search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISI"

    • கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும்.
    • போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு மற்றும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பறக்கும்படை தனி தாசில்தார் முருகன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் (கோவை) நவீன் ஆகியோர், எலக்ட்ரிக்கல் கடைகள், ெஹல்மெட் கடைகள், குக்கர் கடைகள், வீட்டு உபயோக கடைகளில் ஆய்வு நடத்தினர்.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 25 கடைகளில், ஆய்வு நடத்தி, ஐ.எஸ்.ஐ., தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். அத்துடன், வாடிக்கையாளருக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். போலியான ஐ.எஸ்.ஐ., முத்திரை செய்தும் விற்க வாய்ப்புள்ளதால், முழுமையாக சரிபார்க்க வேண்டும்.BIS- care என்ற செல்போன் ஆப்பை பதிவிறக்கம் செய்து, பொருளில் உள்ள ஐ.எஸ்.ஐ., நம்பரை பதிவு செய்தால், தயாரிப்பு நிறுவனம், தேதி, தரம் போன்ற அனைத்து விவரமும் கிடைக்கும்.இதுபோன்ற விவரம் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அது போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம் எனஅதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள என்ஜீனியரை உ.பி பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 நாள் காவலில் எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    லக்னோ :

    மராடிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது.

    பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய தனிப்பட்ட லேப்-டாப்பில் அதிகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்துள்ளது.

    மராட்டிய மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்த் அகர்வாலை காவலில் அனுப்ப உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து நிஷாந்த் அகர்வாலை 3 நாட்களில் காவலில் எடுக்க உத்தரபிரதேச பயங்கரவாத பிரிவுக்கு அனுமதி வழங்கியது.

    நேகா சர்மா மற்றும் பூஜா ராஜன் என்ற பெயர்களிலான பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த கணக்குகள் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இவை பாகிஸ்தான் உளவுத்துறையால் இயக்கப்பட்டு உள்ளது என சந்தேகிக்கிறோம் என விசாரணை பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆசைவார்த்தையில் சிக்கி உளவு பார்த்த ராணுவ வீரர் ஒருவர் செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பெண்கள் பெயரிலான போலியான பேஸ்புக் கணக்குகளை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு சோதனையிட்டது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் கணக்குகள் இந்தியாவின் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களுடன் தொடர்பு உள்ளது தொடர்பாக கண்காணித்தது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தூதரக முன்னாள் அதிகாரி மாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து 2010 வரை பணியாற்றியவர் மாதுரி குப்தா. 

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 22-4-2010 அன்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தியா தொடர்பான சில முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களாக அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

    ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் மாதுரி தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இவருக்கு எதிரான வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா(61) மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். 

    தண்டனை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில் மாதுரி குப்தாவுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிபதி சித்தார்த் சர்மா உத்தரவிட்டார்.  #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI 
    ×