என் மலர்
நீங்கள் தேடியது "ஆடித் திருவிழா"
- குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது.
- ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.
வருடத்தில் எல்லா மாதமும் சிறப்பு வாய்ந்தது தான் என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்பு பெற்றது. ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று தான் அழைப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஆடி என்பதே ஒரு தேவ மங்கையின் பெயர் தான். தேவ மங்கை ஒரு சாபத்தால் வேப்பமரமாக மாறி பின் அம்பிகைக்கு உகந்த விருக்ஷமாக மாறியவள். அதனால் தான் ஆடி மாதத்தையும் அம்மனையும் வேம்பையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள்.
நாளை ஆடி முதல் நாள். குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. இந்த பதிவில் ஆடி மாத முதல் நாள் வழிபாடு பற்றி பார்க்கலாம்.
ஆடி முதல் நாள் காலை எழுந்ததும் வாசல் தெளித்து மாக்கோலமிட்டு, வீடு, வாசல் துடைத்து, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட வேண்டும். பின்னர் ஒரு கலச சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலரால் அலங்கரித்து வைக்க வேண்டும். அதன் பின்னர் காமாட்சி அம்மன் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனதார வணங்க வேண்டும். ஆடி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்கள் முழுமையடைய வேண்டும். வேண்டிய வரங்களெல்லாம் கிடைக்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் எங்களோடு துணை நிற்க வேண்டும் தாயே ! என்றும் அந்த அம்பிகையின் அருள் வேண்டும் என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அம்பிகைக்கு நைவேத்தியமாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், பாயசம் என உங்களால் முடிந்ததை படைக்கலாம். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த அம்மன் மந்திரங்களை அல்லது பாடல்களை பாடலாம். எதுவுமே தெரியவில்லை என்றாலும் குறையில்லை. அந்த அன்னையின் அருள் வேண்டி மனதார வேண்டினாலே போதும். கேட்டதை மட்டுமல்ல நம் தேவையறிந்து கேட்காததையும் அன்னை நமக்கு அருளிடுவாள்.
- காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பயபக்தியுடன் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
- ஞாயிற்றுக்கிழமை காலை கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வாரத்தை முன்னிட்டு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், முளைப்பாரி ஊர்வலம் செல்லும் திருவிழா நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெறும்.
அவ்வகையில் இன்று ஆடி மாதம் முதல் வாரத்தை முன்னிட்டு கூழ் ஊற்றுதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவர் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் பயபக்தியுடன் முளைப்பாரியை சுமந்து கொண்டு கோவிலில் இருந்து சிவன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, எம்ஜிஆர் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலம் சென்று வந்தனர்.

இதன் பின்னர், முளைப்பாரிக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முளைப்பாரியை அல்லாரம் குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் கோடுவெளி குழந்தைவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை ஆடிப்பூர விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மாலை பதிபூஜையுடன் தீபாராதனை நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், மாலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு பாரத மாதா நாடக சபாவின் தெருக்கூத்து நிகழ்ச்சி ஆசிரியர் கோவர்தனன் தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாகரல் கிராம பொதுமக்களும், பக்தர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.






