என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Chandrasekhar"

    • முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
    • பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?

    முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.

    அதில், மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார்.

    அவர் பேசியதாவது, "பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்?

    காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளைப் பெற்றுள்ளது?

    காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்கள் என்ன சாதித்துள்ளனர்.

    பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?" என்று தெரிவித்தார். 

    • கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே. சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்தது.
    • சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.

    இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் கட்சியின் கவுன்சில் கூட்ட நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மற்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநில பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வான ராஜீவ் சந்திரசேகா், மத்திய பாஜக கூட்டணி அரசில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா்.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா் பணியாற்றி உள்ளார். கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 

     

    • வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
    • ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாக BLACK BOX ஆகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் EVM வாக்கு இயந்திரங்கள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவை எளிதில் ஹேக் செய்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது.

    எலான் மஸ்க்கின் கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழிநுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை. வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

    தற்போது இந்த பதிவுக்கு உடனே ரியாக்ட் செய்துள்ள எலான் மஸ்க், Anything can be hacked எதையும் ஹேக் செய்ய முடியும் என்று ரிப்லை செய்துள்ளார். இவ்வாறாக EVM விஷயம் பூதாகரமாக மாறிக்கொண்டிருக்கும் வேலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாக BLACK BOX ஆகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்ததக்கது. 

     

    • எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார்.
    • எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

    உலகப் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் EVM வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது என்றும் எனவே EVM முறையை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்றும் கூறியது உலக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைமுறையில் EVM குறித்த எலான் மஸ்கின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்த சமயத்தில் EVM முறையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ஆனால் EVM இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்றும் யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும் ஆரம்பம் முதலே வாதாடி வரும் ஆளும் பாஜக எலான் மஸ்கின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்திருந்தது. தகவல் முன்னாள் தொழில்நுட்பத்துறை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் EVM கள் பாதுகாப்பானது என்றும் வேண்டுமானால் உங்களுக்கு EVM இயந்திரங்களை எப்படி தயாரிக்கவேண்டும் என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்றும் எலான் மஸ்க் கருத்துக்கு பதிலளித்திருந்தார்.

    உடனே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'Anything can be hacked' எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார். இந்த விவகாரம் இப்படியாக புகைந்துகொண்டிருக்கும் வேளையில் ராஜீவ் சந்திரசேகர் ஒருபடி மேலே சென்று புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, டெஸ்லா கார்களையும் ஹேக் செய்ய முடியும். ஏன் கால்குலேட்டரையும், பிரட் டோஸ்ட் செய்யும் டோஸ்டரையும் கூட ஹேக் செய்ய முடியும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

     

     

     

    மேலும், ஹேக்கிங் என்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது. எலான் மஸ்கின் கருத்து தவறானது. போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட EVM கள் வேண்டுமானால் ஹேக் செய்யப்படலாம். எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இந்திய EVM தயாரிப்பு குறித்து அவருக்கு தெரியாது. அவை யாராலும் ஹேக் செய்யமுடியாத அதிநவீன சாதனங்கள் என்று தெரிவித்துள்ளார்.  

    ×