search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகையில், புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்- எம்.எல்.ஏ. கேள்விக்கு, அமைச்சர் பதில்
    X

    ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

    நாகையில், புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்- எம்.எல்.ஏ. கேள்விக்கு, அமைச்சர் பதில்

    • ரூ. 30 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
    • சட்டமன்றத்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் நாகூர் நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது.

    நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.

    இப்போது நாகப்பட்டி னத்திற்கு ஒரு புறநகர் பேருந்து நிலையம் அவசியமாகிறது. ஏற்கெனவே முதலமைச்சரிடம் 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்திருக்கிறோம்.

    30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    தஞ்சாவூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் நான் வலியுறுத்தி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.

    எனவே மிக மிக அவசியமான ஒரு கோரிக்கை.

    நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் போன்ற திருத்தலங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    அதை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதி களும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்ப டையில் தான் சட்டமன்ற த்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி, துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

    முதலமைச்சர் கேட்ட 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை நீங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள்.

    எனவே நிச்சயமாக இது முதல் - அமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இது நடக்கும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    Next Story
    ×