search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "housewives"

    • பலரும் இவற்றை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள்.
    • வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வழிவகுத்து இருக்கிறது.

    இல்லத்தரசிகளின் வேலையை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்த உதவுபவை வீட்டு உபயோகப் பொருட்கள். தேவைகளைப்பொறுத்து இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் இவற்றை வாங்குவதை தள்ளிப்போடுவார்கள். ஆனால் இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை வசதி பலரும் எளிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வழிவகுத்து இருக்கிறது.

    இதில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் நினைத்த நேரத்தில் பொருட்களை வாங்க உதவுவதுதான் இ.எம்.ஐ. கார்டு. அவ்வாறு இ.எம்.ஐ. கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில....

    பண்டிகை காலங்களில் எல்லா நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வழங்குவார்கள். அவற்றால் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு அத்தியாவசியம் இல்லாத பொருட்களையும் இ.எம்.ஐ. கார்டு மூலம் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதுபோன்ற தருணங்களில் கவனமாக இருந்து, தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்.

    இ.எம்.ஐ. கார்டு திட்டத்தில் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும். உங்கள் 'கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் இது இ.எம்.ஐ. கார்டுக்கான மதிப்பு மற்றும் உங்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடும்.

    இ.எம்.ஐ-கார்டு மூலம் வாங்கிய பொருட்களுக்கு அதிகமான அபராதத் தொகை விதிக்காமல், முன்சுட்டியே பணம் செலுத்துவதற்கான வசதி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதிக முன்பணம் செலுத்தினால் கடன் தொகை மற்றும் இ.எம்.ஐ. கட்டணம் குறையும். எனவே உங்களால் எவ்வளவு முன்பணம் செலுத்த முடியும் என்பதை முதலில் தீர்மாளியுங்கள்.

    அதன் பின்பு, அதற்கு ஏற்ற வகையில் இ.எம்.ஐ கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதே நல்லது. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப கடனை திருப்பி செலுத்தும் தவணை காலத்தை தீர்மானியுங்கள், நீண்ட கால தவணை அவகாசம் காலப்போக்கில் வட்டி விகிதத்தை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பை உண்டாக்கும். மூலம் உங்கள் பணம் விரயமாகும்.

    பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இ.எம்.ஐ சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து சிறந்ததை மட்டும் தேர்வு செய்யுங்கள். மாதத் தவணையில் பொருட்கள் வாங்குவதற்கு முன்பு, அவற்றுக்கான உரிய காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியமானது.

    எதிர்காலத்தில் பொருட்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிவாரணம் பெறுவதற்கு காப்பிட்டு திட்டம் உதவும். சில இ.எம்.ஐ. கார்டு திட்டங்களில் ஹிட்டன் காஸ்ட்' எனும் மறைமுகமான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை கவனமுடன் தெரிந்துகொண்டு பொருட்களை வாங்குவது நல்லது. பெரும்பாலான நிறுவனங்களில் வட்டி விகிதத்தை தவிர பிராசசிங் சார்ஜ்' எனும் செயலாக்க கட்டணமும் நிர்ணயிக்கப்படும்.

    இது வங்கி மற்றும் பண பரிவர்த்தனையைப் பொறுத்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும். எனவே நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தொகையை ஒப்பிட்டு பார்த்த பிறகே தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு பொருட்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள், இ.எம்.ஐ. திட்டங்களின் மூலம் அவற்றை வாங்கும் போது வழங்கப்படுவது இல்லை.

    உதாரணமாக இவ்வகை திட்டங்களின் மூலம் வாங்கும் டிவியின் விலை நேரடியாக சலுகை மூலம் வாங்கும் டிவியின் விலையை விட அதிகமாக இருக்கக்கூடும். எனவே இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • பட்டுப்புடவைகளை அலமாரியில் மடித்தே வைத்திருப்போம்.
    • கிச்சனில் இரவில் சிங்க் பகுதியில் நிறைய கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமிக்கும்.

    வீட்டில் பெண்கள் தான் அதிகளவு வீட்டு வேலைகளை செய்கின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கக்கூடிய அற்புதமான குறிப்புகள். வாங்க பார்க்கலாம்....

    * ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீசர் பெட்டியில் ஆங்காங்கே ஐஸ்கட்டிகள் உறந்தபடி இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக ஃப்ரீசர் பெட்டியில் பொடி உப்புகளை லேசாக தூவினாற் போல் போட்டு வைத்தால் ஐஸ்கட்டி உருவாகாமல் இருக்கும்.

    * பட்டுப்புடவைகளை அலமாரியில் மடித்தே வைத்திருப்போம். அந்த மடிப்பு உள்ள பகுதிகள் நாளடைவில் கிழிந்துவிட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பட்டுப்புடவைகளை அப்படியே வைத்திருப்பதால் ஒரு நாற்றம் எடுக்கம். அதனை தடுப்பதற்காக ஒரு பேப்பரில் ஒரு ஸ்பூன் அரிசி மற்றும் 1/4 ஸ்பூன் ஜவ்வாது பொடி இவற்றை ஒன்றாக கலந்து பேப்பரை மடித்து புடவைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதனால் நாற்றம் எடுக்காது.

    * சிலருக்கு தலைக்கு குளித்துவிட்டு வந்த போது முடி வறண்டு போனது மாதிரி இருக்கும். எவ்வளவு தான் கண்டிஷனர் அல்லது சீரம் தேய்த்தாகும் வறண்டு காணப்படும் அதை தவிர்ப்பதற்காக நீங்கள் பயன்படுத்தும் சீப்பை எடுத்து ஒரு பிளேட்டை எடுத்து அதில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சீப்பை வைத்து எடுத்து அதனை குளித்துவிட்டு வந்த தலைமுடி காய்ந்தவுடன் அந்த சீப்பை பயன்படுத்தி தலையை சீவினால் முடிகொட்டுதல், முடி வறட்சியாக காணப்படுவதில் இருந்து தடுக்கலாம்.

    * நம்முடைய வீட்டில் உள்ள கிச்சனில் இரவில் சிங்க் பகுதியில் நிறைய கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமிக்கும். நாம் எவ்வளவுதான் கிச்சனை சுத்தமாக வைத்திருந்தாலும் சிங்க் வழியாக கரப்பான் பூச்சி தொல்லைகள் தான் இருக்கத்தான் செய்கிறது. அப்போது வெங்காய தோல் அல்லது எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சிங்க் பகுதிகளை இரவில் நன்றாக தேய்த்து விட்டாலும் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

    * நாம் தினமும் பயன்படுத்தும் மிக்சி ஜாரினை எவ்வளவு தான் சுத்தமாக கழுவி வைத்தாலும் அதில் சின்ன துகள்கள் அதில் ஒட்டி தான் இருக்கும். எனவே இதனை சுத்தமாக வைத்திருக்க மிக்சி ஜாரில் காய்ந்த எலுமிச்சை தோல் துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வாஷிங் லிக்யூட் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்சி ஜார் சுத்தமாக இருக்கும். இந்த கலவையை கீழே ஊற்றாமல் இதனை பாத்திரம் கழுவதற்கும் இந்த லிக்யூடை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    * குக்கரில் சிலநேரம் நாம் பருப்பு வேக வைக்கும்போதோ அல்லது சாதம் வைக்கும் போதோ வெளியே பொங்கி வழியும் இதனை தடுப்பதற்கு குக்கரில் ரப்பர் போடும் இடத்தில் சிறய பிரஷ் கொண்டு சிறிதளவு எண்ணெய் தடவி விட்டு குக்கரை மூடி அடுப்பில் வைத்தால் பொங்கி வெளியே வராது.

    * உங்களது வீட்டில் அதிக பல்லி தொந்தரவுகள் இருக்கிறதா? அப்படி இருந்தால் ஒரு சிறிய கிண்ணத்தில் வெங்காயத்தை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு மூடி டெட்டாயில் ஊற்றி கலந்து பல்லி வரும் இடங்களில் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஆங்காங்கே தெளித்து விட்டால் பல்லி தொந்தரவுகள் இருக்காது.

    * நாம் வீட்டில் சாமி படங்களுக்கு போடப்படும் பூக்களை வெளியே தூக்கி போட்டு விடுவோம். இனி அதனை தூக்கி எறியாமல் நாம் தினமும் பயன்படுத்தும் பூக்களை நிழலில் காயவைத்து மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு பிளேட்டில் கொட்டி அதில் 3 ஸ்பூன் சந்தனப்பொடி, ஒரு ஸ்பூன் பச்சைகற்பூரம், அடுத்து ஏதாவது ஊதுபத்தி, அதாவது ஊதுபத்தியின் மேல் உள்ள துண்டுகளை உதிர்த்து போட்டு அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக பிசறி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ரோஸ்வாட்டர் கொண்டு பிசைந்து முக்கோண வடிவில் செய்துகொள்ள வேண்டும். இதனை காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாம்பிராணிக்கு பதிலாக இதனை தினமும் பயன்படுத்தலாம்.

    * சிலருக்கு உடலி வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும் அவர்கள் சருவத்தில் உள்ள கெட்ட அழுக்கு வாடைகள் மற்றும் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட ஒரு காட்டன் துணியில் எலுமிச்சை தோல்கள் 2 துண்டு, வேப்பிலை ஒரு கைப்பிடி, காய்ந்த வேப்பிலையாக கூட இருக்கலாம். இதனை ஒன்றாக ஒரு காட்டன் துணியில் போட்டு அதனை நன்றாக கட்டி நாம் குளிக்கும் தண்ணீர் பக்கெட்டில் போட்டுவிட்டு 10 நிமிடம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் தேவையற்ற வாசனைகள் வராது.

    • 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது.
    • கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சேலம்:

    பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

    கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக் கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகைைய கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.

    இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சேலத்தில் ரூ.1190 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.990 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

    இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை)அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-

    சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கவுசல்யா (25): மின்சாரம், காய்கறிகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்ந்தி ருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

    சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் கலைமதி (30): அரசு இலவசமாக எந்த பொருளையும் தர வேண்டாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். அந்த வகையில் கியாஸ் விலையில் ரூ.200 குறைத் துள்ளது வரவேற்கதக்கது. இதேபோல் காய்கறி உள்ளிட்டவற்றின் விலையை யும் கட்டுப் படுத்த வேண்டும்.

    அம்மாபேட்டையை சேர்ந்த பெரியநாயகி (40): ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். குழந்தை களை படிக்க வைக்கவே சிரமப்பட்டு வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது தான். மேலும் ரூ.200 குறைத்தால் நன்றாக இருக்கும்.

    மத்திய அரசு எந்த இலவசமும் கொடுக்காமல் பொதுமக்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    ×