search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regulated market"

    • 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.
    • 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அவிநாசி :

    சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முதன்முறையாக கொப்பரை கொள்முதல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு 1.61 கோடி ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் தற்போது நாபெட் வாயிலாக கொப்பரை கொள்முதல் நடந்துவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை என 6 மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு மொத்தம் 15 ஆயிரத்து 500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதில் அவிநாசி, குன்னத்தூர் சுற்றுவட்டார விவசாயி கள் பயன்பெறும் வகையில் அவிநாசி, சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை கொள்முதல் அனுமதிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் அங்கு 1,000 மெட்ரிக்., டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய மார்க்கெட்டிங் கமிட்டி அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கும் கொப்பரை கொள்முதல் நடந்து வருகிறது.கண்காணி ப்பாளர் சந்திரமோகன் கூறுகையில், கொப்பரை கொள்முதலில்160 விவசாயிகள்பதிவு செய்துள்ளனர். இதுவரை 106 விவசாயிகளிடம் இருந்து 2,965 மூட்டையில் 148 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    நாபெட் கொள்முதல் விலை அடிப்படையில் 1.61 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேவையான குடோன் வசதி இருப்பதால் விவசாயிகள் கொப்பரைக்கு அரசின் கொள்முதல் விலை பெறலாம் என்றார்.

    • 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம்போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.71 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நேற்று நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் பகுதியைச் சோ்ந்த 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 2, 123 கிலோ.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.82க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.71 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    • ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தபட்சமாக ரூ.68க்கும் ஏலம்போனது.

    காங்கேயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2 விவசாயிகள் 13 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 569 கிலோ. இதில், கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தப ட்சமாக ரூ.68க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.40 ஆயிரம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்."

    • வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
    • 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆடி பண்டிகையொட்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது, அடுத்த வாரம் 11ந் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் ஏலம் நடைபெறும் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் எள் வரத்து இல்லை.14,528 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 6,120 கிலோ.தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.25.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.15க்கும், சராசரியாக ரூ.24.15க்கும் விற்பனையானது.69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 2,298 கிலோ. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.84.30க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.30க்கும், சராசரியாக ரூ.80.80க்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தம் 99 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • காங்கயம் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 151 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.76 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம், சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 151 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை7,500 கிலோ.காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.50.89க்கும், சராசரியாக ரூ.78க்கும் விற்பனையானது.

    ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • ஏலத்தில் 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வாணியம்பாடி, தேவத்தூா், அறவக்குறிச்சி, விளாத்திகுளம், முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 81 டன். பொள்ளாச்சி, வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூா், ஊத்துக்குளி, நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 13 வணிகா்கள் கொப்பரையை வாங்குவதற்காக வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 63.23 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    ×