search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauldron coconut"

    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களது வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயனடையும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கூடுதலாக 6,600 மெட்ரிக் டன் அரவை கொப்பரை, 400 மெட்ரிக் டன் பந்து கொப்பரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய நவம்பா் 26-ந் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேங்காய் கொப்பரை கிலோ ரூ.108.60, பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் தமிழக அரசின் இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
    • கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி இந்த விற்பனை கூடங்களிலும் இதுவரை 9,844 விவசாயிகளிடமிருந்து ரூ.129 கோடி மதிப்பிலான 12,145 மெட்ரிக் டன் அரைவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த பொருட்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு முதன்மை பதப்படுத்தும் மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ஏலத்தில் 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வாணியம்பாடி, தேவத்தூா், அறவக்குறிச்சி, விளாத்திகுளம், முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 81 டன். பொள்ளாச்சி, வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூா், ஊத்துக்குளி, நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 13 வணிகா்கள் கொப்பரையை வாங்குவதற்காக வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 63.23 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    ×