வாறு பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

    • மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார்.
    • முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது.

    பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சார்பாக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு கைது செய்தது.

    ராஜஸ்தானின் மேவாட் பகுதியில் உள்ள டீக் பகுதியில் காசிம் கைது செய்யப்பட்டார்.

    அதிகாரிகள் அளித்த தகவலின்படி, காசிம், ஆகஸ்ட் 2024 இல் ஒரு முறையும், மார்ச் 2025 இல் மீண்டும் ஒரு முறையும் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

    மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார். இந்த பயணத்தின்போது, அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முகவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடமிருந்து உளவுப் பயிற்சி பெற்றார்.

    மேலும் விசாரணையில் காசிம் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.

    பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் மூலம் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது என்று போலீசார் தெரிவித்தனர்

    • குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது நேற்று முன் தினம் இரவு சுமார் 12:35 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 கையெறி குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக, இந்த கையெறி குண்டு வெடித்தபோது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லை.

     

    அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியும் நூலிழையில் காயங்களின்றி உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. தாக்குதலின்போது அந்த மர்ம நபர்களின் ஒரு கையில் மத கொடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

    கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு கோவிலை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.

    முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் தொடர்பு இருப்பதாக காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்களை ஐ.எஸ்.ஐ மூளைச்சலவை செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது என்று அவர் கூறினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன என்று தெரிவித்தார். 

    • ரவீந்திர குமார்,பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் ரகசியங்களை பகிர்ந்தார்.
    • ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர்.

    பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆக்ரா அருகே ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணிபுரியும் ரவீந்திர குமார் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் முக்கியமான ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய அரசு ஊழியர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறுவதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.

    இதற்காக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர். பணம் அல்லது பெண் மூலம் காதல் வலையில் வீழ்த்தி (ஹனி டிராப்) அவர்களை கவர்ந்திழுத்து இதில் சிக்க வைக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில்தான் ரவீந்திர குமார் சிக்கினார்.

    ரவீந்திர குமார், பேஸ்புக்கில் நேஹா சர்மா என்ற போலி பெயர் கொண்ட பெண்ணுடன் நட்பு கொண்டார். இவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி. இருவருக்கும் இடையே வாட்ஸ்அப் சாட்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் நடந்துள்ளன.

    படிப்படியாக, நேஹா சர்மா ரவீந்தரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆயுதத் தொழிற்சாலையின் ரகசியத் தகவல்களைக் கேட்கத் தொடங்கியுள்ளாள். அவள் மீது கொண்ட ஆசை காரணமாக, ரவீந்திரன் தொழிற்சாலையின் ரகசிய ஆவணங்களை அவருக்கு அனுப்பினார்.

    தற்போது கைதுசெய்யப்பட்ட ரவீந்திர குமாரின் தொலைபேசியிலிருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.

    அவற்றில் தொழிற்சாலையில் ட்ரோன்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான உற்பத்தி அறிக்கைகள், இந்திய இராணுவத்திற்கும் ஆலை அதிகாரிகளுக்கும் இடையிலான விவாதங்கள் அடங்கிய ரகசிய சந்திப்பு கோப்புகள், அரசு தொழிற்சாலைகளின் பங்கு பட்டியல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்கள் ஆகியவை அதில் அடங்கும்.

    தனியுரிமைச் சட்டம் 1923 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ரவீந்திர குமாரின் கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.
    • ஐ.எஸ்.ஐ. செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார்.

    பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதியை உத்தர பிரதேச சிறப்பு படை மற்றும் பஞ்சாப் காவல் துறையினர் மேற்கொண்ட கூட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ராம்தாஸ் பகுதியை அடுத்த குர்லியன் கிராமத்தில் வசிக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதியான லாஜர் மாசி இன்று அதிகாலை 3.20 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கௌசாம்பியின் கோக்ராஜ் காவல் நிலைய பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை காவல் துறை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்தார்.

    "கிடைத்துள்ள தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஜெர்மனியை சார்ந்த பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பி.கே.ஐ.) தலைவரான ஸ்வர்ன் சிங் என்கிற ஜீவன் ஃபௌஜிக்காக வேலை செய்கிறார். மேலும் இவர் பாகிஸ்தானை சார்ந்த ஐ.எஸ்.ஐ. செயல்பாட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார்" என்று யாஷ் கூறினார்.

    கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதில் மூன்று கை குண்டுகள், இரண்டு செயலில் உள்ள டெட்டனேட்டர்கள், ஒரு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கி மற்றும் 13 வெளிநாட்டு தோட்டாக்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

    • கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும்.
    • போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு மற்றும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பறக்கும்படை தனி தாசில்தார் முருகன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் (கோவை) நவீன் ஆகியோர், எலக்ட்ரிக்கல் கடைகள், ெஹல்மெட் கடைகள், குக்கர் கடைகள், வீட்டு உபயோக கடைகளில் ஆய்வு நடத்தினர்.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 25 கடைகளில், ஆய்வு நடத்தி, ஐ.எஸ்.ஐ., தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். அத்துடன், வாடிக்கையாளருக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். போலியான ஐ.எஸ்.ஐ., முத்திரை செய்தும் விற்க வாய்ப்புள்ளதால், முழுமையாக சரிபார்க்க வேண்டும்.BIS- care என்ற செல்போன் ஆப்பை பதிவிறக்கம் செய்து, பொருளில் உள்ள ஐ.எஸ்.ஐ., நம்பரை பதிவு செய்தால், தயாரிப்பு நிறுவனம், தேதி, தரம் போன்ற அனைத்து விவரமும் கிடைக்கும்.இதுபோன்ற விவரம் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அது போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம் எனஅதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள என்ஜீனியரை உ.பி பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 நாள் காவலில் எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    லக்னோ :

    மராடிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது.

    பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய தனிப்பட்ட லேப்-டாப்பில் அதிகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்துள்ளது.

    மராட்டிய மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்த் அகர்வாலை காவலில் அனுப்ப உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து நிஷாந்த் அகர்வாலை 3 நாட்களில் காவலில் எடுக்க உத்தரபிரதேச பயங்கரவாத பிரிவுக்கு அனுமதி வழங்கியது.

    நேகா சர்மா மற்றும் பூஜா ராஜன் என்ற பெயர்களிலான பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த கணக்குகள் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இவை பாகிஸ்தான் உளவுத்துறையால் இயக்கப்பட்டு உள்ளது என சந்தேகிக்கிறோம் என விசாரணை பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆசைவார்த்தையில் சிக்கி உளவு பார்த்த ராணுவ வீரர் ஒருவர் செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பெண்கள் பெயரிலான போலியான பேஸ்புக் கணக்குகளை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு சோதனையிட்டது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் கணக்குகள் இந்தியாவின் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களுடன் தொடர்பு உள்ளது தொடர்பாக கண்காணித்தது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தூதரக முன்னாள் அதிகாரி மாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து 2010 வரை பணியாற்றியவர் மாதுரி குப்தா. 

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 22-4-2010 அன்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தியா தொடர்பான சில முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களாக அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

    ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் மாதுரி தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இவருக்கு எதிரான வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா(61) மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். 

    தண்டனை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில் மாதுரி குப்தாவுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிபதி சித்தார்த் சர்மா உத்தரவிட்டார்.  #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI 
    ×