என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும்-துணை இயக்குனர் வேண்டுகோள்
- விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
- விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும்.
நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் விதைச்சான்றுத் துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும். விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
சாக்குப் பைகளில் தமிழ்நாடு அரசு விதைச்சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட ஆதார நிலை(வெள்ளைஅட்டை) அல்லது சான்றுநிலை(நீலநிற அட்டை)-ல் ஏதேனும் ஒன்றுடன் உற்பத்தியாளர் அட்டையும் சேர்த்து 2 அட்டைகள் பொருத்தப்பட்ட விதைகளை வாங்க வேண்டும்.
விவர அட்டைகளில் விதையின் ரகம், உற்பத்தியாளர் முகவரி விதைச்சான்றளிப்புத் துறையின் முத்திரை காணப்படும். காலக்கெடு தேதியைக் கவனித்து, காலக்கெடு முடிவடையாத, விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.
விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, முக்கியமாக அந்தப் பருவத்திற்கு ஏற்ற ரகம்ரானா எனக் கவனித்து வாங்க வேண்டும்.
விதை வாங்கும்போது விற்பனை ரசீது கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். விற்பனை ரசீதில், வாங்குபவர்கள் கண்டிப்பாக கையெழுத்திட்டு வாங்க வேண்டும்.
விதையின் கொள்கலன் கிழிபடாமல் நன்றாக தைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும். விதை வாங்கும் போது மேற்கூறிய கருத்துக்களை கவனித்தில் கொண்டால், தரமான விதை கொண்டு அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்