என் மலர்tooltip icon

    இந்தியா

    ISI: பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இந்திய  சிம் கார்டுகளை அனுப்பி உதவிய ராஜஸ்தான் ஆசாமி கைது
    X

    ISI: பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இந்திய சிம் கார்டுகளை அனுப்பி உதவிய ராஜஸ்தான் ஆசாமி கைது

    • மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார்.
    • முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது.

    பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சார்பாக உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு கைது செய்தது.

    ராஜஸ்தானின் மேவாட் பகுதியில் உள்ள டீக் பகுதியில் காசிம் கைது செய்யப்பட்டார்.

    அதிகாரிகள் அளித்த தகவலின்படி, காசிம், ஆகஸ்ட் 2024 இல் ஒரு முறையும், மார்ச் 2025 இல் மீண்டும் ஒரு முறையும் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

    மொத்தம் 90 நாட்கள் அவர் அங்கு தங்கியிருந்தார். இந்த பயணத்தின்போது, அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முகவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடமிருந்து உளவுப் பயிற்சி பெற்றார்.

    மேலும் விசாரணையில் காசிம் இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.

    பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் மூலம் இந்தியர்களைத் தொடர்பு கொண்டு ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் முக்கியமான தகவல்களைச் சேகரிக்க ஏதுவாக இது அமைந்தது என்று போலீசார் தெரிவித்தனர்

    Next Story
    ×