search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Price decline"

    • கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.
    • கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது.

    உடுமலை:

    பாலியஸ்டர் பட்டு புடவைகளை பெண்கள் விரும்பி வாங்குவதால் பட்டு புடவை விற்பனை குறைந்துள்ளது என்கின்றனர் பட்டு நூல் உற்பத்தியாளர்கள்.

    கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 640 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் சில வாரங்களாக, பட்டுக்கூடு விலை குறைந்துள்ளது.நேற்று முதல் தரமான கூடு ஒரு கிலோ 516 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் கிலோ 390 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் பட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இது குறித்து பட்டு நூல் உற்பத்தியாளர் ஹரி கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு முன், பட்டு நூல் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பட்டு நூல் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பட்டு நூல் கிலோ 4500 வரை விற்பனையானது. இப்போது கிலோ 3969 ரூபாயாக குறைந்துள்ளது.

    இதற்கு காரணம் இப்போது ஜவுளி கடைகளில் பாலியஸ்டர் பட்டு புடவைகள், 1000 ரூபாய்க்கு நல்ல கலரில் பளபளப்பாக விற்பனை செய்யப்படுகிறது. அதை பெண்கள் வாங்கி உடுத்த துவங்கி விட்டனர். அதனால் பட்டு சேலை வாங்குபவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பட்டு நூல் விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும் என்றார்.

    • மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
    • தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்த நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கி செல்வர்.

    விலை சரிந்தது

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக் கோழி 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனால் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் அதிகளவில் அசைவம் உணவு சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுக் கோழிகள் விலை சரிவடைந்தது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை விரும்புவதில்லை .அதனால் நேற்று நடந்த வார சந்தையில் நாட்டுக்கோழிகள் ் விலை சரிந்துள்ளது. தற்போது கோழி விலை குறைவாக உள்ளதால் தற்போது கோழிகளை உயிருடன் வாங்கி வைத்துக்கொண்டு புரட்டாசி முடிந்ததும் பயன்படுத்த அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர், என்றனர்.

    • மல்லிகை பூக்கள் விலை ‘திடீரென’ சரிந்தது.
    • திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு.

    மதுரை

    திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் மல்லிகை பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வது வழக்கம். அதன்படி முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில் மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கிலோ 4 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படும்.

    அதுபோல் திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு. தற்போது திருவிழா காலங்கள் முடிந்ததாலும், அதிக அளவில் முகூர்த் தங்கள் இல்லாததாலும் மதுரையில் மல்லிகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    மேலும் பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் மதுரை மாட்டுத்தா வணியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் மல்லிகை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மற்ற பூக்களான பிச்சி 200 ரூபாய்க்கும், முல்லை 250 ரூபாய்க்கும், சம்மங்கி 50 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 50 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாலும், விற்பனை மந்தமாக உள்ளதாலும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்னும் சில நாட்களில் முகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை வழக்கம்போல சீராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரத்தில் பருத்தி பஞ்சு விலை சரிவால் கிலோ ரூ.50க்கு விற்பனை விற்பனையானது.
    • போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் கண்மாய், ஊருணி பாசனத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. திருஉத்தர கோசமங்கை, சத்திரக்குடி, பரமக்குடி, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் அதிகளவில் இந்த ஆண்டு மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடக்கிறது. போதிய மழை இல்லாததால் சீசனில் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் வெடித்த பருத்தி தரம் குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

    மாவட்டத்தில் போதிய மழையின்றி பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் பருத்தி தரமின்றி உள்ளதுடன் பஞ்சு விலை சரிவடைந்துள்ளது. கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.50க்கு விலை போகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் கமிஷன் மண்டியில் விற்கப் படும் பஞ்சு மொத்த வியா பாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் அனுப்பி வைக்கப்படுகிறது. போதிய தண்ணீரின்றி பூக்கள் உதிர்ந்தும், காய்களின் பருமன் குறைந்தும் உள்ளது.

    இதனால் கடந்தாண்டு கிலோ ரூ.100-க்கு விற்ற பஞ்சு தற்போது ரூ.47 முதல் 50-க்கு விலை போகிறது. இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் மகசூல் குறைந்து எதிர்பார்த்த விலையும் கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திராட்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.
    • பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

    போரூர்:

    திராட்சை பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.

    கோயம்பேடு பழ மார்கெட்டுக்கு 4 வகையான திராட்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் இருந்து 10 முதல் 12 லாரிகளில் சுமார் 150டன் வரை திராட்சை பழங்கள் தினசரி குவிந்து வருகிறது. இதில் சோனா எனப்படும் விதையில்லா பச்சை திராட்சை அதிகளவில் குவிந்து வருவதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திராட்சை பழங்கள் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. பன்னீர் திராட்சை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல் விதையில்லாத கருப்பு திராட்சை (கல்பனா) ரூ.90, விதையில்லாத பச்சை திராட்சை (சோனா) ரூ.50, ஜூஸ் திராட்சை ரூ.50, ரெட் குளோப் திராட்சை ரூ.130 விற்பனை ஆகிறது. விலை குறைந்து உள்ளதல் வியாபாரிகள் அதிக அளவில் திராட்சைகள் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இதனால் மார்க்கெட்டில் திராட்சை விற்பனை களைகட்டி உள்ளது.

    • வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.
    • மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

     மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி பாசன நிலங்கள் மற்றும் பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால் இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது. வழக்கமாக உடுமலை பகுதிகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரை மக்காச்சோளம் அறுவடை சீசன் காலமாகும்.இப்பகுதிகளில் விளையும் மக்காச்சோளத்தை கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன.

    நடப்பாண்டு உடுமலை பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஒரு குவிண்டால் 2,250 முதல் 2340 வரை விற்று வந்தது. மகசூல் குறைந்தாலும் ஓரளவு விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் சிண்டிகேட் காரணமாக கடந்த 10 நாட்களாக தினமும் 10 ரூபாய், 20 ரூபாய் என குறைக்கப்பட்டு குவிண்டால் 1,150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    வெளி மாநில வரத்து வாய்ப்பில்லை. உள்ளூர் மக்காச்சோளம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய சூழலில் திடீர் விலை சரிவு காரணமாக விவசாயிகள் மக்காச்சோளம் அறுவடையை குறைத்து கொண்டதோடு அறுவடை செய்ய மக்காச்சோளத்தையும் விற்பனை செய்யாமல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க துவங்கினர்.இதனால் விற்பனைக்கு மக்காச்சோளம் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குவிண்டாலுக்கு, 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் அறுவடை துவங்கி இரண்டு மாதம் வரை நிலையான விலை காணப்பட்டது. இந்நிலையில் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்பட்டது.மக்காச்சோளத்திற்கு விதை, உரம், மருந்து என 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ள நிலையில் அறுவடைக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.வழக்கமாக ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 22 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் கூறுகையில், மக்காச்சோளம் விலை குறைவு காரணமாக, விற்பனைக்கு வரத்து குறைந்தது. இதனால் மீண்டும் விலை உயரத்துவங்கியுள்ளது என்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி போன்ற பல்வேறு கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.5.65 ஆக விற்பனையானது, படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டை ரூ.4.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்.இ.சி.சி. ரூ. 4.60 விலை நிர்ணயம் செய்துள்ள போதும், முட்டை வியாபாரிகள் ரூ.4-க்கு குறைவாக முட்டையை கொள்முதல் செய்கின்றனர். கோழி முட்டை விலை கடும் சரிவால் கடந்த 2 வாரங்களாக பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழிலில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    இதையொட்டி, எந்த சங்கத்தையும் சேராத கோழிப்பண்ணையாளர்களின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஏராளமான கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தொழிலின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முட்டை விற்பனை விலையில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையை விடக் குறைந்த விலையிலேயே முட்டைகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். முட்டை விலையில் மைனஸ் என்பதே இருக்க கூடாது. தீவன மூலப்பொருட்கள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முட்டை விலையை உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்.இ.சி.சி. மண்டல வாரியாக விலை நிர்ணயம் செய்யாமல் இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை நாமக்கல் பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும். கடும் நெருக்கடி நிலையில் கோழிப் பண்ணை தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் உள்ளதாக பல பண்ணையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
    • பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுப்படியாகாததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

     உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், செடி மற்றும் கொடி முறையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கிருந்து கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் கொள்முதல் செய்து லாரிகள் வாயிலாக கொண்டு செல்கின்றனர்.

    உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ. 450 வரை விற்ற நிலையில், தற்போது ரூ. 100 முதல் 120 வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

    தக்காளி சாகுபடிக்கு,நாற்று, உழவு, நடவு, உரம், மருந்து என ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பெரும்பாலான செடிகள் மற்றும் காய்கள் அழுகி, மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.தற்போது வியாபாரிகள் வருகை இல்லாததால் விலையும் குறைந்துள்ளது. பறிப்பு கூலி, போக்குவரத்து கட்டணம் கூட கட்டுப்படியாகாததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    வியாபாரிகள் கூறுகையில், சந்தைக்கு வழக்கத்தை விட தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. மழை, அழுகல் காரணமாக தூரமாக உள்ள மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை குறைந்தது என்றனர்

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் சின்னவெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு மேல் விற்று வந்தது.பருவமழை காரணமாக, பயிர் பாதித்ததோடு, அறுவடை செய்ய முடியாத சிக்கல் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் விவசாயிகள் அறுவடை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.மழை பாதிப்பு காரணமாக, அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை, உடனடியாக விற்று விடவும் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதனால் வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதோடு, விற்பனையும் பெருமளவு குறைந்துள்ளதால் வெங்காயம் விலை திடீர் சரிவை சந்தித்துள்ளது.தற்போது முதல் தர வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும் இரண்டாம் தர வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு திடீரென விலை சரிவை சந்தித்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இதுவரை பெய்த மழையை பயன்படுத்தி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சோளம், கம்பு, உளுந்து, கொள்ளு, தட்டை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளனர்.

    அவை இனிவரும் நாட்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும். தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் தக்காளி, வெங்காயம், கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அதிகரிக்கும் பட்சத்தில் தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்கள் பெரும்பகுதி அழுகிவிடும். குறைவான அளவே அவை சந்தைக்கு வரும். செடி வகைகளான கத்தரி, மிளகாய் உள்ளிட்டவற்றில் பூக்கள் உதிர்ந்து விடும். இதனால் விளைச்சல் குறையும். எனவே காய்கறிகளின் விலை கடுமையாக உயரும்.

    உற்பத்தி வீழ்ச்சி அடைவதால் விவசாயிகளும் பயனடைய முடியாது. நுகர்வோருக்கும் அது சுமையாக மாறும். மழை அதிகரிக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது பல்லாண்டு பயிரான தென்னை விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும்.ஐப்பசியில் துவங்கி கார்த்திகை மாதத்தில் மழை ஓய்வு பெறும். கார்த்திகை பட்டத்தில் வெங்காயம், நிலக்கடலை போன்றவற்றை சாகுபடி செய்வதற்காக விவசாயிகள் தற்போது இருந்தே நிலத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தண்ணீர் வசதியுள்ள நிலங்களில் விவசாயிகள் கொள்ளு, தட்டை, சணப்பை, தக்கை பூண்டு ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். கால்நடைகள் மேய்ச்சலுக்கு போக மீதம் உள்ளவற்றை அப்படியே மடக்கி உழுவதன் மூலம் அதிக அளவில் நிலத்துக்கு தேவையான சத்துக்களை, நிலத்தில் நிலை நிறுத்த முடியும்.இதனால்ரசாயன உர பயன்பாடு கணிசமாக குறையும். விளைச்சலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை பொழியும் போது, அதன் துவக்கத்தில் இடர்பாடுகளை சந்தித்தாலும், அது ஒரு வரமாக அமையும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    • இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தைகளில் வாரம் தோறும் முருங்கைக்காய் சந்தை நடைபெறுவது வழக்கம். மூலனூர், கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தை மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்கிறார்கள்.

    பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது வட மாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர். இதனால் மூலனூர் பகுதியில் வரத்து அதிகமானதால் இந்த வாரம் முருங்கை விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.37-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கை இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் மரம், செடி முருங்கை, கருமுறுங்கை என அனைத்து முருங்கைகளும் இதே விலை நிலவரத்தில் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×