என் மலர்
நீங்கள் தேடியது "Aadi Festival"
- குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது.
- ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.
வருடத்தில் எல்லா மாதமும் சிறப்பு வாய்ந்தது தான் என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்பு பெற்றது. ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று தான் அழைப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஆடி என்பதே ஒரு தேவ மங்கையின் பெயர் தான். தேவ மங்கை ஒரு சாபத்தால் வேப்பமரமாக மாறி பின் அம்பிகைக்கு உகந்த விருக்ஷமாக மாறியவள். அதனால் தான் ஆடி மாதத்தையும் அம்மனையும் வேம்பையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள்.
நாளை ஆடி முதல் நாள். குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. இந்த பதிவில் ஆடி மாத முதல் நாள் வழிபாடு பற்றி பார்க்கலாம்.
ஆடி முதல் நாள் காலை எழுந்ததும் வாசல் தெளித்து மாக்கோலமிட்டு, வீடு, வாசல் துடைத்து, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட வேண்டும். பின்னர் ஒரு கலச சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலரால் அலங்கரித்து வைக்க வேண்டும். அதன் பின்னர் காமாட்சி அம்மன் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனதார வணங்க வேண்டும். ஆடி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்கள் முழுமையடைய வேண்டும். வேண்டிய வரங்களெல்லாம் கிடைக்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் எங்களோடு துணை நிற்க வேண்டும் தாயே ! என்றும் அந்த அம்பிகையின் அருள் வேண்டும் என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அம்பிகைக்கு நைவேத்தியமாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், பாயசம் என உங்களால் முடிந்ததை படைக்கலாம். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த அம்மன் மந்திரங்களை அல்லது பாடல்களை பாடலாம். எதுவுமே தெரியவில்லை என்றாலும் குறையில்லை. அந்த அன்னையின் அருள் வேண்டி மனதார வேண்டினாலே போதும். கேட்டதை மட்டுமல்ல நம் தேவையறிந்து கேட்காததையும் அன்னை நமக்கு அருளிடுவாள்.
- கோவில் வளாகத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறாது.
- பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் மிகச்சிறந்த சனி பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கோவில் மண்டபத்தில் புனித நீர் தெளித்து கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்கும். அதன் பின் சனீஸ்வரர்-நீலா தேவி திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா, சக்தி கரகம் எடுத்தல், கருப்பண்ணசாமிக்கு மதுபானம் படையல் வைத்தல், பக்தர்களுக்கு கறி விருந்து என 5 வாரங்களும் திருவிழா நடைபெறும்.
இந்த கோவிலை பரம்பரை அறங்காவலர் குழுவினர் நிர்வகித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது.
இதனால் கோவில் நிர்வாகத்தை மீண்டும் அறங்காவலர் குழுவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்தக்கூடாது என கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் கடந்த காலங்களில் ஆடித் திருவிழாவின் போது நடைபெற்ற பூஜைகள் எவ்வித மாற்றமும் இன்றி நடைபெறும். பக்தர்கள் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் பிறந்தது முதல் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
- கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.
- மயானக்கொள்ளை அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.
கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.
சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக வடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூதகணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக ஐதீகம்.

அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத்தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது அப்போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.
மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவு சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூறையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.
ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்றும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஐந்தாம் நாள் வாகனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகனத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் நடக்கிறது.
ஆறாம் நாள் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும் நடத்தப்படுகிறது.
எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரை வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாக வாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.
மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நினைவு கூறவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வதே இந்த 10 நாள் திருவிழாவாகும்.
இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
- திருவிழா 20-ந் தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடக்கிறது.
- 26-ந்தேதி மாற்றும் வைபவம் நடைபெறும்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவின் தொடக்கமாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
அன்றைய தினத்தில் இருந்து விழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
விழாவில் 3-ம் நாளான 22-ந் தேதி ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும், 7-ம் நாளான 26-ந் தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 13-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
- ஆடிப்பூர விழா 22-ந்தேதி நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர விழா தொடங்குகிறது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து வருகிற 13-ந்தேதி கொடியேற்றப்பட்டதும், தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய விழாவான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- 15-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
- 21-ந் தேதி ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
4-ம் திருவிழாவான 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது.
21-ந் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அன்று அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்பட்டு வயிற்றில் முளைகட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இதில் கலந்து கொண்டு அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைகட்டிய பாசிப்பயிரை வாங்கி சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
- 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும்.
- 19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடிப்பூர உற்சவம் வருகிற 12-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் காலையில் கொடியேற்றி 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக வருகிற 15-ந் தேதி நந்தி வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள், வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்று வழியாக கிரிவலம் செல்கிறார்.
19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது. உத்திர நட்சத்திர நாளான 23-ந்தேதி மூலவருக்கு முழு அபிஷேகத்துடன் வழிபாடு, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
- தேரோட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி நடக்கிறது.
- 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழா தனி சிறப்புடையது. இந்த ஆடி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
25-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந் தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
மேலும் 29-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந் தேதி காலையில் சூர்ணோத்சவம், இரவு புஷ்ப சப்பரமும் நடைபெறும். 31-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். பின்னர் காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேர் வடம் பிடித்தல், இரவு புஷ்ப பல்லக்கு, 2-ந் தேதி சப்தவர்ணம், புஷ்ப சப்பரம், 3-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இத்துடன் ஆடி பெருந்திருவிழா முடிவடையும்.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
- உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது. உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஆஸ்தானம் நடக்கிறது.
22-ந்தேதி ஆண்டாள் சாத்துமுறை, காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஆண்டாளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவிந்தராஜசாமி, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அலிபிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானமும், சிறப்புப்பூஜைகளும் நடத்தப்படுகிறது.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு ராம் நகர் குடியிருப்பு, கீதா மந்திரம், ஆர்.எஸ்.மாட வீதியில் உள்ள விக்னசாச்சாரியார் கோவில், சின்னஜீயர் மடம் வழியாக கோவிலுக்கு திரும்புகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
- 21-ந்தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
- 24-ந்தேதி ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் 13-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை 16 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவின் முதல் நாளான 13-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோவிலின் அம்பாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது.
இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் ரத வீதிகளில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 14-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு மேல் அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
17-ந்தேதி அன்று ஆடி அமாவாசை அன்று காலை 11 மணிக்கு ராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. 29-ந் தேதி அன்று சுவாமி அம்பாள் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- 20-ந்தேதி பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்தாண்டிற்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு விதமான பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 20-ந்தேதி(வியாழக்கிழமை) பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
- 15-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கிறது.
- 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 5.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
விழாவின் 4-ம் திருநாளான வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.
வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.






