என் மலர்
நீங்கள் தேடியது "Hindu temple attack"
- குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
- கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது நேற்று முன் தினம் இரவு சுமார் 12:35 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 கையெறி குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக, இந்த கையெறி குண்டு வெடித்தபோது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லை.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியும் நூலிழையில் காயங்களின்றி உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. தாக்குதலின்போது அந்த மர்ம நபர்களின் ஒரு கையில் மத கொடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு கோவிலை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.
முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் தொடர்பு இருப்பதாக காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்களை ஐ.எஸ்.ஐ மூளைச்சலவை செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது என்று அவர் கூறினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன என்று தெரிவித்தார்.
- கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
- கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்.
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.
கையில் காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மதத் தளத்தில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனேடியருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் இந்து கோவில் தாக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இந்திய தூதர்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
- இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் நிற்கிறார்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்னர். காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த சம்பத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த சம்பத்தை விசாரித்து வந்த பீல் பகுதி போலீஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர்.
கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான எஸ்எஃப்ஜெ [சீக் ஃபார் ஜஸ்டீஸ்] இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இந்தர்ஜித் கோசல் என்று நபர் எஸ்எஃப்ஜெ இயக்க ஒருங்கிணைப்பாளர் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக மேடையின் படிகளில் விரிக்கப்பட்டிருக்கும் இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

- இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து.
- வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து நடவடிக்கை
கனடாவில் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோவில் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது.
இந்த நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டலால் பிராம்ப்டனில் உள்ள திரிவேணி கோவிலில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 17-ந்தேதி இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் உள்ள இந்துக் கோவில்களுக்கு வருவதை கனேடியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது மிகவும் வருத்தமளிக்கிறது.
திரிவேணி கோவிலுக்கு எதிராக பரப்பப்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும், கனேடிய இந்து சமூகம் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் போலீசாரை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இந்து கோவில்களில், வருகிற 16,17-ந்தேதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் அமைப்பு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக, கனடா எம்.பி., சந்தன் ஆர்யா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியிலுள்ள இந்துக் கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- இந்து கோவில் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே நேற்று வன்முறை வெடித்தது.
கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர்.
இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் லீசெஸ்டர்ஷையர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்துக் கோவில் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்த விவகாரம் பற்றி எடுத்துச் சென்றுள்ளோம். இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
லீசெஸ்டர் வன்முறை தொடர்பாக போலீசார் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.