என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
- கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் கரந்தை நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுகர் பொருள் வாணிபக் கழக
ஏ .ஐ. டி. யூ. சி. தொழி–லாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் கோவிந்த–ராஜன் தலைமை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், சங்க நிர்வாகிகள் தியாகராஜன், செல்வம், ஞானசேகரன், மேஸ்திரி ஆறுமுகம், சந்தான கிருஷ்ணன் மற்றும் சுமைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்