search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home Appliances"

    • பலரும் இவற்றை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள்.
    • வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வழிவகுத்து இருக்கிறது.

    இல்லத்தரசிகளின் வேலையை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்த உதவுபவை வீட்டு உபயோகப் பொருட்கள். தேவைகளைப்பொறுத்து இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் இவற்றை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள். ஆனால் இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை வசதி பலரும் எளிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வழிவகுத்து இருக்கிறது.

    இதில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் நினைத்த நேரத்தில் பொருட்களை வாங்க உதவுவதுதான் இ.எம்.ஐ. கார்டு. அவ்வாறு இ.எம்.ஐ. கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில....

    பண்டிகை காலங்களில் எல்லா நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்குவார்கள். அவற்றால் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு அத்தியாவசியம் இல்லாத பொருட்களையும் இ.எம்.ஐ. கார்டு மூலம் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுபோன்ற தருணங்களில் கவனமாக இருந்து, தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

    இ.எம்.ஐ. கார்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும். உங்கள் 'கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இது இ.எம்.ஐ. கார்டுக்கான மதிப்பு மற்றும் உங்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடும்.

    இ.எம்.ஐ-கார்டு மூலம் வாங்கிய பொருட்களுக்கு அதிகமான அபராதத் தொகை விதிக்காமல், முன்சுட்டியே பணம் செலுத்துவதற்கான வசதி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதிக முன்பணம் செலுத்தினால் கடன் தொகை மற்றும் இ.எம்.ஐ. கட்டணம் குறையும். எனவே உங்களால் எவ்வளவு முன்பணம் செலுத்த முடியும் என்பதை முதலில் தீர்மாளியுங்கள்.

    அதன் பின்பு, அதற்கு ஏற்ற வகையில் இ.எம்.ஐ கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதே நல்லது. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப கடனை திருப்பி செலுத்தும் தவணை காலத்தை தீர்மானியுங்கள், நீண்ட கால தவணை அவகாசம் காலப்போக்கில் வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பை உண்டாக்கும். மூலம் உங்கள் பணம் விரயமாகும்.

    பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இ.எம்.ஐ சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து சிறந்ததை மட்டும் தேர்வு செய்யுங்கள். மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, அவற்றுக்கான உரிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமானது.

    எதிர்காலத்தில் பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெறுவதற்கு காப்பிட்டு திட்டம் உதவும். சில இ.எம்.ஐ. கார்டு திட்டங்களில் ஹிட்டன் காஸ்ட்' எனும் மறைமுகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை கவனமுடன் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்குவது நல்லது. பெரும்பாலான நிறுவனங்களில் வட்டி விகிதத்தை தவிர பிராசசிங் சார்ஜ்' எனும் செயலாக்க கட்டணமும் நிர்ணயிக்கப்படும்.

    இது வங்கி மற்றும் பண பரிவர்த்தனையைப் பொறுத்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும். எனவே நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகையை ஒப்பிட்டு பார்த்த பிறகே தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு பொருட்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள், இ.எம்.ஐ. திட்டங்களின் மூலம் அவற்றை வாங்கும் போது வழங்கப்படுவது இல்லை.

    உதாரணமாக இவ்வகை திட்டங்களின் மூலம் வாங்கும் டிவியின் விலை நேரடியாக சலுகை மூலம் வாங்கும் டிவியின் விலையை விட அதிகமாக இருக்கக்கூடும். எனவே இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • கண்காட்சியில் 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
    • கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த ஸ்மைலி ட்ரிப்ஸ் அண்ட் ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'ஸ்மைலி எக்ஸ்போ' என்ற பெயரில் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை கே.எம்.நிட் வேர் நிர்வாக இயக்குனர் கே.எம்.சுப்பிரமணியன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஸ்ரீசக்தி சினிமாஸ் நிறுவனர் சுப்பிரமணியம், கிட்ஸ் கிளப் நிறுவன தலைவர் மோகன் கார்த்திக் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    எம்.எஸ்.ஆர். ஆயில் மில்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், எம்.எஸ்.ஆர்.கிளினிக் டாக்டர் ராஜா, விருக்ஷம் பிரகனன்சி கேர் நிறுவனர் அனுபமா குமார் விஜயானந்த், லக்கி கேர்ள் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி, ஹே தயா ஆர்ட் கேலரி நிறுவனர் ரமா ராஜேஷ், ஸ்டைல் ஓஷன் மற்றும் லைம்லைட் நிறுவனர் வைஷ்ணவி, குயினோவா நிறுவனர் சாமு ஜெயஸ்ரீ, லைம்லைட் நிறுவனர்கள் குஷ்பு, ரேவதி, தீபா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். திறப்பு விழாவுக்கு வந்தவர்களை ஸ்மைலி ஈவண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அருண் வரவேற்றார்.

    கண்காட்சியில் பர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நகைகள், டெக்ஸ்டைல் பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கட்டிட பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

    சிறுவர்களுக்கான விளையாட்டு கூடங்கள், குடும்பத்தோடு உண்டு மகிழ உணவு கூடங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு வாடிக்கையாளர்களை குதுகலப்படுத்த விஜய் டி.வி. புகழ் அறந்தாங்கி நிஷா இன்றும் (வெள்ளிக்கிழமை), ராமர் நாளையும் (சனிக்கிழமை) கலந்து கொள்கிறார்கள். கண்காட்சி நேரத்தில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும், திறமையான வாடிக்கையாளரை தேர்வு செய்து எல்.ஈ.டி. டி.வி. இலவச பரிசாக வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள், பலகுரல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தினமும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கிறார்கள். ரோட்டரி உறுப்பினர்கள், பி.என்.ஐ. அமைப்பு உறுப்பினர்கள், ஜெ.சி.ஐ. உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.

    • கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும்.
    • போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு மற்றும் இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், பறக்கும்படை தனி தாசில்தார் முருகன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் (கோவை) நவீன் ஆகியோர், எலக்ட்ரிக்கல் கடைகள், ெஹல்மெட் கடைகள், குக்கர் கடைகள், வீட்டு உபயோக கடைகளில் ஆய்வு நடத்தினர்.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 25 கடைகளில், ஆய்வு நடத்தி, ஐ.எஸ்.ஐ., தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர். அத்துடன், வாடிக்கையாளருக்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கடைகளில் விற்கும் பொருட்களில், ஐ.எஸ்.ஐ., முத்திரை இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். போலியான ஐ.எஸ்.ஐ., முத்திரை செய்தும் விற்க வாய்ப்புள்ளதால், முழுமையாக சரிபார்க்க வேண்டும்.BIS- care என்ற செல்போன் ஆப்பை பதிவிறக்கம் செய்து, பொருளில் உள்ள ஐ.எஸ்.ஐ., நம்பரை பதிவு செய்தால், தயாரிப்பு நிறுவனம், தேதி, தரம் போன்ற அனைத்து விவரமும் கிடைக்கும்.இதுபோன்ற விவரம் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அது போலியான முத்திரை என கண்டறிந்து உரிய ரசீதுடன் புகார் செய்யலாம் எனஅதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×